கந்தல் கோவணம்!
வெற்றி தோல்வி!
நடந்து முடிந்த உள்ளூராச்சி மன்ற தேர்தலில் தமிழர் தரப்பு வெற்றி அடைய போகுதா தோல்வி அடைய போகுதா என்பது முக்கியம் அல்ல, இது சிங்களவனும் , சிங்கள இராணுவமும் சேர்ந்து நடத்தும் தேர்தல். இதில தமிழர் தரப்பு வென்றால் என்ன தோற்றால் என்ன, என்ன நடந்தாலும் சிங்களம் சங்கிலியன் சிலைகளையும் , பண்டார வன்னியன் சிலைகளையும் அழித்துக்கொண்டே தான் இருக்கும் அதில் மாற்று கருத்துக்கு இடமேதும் இல்லை. கடத்தல்கள் , கொலைகள் பாலியல் வன்முறைகள் நடந்தவண்ணமே தான் இருக்கும், ஒட்டுக்குழுக்களும், ஓட்டாக்குளுக்களும் வலம் வந்தவண்ணமே தான் இருப்பார்கள் . இருப்பினும் வெற்றி செய்தி தமிழர் தரப்பிற்கு மகிழ்ச்சிதான்.
இத்தேர்தலில் வென்று எதை நம்மால் சாதிக்க முடியும்? நகரத்திலையோ, கிராமத்திலையோ கழிவறைய கட்டுவதானாலும் சரி சுத்தப்படுத்துவதானாலும் சரி புத்தனின் ஆசி பெற வேணும். இதன் மூலம் ஏதேனும் சம வாய்ப்பையோ , இல்ல சம சம உரிமைகளையோ சிங்களம் தந்துவிட போகிறதா? இல்லவே இல்லையே போதாததுக்கு ஒன்றே ஒன்று செய்யலாம் ? சிங்களத்தின் சதி திட்ட விகிதாசார தேர்தல் முறைப்படி சொற்ப வாக்கு வித்தியாசத்தில் , ஒரு சில உறுப்பினர்களை அதிகமாக பெற்று, கள்ள வாக்குகள், காடையர்கள், குண்டர்கள், இதெயெல்லாம் தாண்டி உலகத்துக்கு "நாம் தமிழர்" என்பதனை நிரூபிக்கலாம். அதைவிட வேறெதுவும் நடக்க போறது இல்லை.
யாருக்கு இலாபம்?
இந்த தேர்தல் மூலம் சிங்களத்திற்கே மிக அனுகூலமான நன்மைகள் நடந்தேற போகின்றன!
உலகத்துக்கு தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றாக இருக்குறோம் என்று காட்ட இந்த தேர்தலை பயன் படுத்தலாம்
நாட்டில எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை என்பதை காண்பிக்கலாம்
அடக்குமுறை மூலம் சில வெற்றிகளை பெற்று தமிழர்களே சிங்கள கட்ச்சிகளை ஏற்றுகொள்கிறார்கள் என்பதனை கான்பிக்காம்
எந்தவிதமான தீர்வு திட்டமோ , அதிகார பகிர்வோ தேவை இல்லை நிரூபிக்கலாம்.
மொத்தத்தில ஒரு தேர்தல ஒரு இனபடுகொலை அரசு நடத்தி சில வெற்றிகளை பெற்றால் இந்த உலக யனநாயக பயங்கரவாத நாடுகள் , அந்த நாட்டில எந்த பிரச்சினையும் இல்லை என்பதனை ஏற்று கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். அகவே இந்த தேர்தல் நமக்கு ஆப்பே தவிர வேறொன்றும் இல்லை. சரி பாடையை தூக்கி விட்டார்கள் சுடலை வரை கொண்டு செல்லட்டும்.
கூட்டமைப்பு, ராசபக்சே பேச்சு?
ஏன் நாம் சிங்களத்துடன் பேச வேண்டும்? 60 ஆண்டுகளுக்கு மேலாக சிங்களத்துடன் பேசியாகிவிட்டது, ஐந்து நூறு ஆயிரம் மக்களையும், மாவீரர்களையும் வித்தாக கொடுத்தாகி விட்டது , எந்த மனித குலமோ, உயிரினமோ கண்டிராத பேரழிவை, கொடூரமான, சகிக்க முடியாத கொடுமைகளை சிங்களமும் , இந்திதியாவும் நமக்கு ஏற்படுத்தி விட்டன.
இப்படி கொடுரமானவர்களுடன் ஏன் பேச வேண்டும்? இவர்கள் என்னத்தை தந்து கிழிக்க போகிறார்கள்? இப்படியே இவர்களுடன் பேசி பேசி அறுபதாண்டு காலம் ஓடி விட்டன , அதில் ராசா பக்ச ஆனாலும் சரி , ரணில் ஆனாலும் சரி தமிழர் தரப்புக்கு எந்த விதமான எலும்பு துண்டை போடவும் தயாராக இல்லை. இப்படியே போனால் பல அறுபதான்டுகளை கடக்க வேண்டி இருக்கும். சிங்களம் என்றைக்குமே மாறாதது, நாம தான் சுக்கிரீவன் தொடக்கம் கருணாநிதிவரை துரோகிகளாகி தூள் கிளப்புறம். ஆனா படியால் இந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலத்தி இருப்பதே மிக மிக நல்லது.
காந்தியின் கோவணம்!!!!!!!!!!
இந்திரா யீ , ராசீவ் யீ சோனியா யீ வரை இந்த கோவணத்தை கட்டி கட்டி அவுதாச்சு, அனா எவராவது அத துவைப்பார் இல்ல . 1987 ராசீவ் யீ இதில ஒரு துண்ட கிழிச்சு ஜே அர் இற்கு கட்டிவிட , அத ராசபக்ச அவுத்து இப்ப எனக்கு அளவில்லா இந்த கோவணம் பழசு மணக்குது வேண்டாம் எண்டுறான், எல்லாரும் கிழிச்சாச்சு மீதமுள்ள கோவணம் நமக்கு சரிப்பட்டு வராது எண்டு தமிழர் தரப்பு நாமள் சொல்லுறம் . 2009 இல் சோனியா யீ இந்த துண்டில் ஒருதுண்ட கிழிச்சு கருணாநிதிக்கு வாயுக்க திணிச்சி வாய அடைச்சத கேள்வி! இடைக்கிட சிவசங்கர் மேனன், நாராயணன், நருபமா பாதிய பாதி பாதியா கிழிச்சு கட்டிக்கொண்டு டெல்லி யும் கொழும்புமா பரந்த்தொண்டு திரியுறாங்கள் அதிண்ட மனம் தாங்காமல் பாதி தமிழன் செத்தே போயிட்டான். இன்னும் இந்தியா காரன் இந்த கோவணத்த கட்டி கிட்டு பரப்பனாக இருந்தால் மீதமுள்ள தமிழனும் செத்தே போயிடுவான் மணம் தாங்க முடியாமல். மொத்தத்தில வேட்டியோட திரிஞ்ச தமிழன இந்தியாக்காரன் கொவனமும் இல்லாமல் ஆக்கிட்டான் அம்புட்டு பெருமைக்கு உரியவன் அவன்தான் அதுதான் உண்மை.
மீண்டும் இந்த கந்தல் கோவணத்த இந்தியகாரன் கொண்டு திரியுறான் தமிழர் தரப்பிற்கு கட்டிவிட இதை தமிழர் தரப்பு ஏற்று கொண்டால் மீண்டும் 1000 ஆண்டுகள் கந்தல் , கட்டமுடியாத கோவணத்தோட . இல்ல அம்மணமா தான் தமிழன் திரிய வேண்டி இருக்கும், ஆனபடியால் இதை தீயிட்டு கொளுத்துவதே நல்லது, அதை விடுத்து வல்லாதிக்க இந்திய கொலைகாரர்களுக்கு அடிபணிந்தது மீண்டும் ஒரு வரலாற்று தவறை தமிழர் தரப்பு செய்ய கூட்டாது என்பதே தமிழர் கனவு.
சிங்களத்தின் சூழ்ச்சி?
எந்த சிங்கள கட்ச்சிக்கோ , இல்ல சிங்கள மக்களுக்கோ தமிழர் தரப்பு உரிமையை விட்டு கொடுக்க எண்ணமில்லை உது தான் அடிப்படை உண்மை, இப்ப சிங்களம் இனப்படுகொலையில மாட்டி கொண்டு தன்ன காப்பாத்த யார் வருவார் என்று நடு நடுங்குகிறது , அனால் முழு சிங்கள தேசமும் ஒன்னாக எதிர்கொள்ள தயாராகி நிக்குறது, அனால் நம்ம ச்க்கிரீவன் வளிவந்த கருணா, டக்ளச்சு சிங்கள கொலை காரர்களை பல்லக்கில தூக்குராணுக . இந்த காந்தி நாட்டு பயங்கர வாதிகளும் கொலை நடுங்குராணுங்கள் , எங்க ராசபக்கச எல்லா தமிழ் இனத்தை அழிக்க சொல்லி குடுத்த தகவல்கள, இராணுவ உதவிகள மற்றும் எல்லா இரகசித்தையும் வெளியிட்டு விடுவானே?, சனல் 4 மாதிரி , டெல்லி 4 என்று தயாரிச்சு ராசா பக்ச வெளிய்ட்ட்டு விடுவானோ? , நாம என்ன பண்ணலாம்?, நம்ம அகிம்சை காந்திண்ட கோவணமும் உலகலவில கிழிச்சு போடுமே, நாற வெளிக்குட்டுடுமே என்னு கலங்குறான். .
அப்படி எதுகும் குடுக்காத சிங்களம் நின்மதிய இருக்க முடியாது அதனால புத்தனும் காந்தியும் சேர்ந்து ஆத்தாக் கொடுமைக்கு அந்த 1987 ஆம் ஆண்டு ராசீவ் கோவணத்த திருப்ப தமிழனுக்கு கட்டிவிட முயற்சிக்கலாம் , அதான் இப்ப இருந்தே பேசுறான் 13 ஆவது திருத்த சட்டம் திருத்த சட்டம் என்னு, அந்த கொதாரில ஒண்ணுமே இல்ல , இருந்தாப்போல அதற்கும் மேல எண்டுறன் அதற்கும் மேல 14 தான். அது தமிழர் நிலங்கள வடக்கு, கிழக்கு என கூறுபோட்டு , நம்மள பிரிக்குறது இதுதான் முதல் சதி., எந்நேரத்திலும் மாநில ஆட்சி கலைக்க படுமாம் அந்த காந்திண்ட ஆலோசன. தமிழனுக்கும் புத்தனுக்கும் நடுவில தரகரா வந்து தானே கையொப்பம் இட்டவன் இந்த முட்டாள் காந்தி. அப்ப இவன எப்படி இன்னும் நம்புறது ?, அதனால் தான் அது வேண்டாம் என்னுதானே காந்திய பயங்கரவாதிகளோட மோதினோம், தன்னுடைய ஊழலை மறைக்க ராசீவ் இவளவு படு கொலைகளையும் புரிந்தானே படுபாவி (அதான் தலை சிதறி சாவானான்). இறுதியா 100000 அப்பாவி மக்களை கொண்ணு காந்தி தான் உலகத்திலேயே அகிம்சா ( கொலைகார ) மூர்த்தி எண்டு காட்டி புட்டான் , இடக்குட அது உள்ள நாட்டு பிடச்சின, உள்ள நாட்டு பிடச்சின என்று பீலா வேற. சுமசும், பகவத் சிங்கும் நாட்டுக்காக போராடிய மாவீரர்கள், நாமள் எல்லாம் பயங்கர வாதிகள், இந்தியா காரண்ட அளப்பய கேட்டால் நச்ச குடுச்சி செத்திடலாம்.
அவசரமும் அவசியமும் (தமிழ் கூட்டமைப்பு)
இனி ஒண்ணுமே செய்ய முடியாது, அதனால தருவதை தரட்டும் என்று எண்ணி தமிழர் தரப்பு சிங்களத்திடம் பேச்சுவார்த்தை என்னும் குழினுள் விழுந்து விட கூடாது, சிங்களம் ஆத்தாக் கொடுமைக்கு இப்படியான தீர்வு திட்டங்களை காந்தி உடன் சேர்ந்து திணிக்க பாக்குறது. இதி சரியாக புரிந்து கொண்ண்டு இப்பேச்சு வர்த்தியை புறக்கணிக்க வேண்டும், புத்தனுடன் நாம் இனி பேச வேண்டிய அவசியம் இல்லை, தமிழ் ஈழ பிரச்சினை என்பது தற்போது உலகளாவிய ரீதியில் முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது ., அதனால் சிங்கள இந்திய சதி வலைக்குள் நாம் விளுவோமானால் மீண்டும் 1000 வருடங்களுக்கு நாம் அடிமைப்பட்டு கிடக்க நேரிடும் , இன்று உலகம் நம்ம பக்கம் உள்ளது இதை சரியாக பயன் படுத்தி கொள்ள வேண்டும்,அப்படியானால் என்ன பன்னலா.இந்த பேச்சு வார்த்தையில் இருந்தது தமிழர் தரப்பு விலக வேண்ண்டும். இதுதான் இந்த விடுதலை போராட்டத்துக்காக இன்னுயிரை கொடுத்த மாவீரர்களுக்கும், மக்களுக்கும் கூட்டமைப்பு செய்யும் முதல் கடமையாக இருக்கும்.
சில கோரிக்கைகளை முன்னுறுத்தி
அப்படி விலகாமல் பேசுவதானால் சில கோரிக்கைகளை முன்னுறுத்தி புத்தனுடன் பேசலாம் அதாவதுய் இன்று உலகம் நமது பக்கம் இருப்பதை பயன் படுத்தி
நாம் 50 /50 ஐபதுக்கு ஐம்பது என்ற கோரிக்கையை முன் வைத்து பேச வேண்டும் அதற்க்கு சிங்களம் ஒத்து வராத விடத்து
ஒன்று பட்ட சிறி லங்காவிற்க்குள் குப்பை கொட்டுவதா இல்ல தனித்து பிரிந்து செல்வதா என்பதனை, எமது தலைவிதியை தீர்மானிக்க தமிழ் மக்களிடம் அதாவது வடக்கு கிழக்கு , புலம் பெயர் தமிழரிடம் உலக பார்வையுடன் தென்
சூடானில் நடந்ததை போன்ற................
வாக்கெடுப்பை நடத்த உலக நாடுகளிடம் , ஐ நா சபையிடம், ( பாண் கீ மூன் இருக்கும்வர அது முடியாது , ஏன்னா அவரு சோனியா யி சம்பந்தி அல்ல வா!?), கோரலாம்.
அதுக்கும் முடியாவிடத்து நம்மை நாமே தனி நாடாக பிரகடன படித்தி கொள்ள வேண்டியதுதான்.
நமக்கு நீண்ட நாளா ஒரு கேள்வி மனச குடையிறது, அது என்ன சிறி லங்காவின் அனைத்து மக்களும் ஏற்று கொள்ள கூடிய தீர்வை சிறி லங்கா அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று , இந்த காந்திய பயங்கரவாதிகளும் சில சிறி லங்கா நடப்பு நாடுகளும் ஊளை இடுகின்றன, வீனா போன பய புள்ளகளா , தமிழ் மக்களுக்கு தான் பிரச்சன , அப்புறம் ஏன் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வை எட்ட வேண்டும்? , அவர்கள் விரும்பிற தீர்வைதானே அவர்களுக்கு வழங்க வேண்டும் , அனைத்து மக்களும் விருப்பபடுற தீர்வென்றால் சிங்கள பயங்கர வாதிகள் விரும்ப மாட்டார்கள் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க, அப்புறம் எப்படி தீர்வை வைக்குறது? இந்த காந்திய பயங்கர வாதிகளின் சூழ்ச்சி பட்டு கேவலமானதும் கொடுமையானதும் அப்பா.
மீண்டும் ஒரு வரலாற்று தவறை.................... !
மீண்டும் ஒரு வரலாற்று தவறை தமிழன் செய்வானே அனால் அது இன்னும் பல நூறு ஆண்டுக்ளளுக்கு மேலாக தமிழ் இனத்தை அழிவு பாதிக்கும் , அடிமை நிலைக்கும் இட்டு செல்லும். அதாவது
அன்று
சுந்தரலிங்கம் ஒரு கையெழுத்தினை இட்டதினால் நாம் இன்று 1000 ஆண்டு அடிமை தனத்தில் இருந்து மீளவில்லை, யி.யி பொன்னம்பலம் ஒரே ஒரு வாக்கை இட்டு நமது 500000 மக்களை எதிலிகலாக்கிய , நிலை மீண்டும் நமை வந்தடைய கூடாது
இன்று
மீண்டும் சம்பந்தன்( சுந்தரலிங் )களும் , டக்லச் (பொன்னம்பலங்)களும் செய்யம் தவறினால் 100 ஆண்டுகள் சென்றபின் எனது அடுத்த தலைமுறை ............
"நாடுகள் தோறும் நாம் அகதியாய் அலைந்தோம், கேட்ப்பார் இல்லாமல் நாம் ஊர் ஊராய் திரிந்தோம் "
என்ற நிலை தடற கூடாது என்பதே தமிழ் இனத்தின் அவா , அதனால் அவசர படாமல் சரியான சந்தர்ப்பங்களை பயன் படுத்து, தனிச்சைக்கான முடிபுகளை எடுக்காது, உலக தமிழருடனும் , புலம் பெயர் தமிழருடனும் ,தமிழ் ஈழ தமிழருடனும் மற்றும் நமக்கு ஆதரவான அமைப்புகளுடனும், நாடுகளுடனும் அகல்ந்தலோசித்து தமிழ் கூட்டமைப்போ, வேறு எந்த தரப்பாக இருந்தாலும் சரி , மிக சரியான அவதானமான முடிபை எடுப்பது சாலச் சிறந்த்துது.
இல்லை!?
காந்தியம் என்னதும் பயங்கரவாதிகளும், இந்திய என்னும் உலக பயங்கர வாத நாடும் அழிய இன்னும் 500 ஆண்டுகள் ஆகலாம், அதுவரை தமிழ் இனம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் . இல்லை தமிழ் இனமே அழிவை நோக்கி முழுமையாக நகர்ந்திருக்கும்.
இன்று நாம் நினைத்தால் ஏன்
துனுசியாவாகவும்
எகிப்த்தாகவும்
லிபியாவாகவும் மாற முடியாது ?
தவற விடுவோமானால் தமிழன் வாழ்வு "கந்தல் கோவணம்" தான் மீண்டும் ஒரு பிரபாகரன் தோன்ற நூறு ஆண்டுகள் ஆகலாம்.
வணக்கம்
நன்றி
ராவணன்