<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4778918875738452370</id><updated>2012-02-16T17:52:46.904-08:00</updated><category term='அருளினியன்-'/><title type='text'>ராவணா</title><subtitle type='html'>முதல் குடி தமிழ் குடி</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://raavanaa.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://raavanaa.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ராவணா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>25</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4778918875738452370.post-744338854114246848</id><published>2011-12-05T21:20:00.001-08:00</published><updated>2011-12-05T21:20:37.337-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;b&gt;அடிமைக்கு விடுதலை நாடாக்கு!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;b&gt;காசி ஆனந்தனின் திரைப்பாடல்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;        இலங்கை, மட்டக்களப்பிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள தன்னுடைய அழகான கிராமத்தில் ஒரு சிட்டுக்குருவியைப் போல் சுதந்திரமாக பறந்து திரிந்த 13 வய்து சிறுமி &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;Y.புனிதவதி. அக்குழந்தை போரின் பெயரால் எப்படி சீரழிக்கப்பட்டாள் என்பதை விவரிக்கிறது “உச்சிதனை முகர்ந்தால்”.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;a href="http://www.nakkheeran.in/Users/frmGalleryList.aspx?GV=911&amp;amp;GSS=3" target="_self"&gt;&lt;img align="middle" hspace="4" src="http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/ntalkies/ucithanai1.jpg" vspace="4" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;புனிதவதி எந்த தேவதையாலும் ஆசிர்வதிக்கபடவில்லை. அவள் எல்லா சாத்தான்களாலும் சபிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு நேர்ந்தது உலகில் எந்த குழந்தைக்கும் நேரக் &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;கூடாது. 2009 மார்ச் 1-ம் தேதி புனிதவதி என்கிற அந்த புனித நதியின் வாழ்க்கை திசை திருப்பப்படுகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;img src="http://www.nakkheeran.in/AllImages/Gallerys/18447_1.jpg" /&gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;அதே ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி வரை அந்தகுழந்தைக்கு &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;நேரும் சோதனைகளை வார்த்தைகளால் எடுத்து சொல்லிவிட முடியாது.  எனினும் தனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே மகிழ்ச்சியை சுமந்து வலம் வரும் &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;அந்த குட்டி தேவதையை நேசிக்கிற மனிதர்கள், அவள் வாழ்க்கை பயணம் முழுவதும் அவளை தொடர்ந்து வருகிறார்கள். அந்த மனிதநேயம் தன் இறைவன் இருப்பை &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;உறுதி செய்கிறது. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் - அந்த புனித நதியின் பயணம் தான் உச்சிதனை முகர்ந்தால் என்று உணர்ச்சி பொங்க நம்மிடம் பகிர்ந்து &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;கொண்டார் இப்படத்தின் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;புனிதவதியாக சிறுமி நீநிகா, சத்யராஜ், நாசர், சீமான், சங்கீதா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;எக்காரணம் கொண்டும் நான் சினிமாவில் பாட்டெழுத மாட்டேன் என்று உறுதியோடு இருந்த உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இப்படத்தில் பாடல்கள் எழுதி உள்ளார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;அரசியல் விமர்சகராகவும் சினிமாவின் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தும் தமிழருவி மணியன் இப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மைனா படத்தின் மூலம் இசையில் தனக்கான முத்திரையை பதித்த டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;---------------------------------------------------------&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;b&gt;படம் - உச்சிதனை முகர்ந்தால்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;b&gt;பாடலாசிரியர் - காசி ஆனந்தன்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இருப்பாய் தமிழா நெருப்பா... நீ!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இழிவாய் கிடக்க செருப்பா... நீ!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ஒரு தீபம் அணையும் முன்னே துடிக்கிறதே...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;துடித்து துடித்து உடல் சிதைகிறதே...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="color: lemonchiffon;"&gt;எம் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள்&lt;/span&gt; - (படத்தில் நீக்கப்பட்ட வரி) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="color: lemonchiffon;"&gt;அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்!&lt;/span&gt; - (படத்தில் நீக்கப்பட்ட வரி) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;எரிமலை தனியுமா... தண்ணீரில்! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;கடல் அலை கரையுமா... கண்ணீரில்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;முழங்கிடும் சங்கே முழங்காயோ   &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;விலங்குகள் உடைக்க பிறந்தாயோ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;அடிமையாய் வாழும் நிலம் ஒன்று&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;விடியலைக் காணும் களம் இன்று&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;வெட்டவெளியோ வீடானது... &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பட்டினியோ உணவானது...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;போராடு நீ வீரோடு!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மின்னலின் தொடர்ச்சியே... இடியாகும்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இன்னலின் தொடர்ச்சியே... விடிவாகும்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;கொந்தளித்து அறம் வெடிக்காதோ &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;கொடியவர் மூச்சை முடிக்காதோ&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ஆயிரம் அலைகளை தோளாக்கு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="color: lemonchiffon;"&gt;அடிமைக்கு விடுதலை நாடாக்கு &lt;/span&gt;(படத்தில் நீக்கப்பட்ட வரி) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மாந்தர் உயிரோ நிலையற்றது...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மானம்தானடா நிகரற்றது...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;போராடு நீ வீரோடு!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4778918875738452370-744338854114246848?l=raavanaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/744338854114246848'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/744338854114246848'/><link rel='alternate' type='text/html' href='http://raavanaa.blogspot.com/2011/12/12.html' title=''/><author><name>ராவணா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4778918875738452370.post-146567694808116856</id><published>2011-09-21T22:13:00.000-07:00</published><updated>2011-09-21T22:13:46.077-07:00</updated><title type='text'>புத்தர் சிரித்தார்…..மாற்றான்  தோட்டத்து  மலர்  (பாமரன்) , நீங்களும் படியுங்களே</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-zFTCUpZRo9E/TnrEBZqiwLI/AAAAAAAAAEM/RmhZAivkDxQ/s1600/buddha1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-zFTCUpZRo9E/TnrEBZqiwLI/AAAAAAAAAEM/RmhZAivkDxQ/s320/buddha1.jpg" width="213" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு மற்றொரு புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது  கூடங்குள மக்களது வாழ்க்கையில். 90 களில் இம்மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்த அநேகம் பேர் ஓசையின்றி காணாமல் போனார்கள். (அதில் நானும் ஒருவன்).&lt;br /&gt;தமிழ்ச் சமூகத்திற்குத்தான் எண்ணற்ற பிரச்னைகள் இருக்கின்றனவே…. சமூக நீதி, சாதீயம், ஈழம் என…… அதில் ஏதோ ஒன்றில் ஒன்றிப்போயிருக்கலாம் நம்மவர்கள். அவற்றைப் போலவே இன்னமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது கூடன்குள மக்களது அவலமும்.&lt;br /&gt;தலித் மக்கள் மீதான பரமக்குடி படுகொலைகள் எப்படி இன்னமும் பலரது கேளாச் செவிகளை எட்டவில்லையோ…. அப்படி கூடங்குள மக்களது கூக்குரலும் தமிழகத்தின் பிற பகுதி மக்களது மனதை உலுக்கவில்லை.&lt;br /&gt;1986-1987 வாக்கில் ”வேண்டாம் மரணதண்டனை” என தமிழகம் முழுக்க கருத்தரங்கம்…. கையெழுத்து இயக்கம்….. பள்ளி, கல்லூரிகளின் வகுப்பறைகளில் நுழைந்து பரப்புரைகள்….. என நமது தோழர்கள் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்(சர்வதேச பொது மன்னிப்பு இயக்கம்) வாயிலாக செயல்பட்டபோது ஏறிட்டும் பார்க்கவில்லை எண்ணற்றோர். 90 களின் பிற்பகுதியில் நம்மவர்களுக்கே அத்தண்டனை என்றபோது எழுந்த எழுச்சியில் எம் கரங்களையும் அதனோடு இணைத்துக் கொண்டோம்.&lt;br /&gt;“புத்தர் சிரித்தார்” நூலினை 1990 ஆம் ஆண்டு வெளியிட்டபோது அதைக் கண்டுகொண்ட பத்திரிக்கைகள் இரண்டே இரண்டுதான். ஒன்று : கோவை ஞானியின் “நிகழ்”. மற்றொன்று : ”கணையாழி”.&lt;br /&gt;திருட்டு வி.சி.டி.கூட ப்ளாப் ஆகிப் போன தமிழ் சினிமாவைப் போல எவராலும் கண்டு கொள்ளப்படாத அந்த “புத்தர் சிரித்தார்” இனி ஒவ்வொரு திங்களும், வியாழனும்  இணையத்தில் உங்களை வலம் வரும்.&lt;br /&gt;(அதுக்கு நாங்களாடா கெடச்சோம்? எனப் புலம்பிப் பயனில்லை. நாயோட படுத்தா உண்ணியோடதான எந்திரிக்கணும்?  &lt;br /&gt;”எல்லாம் வல்ல” நம் அணு விஞ்ஞானிகள் உம்மை காப்பாற்றக் கடவார்களாக!.)&lt;br /&gt;இனி…..&lt;br /&gt;&lt;a href="http://pamaran.files.wordpress.com/2011/09/buddha1.jpg"&gt;&lt;img alt="" class="aligncenter size-full wp-image-651" height="690" src="http://pamaran.files.wordpress.com/2011/09/buddha1.jpg?w=460&amp;amp;h=690" title="buddha1" width="460" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;a href="http://pamaran.files.wordpress.com/2011/09/wrk.jpg"&gt;&lt;img alt="" class="aligncenter size-full wp-image-652" height="300" src="http://pamaran.files.wordpress.com/2011/09/wrk.jpg?w=300&amp;amp;h=300" title="wrk" width="300" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ&lt;/strong&gt;வசர அவசரமாக வந்தார் அந்த நண்பர்.&lt;br /&gt;வந்த வேகம் அவரது மூச்சிறைப்பில் தெரிந்தது.&lt;br /&gt;”உங்களுக்குத் தெரியுமா? வி.பி.சிந்தன் இறந்து விட்டாராம். பேப்பரில் போட்டிருக்கு” என்றார்.&lt;br /&gt;அப்படியா? எப்படி? என்றேன்.&lt;br /&gt;சொன்னார். அத்தோடு நில்லாமல்&lt;br /&gt;”பாத்தீங்களா எவ்வளவு நல்ல சாவுன்னு?”&lt;br /&gt;புரியாமல் நிமிர்ந்து பார்த்தேன். சொன்னார்.&lt;br /&gt;“இங்கிருந்து போய் மாஸ்கோவுல செத்திருக்கார். நினைக்கவே சிலிர்க்கிறது” என்றார்.&lt;br /&gt;மாஸ்கோவில் சாவதற்கும் சிலிர்ப்பதற்கும் சம்பந்தம் என்ன இருக்கிறது என்றேன்.&lt;br /&gt;கேட்டதுதான் தாமதம்.&lt;br /&gt;“புரியாம பேசாதீங்க தோழர். ஒவ்வொரு தோழரும் சாவைக் கண்டு அஞ்சல. ஆனா அப்படிப்போற உயிர் சோவியத் யூனியன் மடியில போற மாதிரி இருந்தா எவ்வளவு சந்தோஷத்தோட போகும்….. இது புரியாம….”&lt;br /&gt;உண்மையில் எனக்குப் புரியவில்லைதான்.&lt;br /&gt;ஆனால் இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருந்தது எப்படியோ சோவியத் யூனியனுக்கே எட்டியிருக்கும் போலிருக்கிறது.&lt;br /&gt;உண்மையிலேயே உலகெங்கும் உள்ள மக்களின்&lt;br /&gt;உள்ளத் துடிப்பினை சோவியத் யூனியன்&lt;br /&gt;உணர்ந்திருந்ததனை உணரவில்லை நான்.&lt;br /&gt;இப்படி ஒவ்வொருவரும் சோவியத் யூனியனுக்கே வந்து “சொர்க்க லோகம்” போக வேண்டும் என ஆசைப்பட்டால் சோவியத் யூனியனே சுடுகாடாகிவிடுமே எனும் அச்சத்தில் ஆலோசனைகள் நடத்தி அறிஞர்களுடன் அளவளாவி அரிய வழியினைக் கண்டு பிடித்தனர் அணுகுண்டு அறிஞர்கள்.&lt;br /&gt;அதுதான் :&lt;br /&gt;உலகெங்கும் உள்ள மக்களின்&lt;br /&gt;உன்னத வேண்டுகோளுக்கு இணங்கும்&lt;br /&gt;அதே நேரத்தில் அவர்கள்&lt;br /&gt;சோவியத் யூனியனுக்கு வந்து சிரமப்பட்டுச் சாவதைவிட            &lt;br /&gt;மிக எளிய முறையில் அங்கே&lt;br /&gt;பழைய இரும்புக் கடைகளில் போட வேண்டிய&lt;br /&gt;அணு உலைகளை எல்லாம் ஆங்காங்கே&lt;br /&gt;உள்ள நாடுகளுக்கு அனுப்பி வைத்தால்&lt;br /&gt;“சமத்துவமான சாவு” அனைத்து மக்களுக்கும்&lt;br /&gt;பரவலாகப் போய்ச் சேரும் என முடிவு செய்ததன்&lt;br /&gt;விளைவே :&lt;br /&gt;&lt;strong&gt;“கூடங்குளத்திலும் அணு உலைகள்.”&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4778918875738452370-146567694808116856?l=raavanaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/146567694808116856'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/146567694808116856'/><link rel='alternate' type='text/html' href='http://raavanaa.blogspot.com/2011/09/blog-post_521.html' title='புத்தர் சிரித்தார்…..மாற்றான்  தோட்டத்து  மலர்  (பாமரன்) , நீங்களும் படியுங்களே'/><author><name>ராவணா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-zFTCUpZRo9E/TnrEBZqiwLI/AAAAAAAAAEM/RmhZAivkDxQ/s72-c/buddha1.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4778918875738452370.post-304468255283820700</id><published>2011-09-21T21:53:00.000-07:00</published><updated>2011-09-21T21:53:17.645-07:00</updated><title type='text'>வெவரங்கெட்ட விஞ்ஞானிகளுக்கு…..!,மாற்றான்  தோட்டத்து  மலர்  (பாமரன்)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-QUqP8QRvYqE/Tnq-dvYqBkI/AAAAAAAAAEI/JpSbc0xPdT0/s1600/funny_mad_scientist.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-QUqP8QRvYqE/Tnq-dvYqBkI/AAAAAAAAAEI/JpSbc0xPdT0/s320/funny_mad_scientist.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடிக் கூப்பிடறனேன்னு கோவிச்சுக்காதீங்க. ஏதோ உங்கள மாதிரி நாலெழுத்துப் படிக்கிலீன்னாலும் அங்கியும் இங்கியும் காதுல உளுந்தத வெச்சுத்தான் இந்தக் கடுதாசிய எழுதறேன். எனக்கு அவ்வளவாப் படிப்பறிவு கெடையாதுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காலத்துல எங்க அப்பத்தா நெலாவைக் காட்டித்தான் சோறு ஊட்டும். அப்பறம் நெலாவைப் பாம்பு முழுங்கறது… பாம்பைப் போட்டு கடலைக் கடையறது… அப்பிடி இப்பிடின்னு கதையெல்லாம் சொல்லும். கொஞ்சம் பெரிசாக பெரிசாக நம்மூர்ல பெரியார் வேற மூலமூலைக்கு நின்னுகிட்டு “அடப் பைத்தியக்காரா! நெலாவென்ன லட்டா? ஜிலேபியா? பாம்பு வந்து முழுங்கறதுக்கு? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கடா முட்டாப்பசங்களா…”ன்னு கன்னா பின்னான்னு திட்டீட்டு இருந்தது புரிய ஆரம்பிச்சுது.&lt;br /&gt;பத்தாததுக்கு திடீர்ன்னு ஒரு நாள் உங்கள மாதிரி நாலு பெரிய மனுசனுங்க சேந்து நெலாவுலயே போய் குதிச்ச சேதி கேட்டதுமே சின்ன வயசுல கேட்ட சமாச்சாரங்க மேலெயெல்லாம் சந்தேகம் பொறந்துடுச்சு.&lt;br /&gt;அப்புறம் ஒருநாளு நம்ம ஊட்டுல மாட்டீருந்த சங்கிலிக்கருப்பராயன்ல இருந்து சரசுவதி வரைக்கும் அத்தனையையும் கழுட்டி பொடக்காழில போய் போட்டுட்டு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இருந்தாலும் நீங்க என்னோட கண்ணத் தொறந்தவுங்க. நம்ம சனங்களோட முட்டாத்தனத்துக்கெல்லாம் ராப்பகலா ஆராஞ்சு பதிலு கண்டுபுடிச்சவுங்க….&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;இருந்தாலும்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;  &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;பாருங்க….&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;இது  &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;இந்த  &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;சனங்களுக்குப்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;  &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;புரியவே  &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;மாட்டேங்குது….&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னவோ நீங்களும் கூட ராக்கெட் உடறப்ப புள்ளையாருக்குத் தேங்கா ஒடச்சுட்டுத்தான் மேல உடறீங்களாமா? உங்கள மாதிரி விஞ்ஞானிங்க கூட திருப்பதில மொட்டை அடிச்சுக்கிட்டு லட்டுக்காக சண்டப் போட்டுக்கறீங்கன்னு கேள்விப்பட்டேன். அதக் கேட்டதும்தான் கோபம் பத்தீட்டு வந்துருச்சு. சங்கிலிக்கருப்பராயன பொடக்காழில போட்டதுக்கு பதிலா உங்களத் தூக்கிப் போட்டிருக்கலாமோன்னு தோணிச்சு. ஆனாலும் நம்மூர் பசங்கள நம்ப முடியாது. ஏதாவது புளுகுனாலும் புளுகுவானுகன்னு தெரிஞ்சுதான் இந்தக் கடுதாசிய எழுதறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதென்னவோ கூடங்குளத்துல அணு உலையக் கொண்டுவரப் போகுது நம்ம கவர்மெண்டு… அது வந்தா ஊரே காலியாயிடும்…. புல் பூண்டு கூட மொளைக்காது….ன்னு மொளச்சு மூணு எலை கூட உடாத பசங்கெல்லாம் பேசீட்டுத் திரியுதுங்க. ஏங்க அணு ஒலை நம்ம விஞ்ஞானத்துக்கு எவ்வளவு பெரிய்ய்ய்ய்ய கெவுர்த்தி. இதப் புரிஞ்சுக்காம ஆபத்து கீபத்துன்னு அளந்துகிட்டு இருக்கானுங்க சிலபேரு. ஆனா அவனுக சொல்றதுலயும் ஒண்ணு ரெண்டு நல்லது இருக்கத்தான் செய்யுதோன்னு ஒரு சந்தேகங்க….&lt;br /&gt;அமெரிக்காவுல என்னமோ இந்த ஒலைகளை வருசத்துக்கு கொறஞ்சது அறநூறு தடவையாவது மூடறானுங்களாமா? ஏங்க மூடறதுக்காகவா தொறக்கிறது? ஒரு எழவும் புரிய மாட்டேங்குதுங்க. ஏதோ உங்கள மாதிரி வெவரம் தெரிஞ்ச நாலுபேரு வெளக்கிச் சொன்னாத்தானே எங்குளுக்குப் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;“அது” வந்தா இந்த நாட்டுக்கே வெளக்குப் போடலாம்… பேக்டரி ஓட்டலாம்….ன்னு சொல்ற ஆளுங்களும் இருக்காங்க. அப்புறம் என்னங்க இந்த நாட்டுக்கே வெளக்கு வருதுன்னா ஒரு ஊரு செத்தாத்தான் என்ன? அதுவும் பொதைக்கற வேல மிச்சம்னு சொல்றாங்க. அப்படியே சாம்பலாயிருமாமா? தூக்கற வேலயும் இல்ல… பொதைக்கற வேலயும் இல்ல.&lt;br /&gt;ஒரு நாட்டுக்கு கரண்டு கெடைக்குதுன்னா ஒரு ஊரையே கொளுத்தலாம்…. இந்த ஒலகத்துக்கே கரண்டு கெடைக்குதுன்னா ஒரு நாட்டையே கொளுத்தலாம். எத்தன பேரு பஸ்சுலயும் ரயில்லயும் அடிபட்டுச் சாகறானுங்க… இதுல செத்தா எவ்வளவு கவுரவம். விஞ்ஞானத்துக்காக செத்தவன்னு பேராவது மிஞ்சுமில்லீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;இருந்தாலும்  &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;பாருங்க….&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;இது  &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;இந்த&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;  &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;சனங்களுக்குப்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;  &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;புரியவே  &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;மாட்டேங்குது….&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதென்னவோ அப்பிடிக் கிப்பிடி இந்த ஒலை வெடிக்கறமாதிரி தெரிஞ்சா ராவோட ராவா ஊர்சனத்த வேற தூரத்து ஊருக்கு கொண்டுபோற அளவுக்கு நெறைய பாதுகாப்பு சமாச்சாரமெல்லாம் செஞ்சிருக்கோம்; அதனால யாரும் பயப்பட வேண்டாம்னு கவர்மெண்டு சொல்றதா கேள்விப்பட்டேங்க. இதுலதாங்க ஒரு சின்ன சந்தேகம்….. என்னடா இது இவனே இப்பிடிக் கேக்கறானேன்னு கோவுச்சுக்கக் கூடாது.&lt;br /&gt;ஏங்க நம்மூர் மூலைல தீப்புடிச்சாலே இந்த பயருசர்வீசு வர்றதுக்கு ஏழு மணி நேரமாவுது….. வந்தாலும் தண்ணி வந்தா பைப்பு கழுண்டுரும்…. பைப்பு செரியா இருந்தா தண்ணி வராது…. எல்லாஞ் சேந்து வர்றதுக்குள்ள தீ தானா அணஞ்சுரும். அப்புறம் எப்பிடீங்க இந்த ஒலைல ஏதாவுதுன்னா நாங்க உங்கள நம்பீட்டு உக்காந்திருக்கிறது? ஏதோ கேக்கோணும்னு தோணுச்சு கேட்டுட்டேன்…. சரி அத உடுங்க….&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலைல கெடக்கற கசடாமா….? அது பேரு புளூட்டோனியமோ என்னமோ…. அதுல இருந்து ஏதோ சக்தி வெளியே வந்துட்டே இருக்கும்னு சொல்றாங்க. அந்தக் காத்து நம்ம மேல பட்டாலேயே கண்ட கண்ட நோவெல்லாம் வரும்னு சொல்றாங்களே…. இது நெசந்தாங்களா?&lt;br /&gt;ஆனா அதுக்கும் வழி இருக்கிறதா நம்மூர்ல பேசிக்கிறாங்க. அந்தக் கசட பத்திரமா எடுத்துட்டுப்போயி பொதைச்சிருவாங்க…. இல்லேன்னா நம்ம நாயர் கடை பார்சல் மாதிரிப் பண்ணி கடலுக்குள்ள  கடாசிருவாங்கன்னு கேள்விப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்குளுக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு….&lt;br /&gt;நீங்குளுந்தான் இந்த சனங்க உசுரக் காப்பாத்தறதுக்காக தலைல இருக்குற மசிரெல்லாம் போயி பாடாப்படறீங்க….&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;இருந்தாலும்  &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;பாருங்க….&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;இது  &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;இந்த&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;  &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;சனங்களுக்குப்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;  &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;புரியவே  &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;மாட்டேங்குது….&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://pamaran.files.wordpress.com/2011/09/scientist-2.jpg"&gt;&lt;img alt="" class="aligncenter size-full wp-image-669" height="212" src="http://pamaran.files.wordpress.com/2011/09/scientist-2.jpg?w=232&amp;amp;h=212" title="Scientist 2" width="232" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கசடைத் தூக்கி கடலுக்குள்ள போட்டா என்னைக்காவுது அதுல ஓட்டை விழுந்துச்சுன்னா மீனெல்லாம் சாகும்…. அதத் தின்னா நம்ம சனமெல்லாம் சாகும்னு சொல்றானுகங்க. ஏங்க….  இவனுக மீன் புடிக்க வேற எடமே கெடைக்காதா….? கடல்தான் கெடைச்சுதா….? ஏன் நம்மூர் வாலாங்கொளம் மாதிரி வேற ஏதாவது கொளத்துல மீன் புடிச்சா போதாதா….? அப்பிடி அதுலயும் தீந்து போச்சுன்னா நம்ம கெவர்மெண்டே ஊருக்கு ஏழு கொளம் வெட்டி அதுக்குள்ள மீனைக்கொட்டி நம்ம “பஞ்சாயத்து ராசு” மாதிரி “மீன் ராசு”ன்னு ஒரு திட்டம் கொண்டாந்தா எல்லாம் செரியாயிடுங்க…. இது புரியாம இவனுங்க…..&lt;br /&gt;என்னமோ…. எந்த உலையா இருந்தாலும் முப்பதே வருசந்தான் ஆயுசு…. அதுக்கு அப்பறம் அதை சமாதி மாதிரி காங்கிரீட்டு போட்டு மூடி காவல் வேற வெக்கணும்…. அதக் கட்டறத விட மூடறதுக்கு பல மடங்கு செலவாகும்…. அப்பிடீன்னெல்லாம் சொல்றாங்க…. அதிலிருந்து வர்ற கதிரியக்கக் காத்தாமா….. அதுவேற பத்தாயிரம் வருசம் வரைக்கும் அடிக்கும்னு வேற சொல்றாங்க…. அப்ப ஒண்ணு பண்ணுங்க….. “நம்ம” தலைவருக்கு ஓட்டுப் போடாத ஊராப் பாத்து உலையை ஆரம்பிச்சிருங்க….&lt;br /&gt;அது ஓடவும் வேண்டாம்….&lt;br /&gt;அத மூடவும் வேண்டாம்….&lt;br /&gt;ஒரேடியா அந்த ஊரையே மூடீறலாம். இப்பிடியே ஒவ்வொரு ஊரா மெரட்டுனா போதுங்க…. அப்புறம் ஊரென்ன…… நாடே நம்ம கைல….. ஏன்…. இந்த உலகமே நம்ம கைல… எப்புடி நம்ம “ஐடியா”?&lt;br /&gt;இந்தக் கடுதாசிய எழுதி முடிக்கறப்ப இன்னொரு சமாச்சாரம் கைக்குக் கெடைச்சதுங்க. அதுவும் நீங்களே எழுதி  வெளியிட்டதுங்க. ஆனா…. அது கெடைச்சப்பறந்தாங்க கொளப்பமே அதிகமாயிடுச்சு…..&lt;br /&gt;&lt;em&gt;”&lt;/em&gt;&lt;em&gt;தப்பித்தவறி&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;உலைல&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;இருந்து&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;கதிரியக்கம்&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;கெளம்பீடுச்சுன்னா&lt;/em&gt;&lt;em&gt;….. &lt;/em&gt;&lt;em&gt;ஜீப்புல&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;மைக்கக்&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;கட்டீட்டு&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;ஊர்&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;ஊராப்&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;போயி&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;தெரியப்படுத்துவோம்&lt;/em&gt;&lt;em&gt;”&lt;/em&gt;னு போட்டிருக்கீங்க…..&lt;br /&gt;ஏங்க….. கதிரியக்கம் கெளம்பீருச்சுன்னு தெரிஞ்சவுடனே எந்தப் பயலாவது ஜீப்பை ஊருக்குள்ள ஓட்டுவானுங்களா…..? இல்ல ஊரை உட்டே ஓடுவானுங்களா….?&lt;br /&gt;சரி….. அது கெடக்கட்டும்…. அப்புடி என்னாவது சந்தேகம்னா அவுங்கவுங்க ஊட்டு ரேடியோப் பொட்டியையும், டீவீப் பொட்டியையும் தெறந்து கேளுங்கன்னு போட்டிருக்கீங்க…..&lt;br /&gt;ஏங்க…. இந்த நாட்டுல என்னைக்காவுது  டீவியும் ரேடியோவும் உண்மை பேசி கேட்டுருக்கீங்களா? பெரியவர் செயப்பிரகாசு நாராயணன் குண்டுக் கல்லாட்டம் உயிரோட இருந்தப்பவே நம்மூர் ரேடியோ அவரைக் கொன்னு போட்டுது. ஊர்ல ஏதாவது பிரச்சனை….. கடையடைப்புன்னா….. ரோட்டுல திரியற கழுதை….. மாடு…. இதையெல்லாம் பாத்துட்டு உங்க ஆளுங்க பஸ்சுகள் பறந்தன….. ரயில்கள் மிதந்தன…. ”மாமூல்” வாழ்க்கை கெடவில்லை….ன்னு கப்சா உடுவாங்க. இந்த லட்சணத்துல நீங்க டீவீயையும் ரேடியோவையும் கேக்கச் சொல்றீங்களே….. இது உங்குளுக்கே நாயமாப் படுதா…..? வேண்ணா ஒண்ணு பண்ணச் சொல்லுங்க….. டீவீலயும் ரேடியோவுலயும்….&lt;em&gt;”&lt;/em&gt;&lt;em&gt;உலைகள்&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;பத்திரமா&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;இருக்கு&lt;/em&gt;&lt;em&gt;. &lt;/em&gt;&lt;em&gt;கதிரியக்கம்&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;துளிக்கூட&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;வெளியேறல&lt;/em&gt;&lt;em&gt;….” &lt;/em&gt;அப்பிடீன்னு சொல்லச் சொல்லுங்க…. அப்பத்தான் சனங்க துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஊரைக் காலி பண்ணுவாங்க.&lt;br /&gt;சரி…. இதுவும் கெடக்கட்டும்….. ஊட்டுல இருக்குற சன்னல்…. கதவையெல்லாம் இறுக்கமா மூடீட்டு உள்ள இருக்கச் சொல்றீங்க…..&lt;br /&gt;சரிதான்…. ஆனா இங்க சனங்க ஊடே இல்லாம நாயும் பன்னியும் மாதிரி பசில பராரியா சுத்தீட்டு இருக்குறப்ப எப்புடீங்க ஊட்டுக்குள்ள பூந்து கதவச் சாத்தறது…..சன்னலை மூடறது? கண்டவன் ஊட்ல பூந்தா கதவச் சாத்த முடியும்? அப்பிடியே ஊடே இருந்தாலும் ஓடே இல்லாம….. மழை வந்தா தலைக்கிட்டயும் கால்கிட்டயும் கக்கத்துலயும் ஓட்டைச் சட்டிகளை வெச்சுட்டுக் கெடக்குற எங்கள மாதிரி சனங்க எதப்போயி அடைக்கிறது? எதப்போயி மூடறது? அப்படீன்னா…. ரோட்டோரமாப் படுக்குறவனும்….. பாட்டுப்பாடிப்     பொழைக்கிறவனும்…..    கழைக்கூத்தாடியும்……. எங்க போயி ஒடுங்குவாங்க…..? யார் ஊட்ல பதுங்குவாங்க…..?&lt;br /&gt;இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் நம்ம நாட்டுக்கு அவமானமா இருக்குதுன்னு ஒருவேளை இந்தத் திட்டமோ என்னவோ…. ஆனா இதுக்குப் பதிலா ஊடில்லாம இருக்குற இதுகள ஓட்டீட்டுப் போறதை விட உலைக்குள்ளயே தூக்கிப் போட்டா…. ஏழ்மைய ஒழிச்ச மாதிரியும் இருக்கும்…. ஏழையவே ஒழிச்ச மாதிரியும் இருக்கும்.&lt;br /&gt;இருந்தாலும் உங்குளுக்கு நல்ல மனசுங்க.&lt;br /&gt;எது எப்பிடியோ ஊரைச் ”சுத்தம்” பண்றதுன்னு நீங்க தீர்மானிச்சாச்சுன்னா அதுக்கு “அப்பீலே” கெடையாதுங்க. அந்தக் காலத்துல பிளேக் நோவு வந்து ஊரையே தூக்கீட்டுப் போனாப்பல இந்தக் காலத்துல பிளேக்குக்கு அப்பனா அணு உலை வருது.&lt;br /&gt;இந்த மடம் இல்லைன்னா வேற எந்த மடமாவது போக வேண்டியதுதான்….&lt;br /&gt;அதுக்கும்….&lt;br /&gt;உங்க விஞ்ஞானம்…..&lt;br /&gt;உசுரோட உட்டு வெச்சா….&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாமரன்&lt;/strong&gt;&lt;strong&gt;.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div align="right"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4778918875738452370-304468255283820700?l=raavanaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/304468255283820700'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/304468255283820700'/><link rel='alternate' type='text/html' href='http://raavanaa.blogspot.com/2011/09/blog-post_21.html' title='வெவரங்கெட்ட விஞ்ஞானிகளுக்கு…..!,மாற்றான்  தோட்டத்து  மலர்  (பாமரன்)'/><author><name>ராவணா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-QUqP8QRvYqE/Tnq-dvYqBkI/AAAAAAAAAEI/JpSbc0xPdT0/s72-c/funny_mad_scientist.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4778918875738452370.post-557471145674620672</id><published>2011-09-08T22:41:00.000-07:00</published><updated>2011-09-08T22:45:26.643-07:00</updated><title type='text'>தோழி செங்கொடிக்கு!  மாற்றான் தோட்டத்து மலர்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;தோழி செங்கொடிக்கு!&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-2guLEJkdzew/TmmmpcFCWdI/AAAAAAAAAEE/AUw_71eh-8E/s1600/319653_2402401942729_1331491626_2859032_945460113_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="225" src="http://2.bp.blogspot.com/-2guLEJkdzew/TmmmpcFCWdI/AAAAAAAAAEE/AUw_71eh-8E/s320/319653_2402401942729_1331491626_2859032_945460113_n.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;எப்படி இருக்கிறாய் என்று நான் இனி உன்னைக் கேட்க முடியாது. எங்கே இருக்கிறாய் என்பது மட்டுமே தெரியும். காஞ்சி மக்கள் மன்றத்தில், நீ வளர்ந்த கம்யூனில் இருக்கிறாய். மண்ணில் புதைக்கப்பட்டு இருக்கிறாய் நீ. இன்னும் சில நாட்களில் உன் உடல் புழுக்களுக்கு இரையாகக் கூடும். புன்னகை தவழ்ந்த உன் முகம் செல்லரித்துப் போகக் கூடும். பறையெடுத்து ஆடிய உன் கைகள் இற்றுப்போய் வெறும் எலும்புகளாக மட்டுமே மிஞ்சக் கூடும். ஆனாலும் நீ வாழ்கிறாய்!&lt;br /&gt;&lt;br /&gt;அன்புத் தோழி செங்கொடி! நான் உன்னை அறிந்தவளில்லை. நமக்குள் அறிமுகம் இல்லை. ஆனால் எனக்குத் தெரியும். நீ சாதாரணமானவள் அல்ல. அதை உன் பெயரே பறைசாற்றும். செங்கொடி...பட்டொளி வீசிப் பறக்க வேண்டும். ஆனால் எம்மை விட்டுப் பிரிந்து பறந்து சென்றுவிட்டது நியாயமா தோழி?&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று உயிர்கள் மரித்துப் போய்விடக்கூடாது என்று தமிழகமே திரண்டு போராடுகையில், நீயும் போராடி இருக்கிறாய். போராட்டத்தில் உன்னை இணைத்துக் கொண்டிருக்கிறாய். .&lt;br /&gt;&lt;br /&gt;உன் மரணத்தை கோழைத்தனம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் வீரமரணம் என்றும் நான் சொல்ல மாட்டேன். வெறும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் நீ முடிவெடுக்கவில்லை. உன் முடிவை முட்டாள்த்தனம் என்றும் என்னால் போகிறபோக்கில் சொல்லிவிட முடியவில்லை. முதல் நாள் முத்துக்குமாரின் கடிதத்தை நீ வாசித்திருக்கிறாய். ‘முத்துக்குமார் போல இன்னொருவர் இன்றைய சூழலில் தன்னைத் தானே மாய்த்துக்கொண்டால் அன்று எழுந்த எழுச்சி போல இன்றைக்கு ஏற்படுமா?’ என்று நீ உன் தோழிகளிடம் கேட்டிருக்கிறாய் என்று அவர்கள் இப்போது சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ நினைத்ததை செய்து முடித்த திருப்தியோடு இப்போது உறங்கிக்கொண்டிருக்கிறாய். ஆனால் உன்னைப் பிரிந்து வாடும் நெஞ்சங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;உன் உடல் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்த அந்த இரவு, வெளியே கூட்டம் அலைமோதியது. அனைவர் கரங்களிலும் நீ எழுதிய கடித்த்தின் நகல் உன் கையெழுத்தில்! சுதந்திரத்திற்குப் பின்னான இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் காரணத்துக்காக உயிர் நீத்த முதல் பெண் நீ தான் என்பதை திருமாவளவன் ஊடகங்களுக்கு எடுத்துரைத்தார். அப்போது என் உடல் சிலிர்த்தது. ஆனால் அதையும் மீறி உன் மரணம் எத்தகைய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது, அதிர்ச்சியளித்தது என்பதை நீ அறிய மாட்டாய். உனக்குத் தெரிந்திருக்கும் செங்கொடி! சிவகங்கைச் சீமை வெள்ளையனிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, உடலெங்கும் வெடிமருந்தைக் கட்டிக்கொண்டு வெள்ளையர்களின் ராணுவக்கிடங்கில் குதித்து ஆயுதங்களை அழித்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த குயிலியின் கதையை நீ அறிந்திருப்பாய்.  உன் மரணத்தை நீயே தேடிக்கொண்டது பற்றிய விமர்சனங்கள் ஆயிரம் இருந்தாலும், நீ நம்பிய உன் கொள்கைக்கு நீ உண்மையாய் இருந்திருக்கிறாய். அந்த உண்மைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உன் உடலைக் காண நான் உள்ளே செல்லவில்லை. என்னைப் போலவே பலரும் உன்னை அப்படியொரு கோலத்தில் பார்க்க மனது வராமல் நின்றிருந்தனர். அந்த இரவு பூராவும் காஞ்சி அரசு மருத்துவமனை வளாகம் மனிதத்தால் நிரம்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் மதியம் உன் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு காஞ்சி மக்கள் மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நீ வாழ்ந்த இடத்திற்குப் பயணமானது உன் உடல். பத்து கிலோமீட்டர் தொலைவை உன் உடலைச் சுமந்த வாகனம் கடந்து சென்றது. பல்வேறு இயக்கத்தினர் கலந்து கொண்ட அந்த ஊர்வலம் காஞ்சி நகரத்தின் வீதிகளில் சென்றபோது காஞ்சி நகர மக்கள் வீதியின் இருமருங்கிலும் நின்றனர். நகர எல்லையைக் கடந்து ஒரு வயல்பகுதியில் உன் உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது, தொலைவில் ஒரு பெண் வயற்காட்டினிடையே உன்னைப் பார்க்க ஓட்டமாய் ஓடிவந்தார். கூட்டமாய் ஓரிடத்தில் பெண்கள் திரண்டு உன் அழகோவியமான உருவத்தை வரைந்த பதாகையை உயர்த்திப் பிடித்து வந்த தோழர்களிடம் சொல்லி அந்த பதாகையை கையில் வாங்கித் தொட்டுப் பார்த்து கண்ணீர் விட்டு கதறியதை எப்படி நாங்கள் மறப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;வழியெங்கும் மக்கள் எழுப்பிய உணர்ச்சிமிகு முழக்கங்கள் விண்ணைப்பிளந்தன. ஆனால் கேட்பதற்கு உன் செவிகள் செயலிழந்திருந்தன. பத்து கிலோமீட்டர் தொலைவைக் கடந்து நீ வாழ்ந்த ஊரான மங்ககலப்பாடிக்கு உயிரற்ற உடலாய் சென்று சேர்ந்தாய. உன்னோடு வாழ்ந்த மக்களின் கதறலுக்கிடையே உன் உடல் இறக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இடத்தில் தானே நீ நடமாடியிருப்பாய்? அந்த இடத்தில் தானே நீ உன் ஆட்டக்கலைப் பயிற்சிகளையும் ஒத்திகைகளையும் மேற்கொண்டிருப்பாய்? அந்த இடத்தில்தானே உன் அரசியல் அறிவை நீ வளர்த்துக் கொண்டிருப்பாய்? அந்த இடத்தில் தானே உன் கனவுகள் அலைந்து கொண்டிருக்கும்? நீ வாழ்ந்த வாழ்க்கை எல்லோருக்கும் வாய்க்காது. கம்யூன் வாழ்க்கை என்றால் நம்மில் பலருக்குத் தெரியாது. குடும்பத்தை விட்டு நீங்கி ஒரு பொதுவான இடத்தில் பொதுவான செயல்பாட்டுத் திட்டத்தோடு இணைந்து கூட்டாக வாழும் வாழ்க்கை உனக்கு வாய்த்திருந்தது. பாலின பேதமின்றி வாழும் அந்த வாழ்க்கை வாழ்ந்த நீ கொடுத்து வைத்தவள். ஆனால் அந்த வாழ்க்கையை நீ முழுதுவதுமாக வாழாமல் போய்விட்டதில் தான் எங்களுக்கு வருத்தம்!&lt;br /&gt;&lt;br /&gt;உன் உடல் கீழ்த்தளத்தில் வைக்கப்பட்டு உன்னை உன் தோழர்கள் வந்துப் பார்த்து உனக்கு அஞ்சலி செலுத்தியவண்ணம் இருக்க, நீ அமைதியாய் கண்ணாடிப் பேழைக்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாய். மேல்தளத்தில் உன் உடலை என்ன செய்வது என்கிற விவாதம் நடந்துகொண்டிருந்தது. பொதுமக்கள் அஞ்சலிக்காக உன் உடல் சென்னையில் வைக்கப்படவேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருந்தது. உன்னோடிருந்த காஞ்சி மக்கள் மன்றத்தின் மகேஷும், ஜெஸ்ஸியும், காவல்துறை அனுமதியளித்தால் எடுத்துச்செல்லுங்கள் என்றனர். ஆனால் காவல்துறை அனுமதியளிக்குமா? பல இயக்கங்களின் பிரதிநிதிகள், தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கூடியிருந்தனர் செங்கொடி!. அரசியல் கட்சித்தலைவர்கள், தலித் தலைவர்கள், இடதுசாரித் தலைவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று ஒரு முப்பது பேர் வரை அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டோம் தோழி!&lt;br /&gt;&lt;br /&gt;உன் உடலை எங்கே புதைப்பது? என்ன செய்வது? என்று முடிவு செய்வதற்காக கூட்டப்பட்டக் கூட்டம் கிட்டத்தட்ட  இரண்டு மணிநேரம் நடந்தது. வெளியே வந்திருந்த கூட்டம் பதைபதைப்பாகக் காத்திருக்க, அவரவர் கருத்தை அவரவர் முன்வைக்க சூடான விவாதங்கள் தொடங்கின. இளைஞர்கள் ஒருபுறம் உன் உடலை சென்னைக்கு எடுத்துச் சென்று பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும் என்று கடுமையாக வாதிட்டனர். ஒரு கட்டத்தில் கடும் வாக்குவாதம் நடக்க, சென்னைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எடுத்துச் சொன்னார்கள் தலைவர்கள். எத்தனை சிக்கல்கள் வந்தாலும், குண்டடிப்பட்டாலும் அதைத் தாங்கத்தயாராக இருப்பதாக இவர்கள் சொன்னார்கள். ஆனால் தலைவர்களோ அதனை வேண்டாமென்றனர். “எங்களுக்கு வழிகாட்டுங்கள். உங்கள் வழிகாட்டுதல் படி நாங்கள் செயல்படுகிறோம். நீங்கள் மனது வைத்தால் காவல்துறையிடம் பேசி அனுமதி வாங்க முடியும்” என்று அரசியல் கட்சித் தலைவர்களிடம் கேட்டனர் பல்வேறு அமைப்பினர். ஆனால் அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை மீண்டும் மீண்டும் எடுத்துரைத்தனர் தலைவர்கள். ஒரு கட்டத்தில் இளைஞர்கள் உணர்ச்சி வேகத்தில் பேசுவதாக தலைவர்கள் கூறினார்கள். நீ எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டி “செங்கொடியின் கடிதத்துக்கு என்ன பொருள்? அவள் கூறிய போராட்டத்தை நாம் முன்னெடுக்கப் போவதில்லையா?” என்று கேட்டனர் சிலர். இறுதியில் முடிவு நீ சார்ந்த காஞ்சி மக்கள் மன்றத்தின் கைகளில் விடப்பட்டது.  நீ வாழ்ந்த அந்த வீட்டில்தான் உன்னைப் புதைக்க வேண்டுமென்று ஏற்கனவே நீ கூறியிருந்ததை சுட்டிக்காட்டிய மகேஷ் உன் உடலை எடுத்துப் போவது குறித்து எந்த ஆட்சேபணையும் இல்லையென்றும், ஆனால் எந்த சிக்கலும் இல்லாமல், காவல்துறையின் அனுமதியோடுதான் எடுத்துப் போக வேண்டும். எங்கு எடுத்துச் சென்றாலும் மீண்டும் இங்கே, இதே வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்து ஒப்படைத்துவிட வேண்டும் என்று கூறிவிட, அதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டன. இறுதியில் காவல்துறையின் அனுமதி பெறும் அளவுக்கு இன்னமும் சக்தி பெறாத சிறிய இயக்கத்தினரும், தனிநபர்களும் தங்கள் கோரிக்கையை ஏமாற்றத்தோடு கைவிட்டனர். உன் உடலை அங்கேயே அடுத்த நாள் முழுதும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பதென்றும், அதற்கடுத்த நாள் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் முடிவானது. இத்தனையும் மேலே மாடியில் நடக்கையில் நீ கீழே உன் சுற்றத்தார் புடைசூழக் கிடந்தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கு மங்கலப்பாடி கிராமத்தை விட்டுக் கிளம்புகையில் மனம் கனத்துக் கிடந்தது. அதற்கடுத்த முழு நாளும் நீ அங்கேயே நீ வாழ்ந்த வீட்டிலேயே இருந்தாய். உன் சிரிப்பொலி அலங்கரித்த அந்த வீட்டில் உன் கனத்த மௌனம் காற்றில் பரவியிருந்த்து. உன் இறுதி நிகழ்வுக்காகக் காத்திருந்தாய். 31 ஆகஸ்ட் அன்று காலை, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணதண்டனைக்கு நீதிமன்றம் எட்டுவார காலத்தடை விதித்தது. மகிழ்ச்சியில் துள்ளிய பலரும் “செங்கொடி ஒரு நாள் பொறுத்திருந்து பார்த்திருக்கலாமே” என்று ஆதங்கப்பட்டதைக் காண முடிந்தது. உன் இறுதிச்சடங்கிற்கு பல ஊர்களில் இருந்தும் வந்திருந்த மக்கள் திரளுக்கு நடுவே உன் உடல் புதைக்கப்பட்டதாக செய்தி வந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;உன் உடலை என்ன செய்வது என்று முடிவெடுக்கும் கூட்டத்தில் நான் கேட்ட ஒரு குரல் இப்படிச் சொன்னது “சரியான வழிகாட்டுதல் இல்லாத, சரியான தலைமை இல்லாத ஒரு சமூகத்தில் தற்கொலைகளை தவிர்க்கமுடியாது. ஆனால் அது தற்கொலை அல்ல. கொலைதான். செங்கொடியின் மரணம் தற்கொலை அல்ல. அது கொலைதான்” என்றது அந்தக் குரல்.&lt;br /&gt;ஆமாம் செங்கொடி! கையறு நிலையில் ஒரு சமூகமே நின்றுகொண்டிருக்கையில் வேறு வழியின்றிதான் இந்த நிலைக்கு நீ வந்திருப்பாய்.  உன் மரணம் தமிழக அரசிற்கு விடப்பட்ட எச்சரிக்கை மணியென்பதை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சொல்கிறது. முதல்நாள் குடியரசுத்தலைவரின் ஆணையை மாற்ற முதல்வருக்கு அதிகாரமில்லை என்றவர் மறுநாளே இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியதில் உன் மரணத்திற்கும், உன் உடலைச் சுமந்து காஞ்சி நகர் வீதிகளில் வந்த அந்த ஊர்வலத்திற்கும் பங்கிருக்கிறது. ஒரு வகையில் நீ நினைத்ததை சாதித்துவிட்டாய். ஆனால் நீ எங்களுக்குத் திரும்பக் கிடைப்பாயா? தலித்-பழங்குடி சமூகமான இருளர் சமூகத்திலிருந்து  சமூகத்திற்காகப் போராட வந்த, போராட்ட குணம் கொண்ட,  உன்னை நாங்கள் இழந்து விட்டோமே! இந்த இழப்பை ஈடுசெய்ய முடியுமா? உன் மரணத்திற்குப் பின் உன் பாதையை பலர் தேர்ந்தெடுத்துவிடக்கூடாதே என்கிற பதைபதைப்பு தந்த பலரின் மரண அவஸ்தையை வார்த்தைகளில் விவரிக்க இயலாது செங்கொடி! நீ போய்விட்டாய். ஆனால் உன்னை யாரும் பின் தொடர்ந்து விடக்கூடாது என்பதே எங்கள் கவலை. உயிரின் மதிப்பு உன்னை இழந்த பின் அதிகம் தெரிகிறது செங்கொடி! மூவர் உயிர்காக்க நடந்த போராட்டத்தில் உன் உயிரை நீ மாய்த்துக் கொளவதை எப்படிச் சகிப்பது? பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் உன் மரணச்செய்தி கேட்டபோது துடித்துக் கதறினார். “வேண்டாம் பிள்ளைகளா! நான் என் மகனின் உயிரைக் காப்பாற்றத்தானே 21 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். இன்னொரு உயிரைக் கொடுத்தா என் மகன் உயிரைக் காக்க வேண்டும். ஏன் இப்படிச் செய்தாய் செங்கொடி?” என்று கதறினார். தீராத துன்பத்தை உன் மரணம் அவருக்குத் தந்து விட்டதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;செங்கொடி! இப்படி போராட்டக்களத்தில் ஒவ்வொருவரும் உயிர் நீக்க நினைத்தால்...போராடயாரிருப்பார்? உன்னோடு போகட்டும் இந்த உயிர் நீக்கும் போராட்டம். வேறொருவர் இப்படி உயிர்நீத்து “ஆமாம்! எங்கள் சமூகம் வழிகாட்டுதலின்றித்தான் இருக்கிறது.” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வேண்டாம்! இது எங்கள் கனவு. ஆனால் கனவுகள் அனைத்தும் உண்மையாகி விடுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டத்தன்மை மற்றும் போராட்டக் களத்தின் மீதான விமர்சனமாய் உன் மரணத்தை நீ அளிக்க, அதைக் கொச்சைப்படுத்தி ஆதாயம் தேடும் ஊடகங்களின் பார்ப்பன ஆணாதிக்கத் திமிரை அடக்க பல கோடி செங்கொடிகள் உருவாகி, உயிர் நீக்காமல் போராட வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;செங்கொடி! உனக்குப் பிரியாவிடை கொடுத்தனுப்பினோம். நீ வாழ்கிறாய் எங்கள் நெஞ்சங்களில்! ஆனால், எங்கள் நெஞ்சங்களில் வாழ்வதை விட, எங்களோடு நீ வாழ்ந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்போம். இந்த மகிழ்ச்சியை தமிழ்ச்சமூகம் எங்களுக்கு விட்டு வைக்குமா? இனியாவது?&lt;br /&gt;இந்தக் கேள்விக்கு விடை உன்னைப்போன்ற, என்னைப்போன்ற யார் கையிலும் இல்லை. ஒரு தலைமையோ, வழிகாட்டுதலோ இல்லாத இச்சமூகம் என்ன செய்யப் போகிறது?  தற்கொலைகளால் போராட்டக்களத்தை நிரப்பப் போகிறதா? நம் வரலாறு தற்கொலைத் தேதிகளால் எழுதப்படுமா?&lt;br /&gt;&lt;br /&gt;சாதியை கணக்கிலெடுக்காத தமிழ்த்தேசியமும்,  மக்களின் விருப்பத்தை அல்ல இயக்கத் தொண்டர்களின் விருப்பத்தைக்கூட அறியாத இடது அரசியலும்,  தங்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியமல் தொடர்ந்து தங்களின் இருப்புக்காய் போராடும் தலித் அரசியலும்,  தொடங்கிய பாதையை விட்டு வெகுதூரம் போய்விட்ட திராவிட அரசியலும், எங்கனம் எங்களுக்குத் வழிகாட்டக் கூடும்? இந்த உண்மையை உரக்கச் சொல்வதற்காக நீ மாய்த்துக்கொண்டாயோ?&lt;br /&gt;&lt;br /&gt;செங்கொடி! உன்னை யாரும் பின் தொடர்கிறார்களா என்று திரும்பிப் பார்த்துக்கொண்டே உன் பாதையில் செல்! பின் தொடர்ந்தால் கொலைகள் தொடர்கின்றன என்று பொருள். அது தனிமனிதக் கொலை அல்ல. ஒரு சமூகக் கொலை. சித்தாந்தங்களை கற்பித்தவர்களின் தோல்வி. கற்றுக்கொண்டவர்களின் தோல்வி. கையறு நிலையின் வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதாவது செய்யச் சொல்கிறது உணர்வு. என்னவென்று கேட்கிறது அறிவு. உணர்வுக்கும், அறிவுக்குமான ஊடாட்டத்தில் மெல்ல விலகுகிறது பனித்திரை. எதிரே பிரம்மாண்டமாய் நிற்கிறது என் கையறு நிலை. கிழித்துச்செல்ல எத்தனிக்கிறேன். கிழிபட்டுப் போகிறேன். கிழிசல் ஓட்டைகளுக்கு இடையே நம்பிக்கை கண் சிமிட்டுகிறது நட்சத்திரங்களின் வடிவில்! – இப்படித்தான் முடிக்க நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை தோழி! கிழிபட்டுப் போவதுதான் தற்போதைய அரசியல் சூழலில் சாத்தியம். உனக்கு நேர்ந்ததும் இதுவே.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்துக் கதவுகளும் இறுக மூடிக்கொண்ட ஒரு வீட்டினுள், வெளியேற இயலாமல், மீட்பருக்காகக் காத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு சின்னஞ்சிறு குழந்தையைப் போல இன்னும் எத்தனை காலம் கழியப்போகிறது? விடைகாண இயலாத இப்படியான பல கேள்விகளால் நிறைந்திருக்கிறது மனம். கேள்விகளின் கனம் போலவே துயரத்தின் கனமும்,  இப்பூமியில் காற்று நிரம்பியிருப்பது போல மனமெங்கும் நிரம்பியிருக்கின்றது தோழி!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு,&lt;br /&gt;உன் தோழி&lt;br /&gt;நன்றி : கவின் மலர் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4778918875738452370-557471145674620672?l=raavanaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/557471145674620672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/557471145674620672'/><link rel='alternate' type='text/html' href='http://raavanaa.blogspot.com/2011/09/blog-post.html' title='தோழி செங்கொடிக்கு!  மாற்றான் தோட்டத்து மலர்.'/><author><name>ராவணா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-2guLEJkdzew/TmmmpcFCWdI/AAAAAAAAAEE/AUw_71eh-8E/s72-c/319653_2402401942729_1331491626_2859032_945460113_n.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4778918875738452370.post-8086630189242545066</id><published>2011-07-23T22:32:00.000-07:00</published><updated>2011-07-23T22:32:28.030-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-OB6wwMgyRNw/TiuuY3MGhSI/AAAAAAAAAD4/pZWgn2QQ8kM/s1600/buddha_big.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="306" src="http://1.bp.blogspot.com/-OB6wwMgyRNw/TiuuY3MGhSI/AAAAAAAAAD4/pZWgn2QQ8kM/s320/buddha_big.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கந்தல் கோவணம்! &lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;வெற்றி தோல்வி! &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;நடந்து முடிந்த உள்ளூராச்சி  மன்ற  தேர்தலில் தமிழர் தரப்பு வெற்றி அடைய போகுதா தோல்வி  அடைய போகுதா என்பது முக்கியம் அல்ல, இது    சிங்களவனும் , சிங்கள இராணுவமும்  சேர்ந்து  நடத்தும்  தேர்தல். இதில தமிழர் தரப்பு வென்றால் என்ன  தோற்றால்  என்ன,  என்ன நடந்தாலும்   சிங்களம் சங்கிலியன் சிலைகளையும் , பண்டார வன்னியன் சிலைகளையும் அழித்துக்கொண்டே தான் இருக்கும் அதில் மாற்று கருத்துக்கு இடமேதும் இல்லை. கடத்தல்கள் , கொலைகள் பாலியல் வன்முறைகள் நடந்தவண்ணமே தான் இருக்கும், ஒட்டுக்குழுக்களும், ஓட்டாக்குளுக்களும்  வலம்  வந்தவண்ணமே  தான் இருப்பார்கள் . இருப்பினும் வெற்றி செய்தி தமிழர் தரப்பிற்கு மகிழ்ச்சிதான். &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;இத்தேர்தலில் வென்று எதை நம்மால் சாதிக்க முடியும்? நகரத்திலையோ, கிராமத்திலையோ கழிவறைய கட்டுவதானாலும் சரி சுத்தப்படுத்துவதானாலும்       சரி புத்தனின் ஆசி பெற வேணும்.   இதன் மூலம்  ஏதேனும்  சம  வாய்ப்பையோ , இல்ல சம      சம  உரிமைகளையோ   சிங்களம் தந்துவிட போகிறதா? இல்லவே இல்லையே போதாததுக்கு ஒன்றே ஒன்று செய்யலாம் ?  சிங்களத்தின் சதி திட்ட விகிதாசார தேர்தல் முறைப்படி   சொற்ப  வாக்கு வித்தியாசத்தில் , ஒரு சில உறுப்பினர்களை அதிகமாக பெற்று, கள்ள வாக்குகள், காடையர்கள், குண்டர்கள், இதெயெல்லாம் தாண்டி  உலகத்துக்கு "நாம் தமிழர்" என்பதனை நிரூபிக்கலாம். அதைவிட வேறெதுவும் நடக்க போறது இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;  &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;யாருக்கு இலாபம்? &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;இந்த தேர்தல் மூலம்  சிங்களத்திற்கே  மிக அனுகூலமான நன்மைகள் நடந்தேற போகின்றன! &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;உலகத்துக்கு தமிழர்களும் சிங்களவர்களும்   ஒன்றாக   இருக்குறோம் என்று காட்ட இந்த தேர்தலை  பயன் படுத்தலாம் &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;நாட்டில எந்தவிதமான பிரச்சினைகளும்   இல்லை என்பதை காண்பிக்கலாம்&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அடக்குமுறை மூலம் சில  வெற்றிகளை   பெற்று தமிழர்களே  சிங்கள   கட்ச்சிகளை  ஏற்றுகொள்கிறார்கள்  என்பதனை கான்பிக்காம்&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;எந்தவிதமான தீர்வு திட்டமோ ,    அதிகார பகிர்வோ  தேவை இல்லை நிரூபிக்கலாம். &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;மொத்தத்தில ஒரு தேர்தல ஒரு இனபடுகொலை அரசு நடத்தி சில வெற்றிகளை பெற்றால் இந்த உலக யனநாயக பயங்கரவாத நாடுகள் , அந்த  நாட்டில எந்த   பிரச்சினையும்   இல்லை என்பதனை ஏற்று கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.   அகவே இந்த தேர்தல் நமக்கு ஆப்பே  தவிர வேறொன்றும் இல்லை. சரி பாடையை தூக்கி விட்டார்கள்  சுடலை வரை  கொண்டு செல்லட்டும்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;கூட்டமைப்பு,  ராசபக்சே பேச்சு? &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;ஏன் நாம் சிங்களத்துடன் பேச வேண்டும்?   60  ஆண்டுகளுக்கு  மேலாக   சிங்களத்துடன்   பேசியாகிவிட்டது, ஐந்து நூறு ஆயிரம் மக்களையும், மாவீரர்களையும் வித்தாக கொடுத்தாகி விட்டது , எந்த மனித குலமோ, உயிரினமோ கண்டிராத பேரழிவை, கொடூரமான, சகிக்க முடியாத கொடுமைகளை  சிங்களமும் , இந்திதியாவும்  நமக்கு  ஏற்படுத்தி விட்டன. &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;இப்படி கொடுரமானவர்களுடன் ஏன் பேச வேண்டும்? இவர்கள் என்னத்தை தந்து கிழிக்க போகிறார்கள்? இப்படியே இவர்களுடன் பேசி பேசி அறுபதாண்டு காலம் ஓடி விட்டன , அதில் ராசா பக்ச ஆனாலும் சரி , ரணில் ஆனாலும் சரி தமிழர் தரப்புக்கு எந்த  விதமான எலும்பு துண்டை போடவும் தயாராக இல்லை. இப்படியே போனால் பல அறுபதான்டுகளை கடக்க வேண்டி இருக்கும். சிங்களம்  என்றைக்குமே  மாறாதது,   நாம   தான் சுக்கிரீவன் தொடக்கம் கருணாநிதிவரை துரோகிகளாகி தூள் கிளப்புறம்.  ஆனா படியால்  இந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலத்தி இருப்பதே மிக மிக நல்லது. &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;காந்தியின் கோவணம்!!!!!!!!!!&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;இந்திரா யீ , ராசீவ் யீ    சோனியா யீ வரை  இந்த கோவணத்தை கட்டி கட்டி அவுதாச்சு, அனா   எவராவது அத துவைப்பார் இல்ல . 1987  ராசீவ் யீ  இதில ஒரு துண்ட கிழிச்சு ஜே அர் இற்கு கட்டிவிட , அத ராசபக்ச அவுத்து இப்ப எனக்கு அளவில்லா இந்த கோவணம் பழசு மணக்குது   வேண்டாம் எண்டுறான், எல்லாரும் கிழிச்சாச்சு மீதமுள்ள கோவணம் நமக்கு சரிப்பட்டு வராது எண்டு தமிழர் தரப்பு நாமள்  சொல்லுறம் .  2009    இல்  சோனியா யீ    இந்த துண்டில் ஒருதுண்ட கிழிச்சு கருணாநிதிக்கு  வாயுக்க திணிச்சி வாய அடைச்சத கேள்வி!  இடைக்கிட சிவசங்கர் மேனன், நாராயணன், நருபமா  பாதிய பாதி பாதியா  கிழிச்சு கட்டிக்கொண்டு டெல்லி யும் கொழும்புமா  பரந்த்தொண்டு   திரியுறாங்கள்  அதிண்ட மனம் தாங்காமல் பாதி தமிழன் செத்தே போயிட்டான். இன்னும்  இந்தியா காரன் இந்த கோவணத்த கட்டி கிட்டு  பரப்பனாக  இருந்தால் மீதமுள்ள தமிழனும் செத்தே போயிடுவான்  மணம் தாங்க முடியாமல். மொத்தத்தில  வேட்டியோட    திரிஞ்ச   தமிழன இந்தியாக்காரன் கொவனமும்  இல்லாமல் ஆக்கிட்டான் அம்புட்டு பெருமைக்கு உரியவன் அவன்தான் அதுதான் உண்மை.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;மீண்டும் இந்த கந்தல் கோவணத்த இந்தியகாரன் கொண்டு திரியுறான் தமிழர்  தரப்பிற்கு  கட்டிவிட இதை தமிழர் தரப்பு ஏற்று கொண்டால் மீண்டும்  1000  ஆண்டுகள் கந்தல் , கட்டமுடியாத கோவணத்தோட . இல்ல  அம்மணமா தான்   தமிழன் திரிய வேண்டி இருக்கும், ஆனபடியால் இதை தீயிட்டு கொளுத்துவதே நல்லது, அதை விடுத்து வல்லாதிக்க இந்திய  கொலைகாரர்களுக்கு அடிபணிந்தது மீண்டும் ஒரு  வரலாற்று   தவறை தமிழர் தரப்பு செய்ய கூட்டாது என்பதே  தமிழர் கனவு. &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;சிங்களத்தின் சூழ்ச்சி?&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;எந்த சிங்கள கட்ச்சிக்கோ , இல்ல சிங்கள மக்களுக்கோ தமிழர் தரப்பு  உரிமையை      விட்டு கொடுக்க எண்ணமில்லை உது தான் அடிப்படை உண்மை, இப்ப சிங்களம் இனப்படுகொலையில மாட்டி கொண்டு தன்ன காப்பாத்த யார் வருவார் என்று நடு  நடுங்குகிறது , அனால் முழு  சிங்கள  தேசமும் ஒன்னாக எதிர்கொள்ள தயாராகி நிக்குறது, அனால் நம்ம  ச்க்கிரீவன் வளிவந்த  கருணா, டக்ளச்சு  சிங்கள கொலை காரர்களை பல்லக்கில தூக்குராணுக .    இந்த    காந்தி நாட்டு பயங்கர வாதிகளும் கொலை  நடுங்குராணுங்கள்    , எங்க ராசபக்கச எல்லா  தமிழ் இனத்தை  அழிக்க சொல்லி குடுத்த தகவல்கள,  இராணுவ உதவிகள மற்றும்  எல்லா இரகசித்தையும் வெளியிட்டு விடுவானே?,  சனல் 4  மாதிரி , டெல்லி 4   என்று தயாரிச்சு ராசா பக்ச வெளிய்ட்ட்டு விடுவானோ? , நாம என்ன பண்ணலாம்?, நம்ம  அகிம்சை காந்திண்ட கோவணமும் உலகலவில கிழிச்சு போடுமே, நாற வெளிக்குட்டுடுமே  என்னு  கலங்குறான். .  &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அப்படி   எதுகும்  குடுக்காத சிங்களம் நின்மதிய இருக்க முடியாது அதனால புத்தனும் காந்தியும் சேர்ந்து ஆத்தாக் கொடுமைக்கு அந்த 1987  ஆம் ஆண்டு ராசீவ் கோவணத்த திருப்ப தமிழனுக்கு கட்டிவிட முயற்சிக்கலாம்   , அதான் இப்ப இருந்தே பேசுறான் 13  ஆவது திருத்த சட்டம் திருத்த சட்டம் என்னு, அந்த கொதாரில ஒண்ணுமே இல்ல , இருந்தாப்போல     அதற்கும் மேல எண்டுறன் அதற்கும் மேல 14  தான். அது தமிழர் நிலங்கள வடக்கு, கிழக்கு என கூறுபோட்டு  , நம்மள பிரிக்குறது இதுதான் முதல் சதி., எந்நேரத்திலும் மாநில ஆட்சி கலைக்க படுமாம் அந்த காந்திண்ட ஆலோசன. தமிழனுக்கும் புத்தனுக்கும் நடுவில தரகரா  வந்து தானே கையொப்பம் இட்டவன் இந்த முட்டாள் காந்தி. அப்ப இவன எப்படி  இன்னும் நம்புறது ?, அதனால் தான் அது வேண்டாம் என்னுதானே காந்திய பயங்கரவாதிகளோட மோதினோம், தன்னுடைய ஊழலை மறைக்க ராசீவ் இவளவு  படு கொலைகளையும் புரிந்தானே படுபாவி (அதான் தலை சிதறி சாவானான்). இறுதியா 100000  அப்பாவி மக்களை  கொண்ணு  காந்தி தான்  உலகத்திலேயே அகிம்சா ( கொலைகார ) மூர்த்தி எண்டு காட்டி   புட்டான் , இடக்குட அது உள்ள நாட்டு பிடச்சின, உள்ள நாட்டு பிடச்சின என்று பீலா வேற. சுமசும், பகவத் சிங்கும் நாட்டுக்காக போராடிய மாவீரர்கள், நாமள்    எல்லாம் பயங்கர வாதிகள், இந்தியா காரண்ட அளப்பய    கேட்டால் நச்ச குடுச்சி செத்திடலாம்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அவசரமும் அவசியமும் (தமிழ் கூட்டமைப்பு)&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;இனி ஒண்ணுமே செய்ய முடியாது, அதனால  தருவதை தரட்டும்  என்று எண்ணி தமிழர் தரப்பு சிங்களத்திடம் பேச்சுவார்த்தை என்னும்  குழினுள்    விழுந்து விட கூடாது, சிங்களம் ஆத்தாக் கொடுமைக்கு இப்படியான தீர்வு திட்டங்களை காந்தி உடன் சேர்ந்து  திணிக்க  பாக்குறது. இதி சரியாக புரிந்து கொண்ண்டு இப்பேச்சு வர்த்தியை புறக்கணிக்க வேண்டும்,  புத்தனுடன்  நாம் இனி பேச வேண்டிய அவசியம் இல்லை, தமிழ் ஈழ பிரச்சினை  என்பது தற்போது உலகளாவிய ரீதியில் முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது ., அதனால் சிங்கள இந்திய சதி வலைக்குள் நாம் விளுவோமானால் மீண்டும் 1000  வருடங்களுக்கு நாம் அடிமைப்பட்டு கிடக்க நேரிடும் , இன்று உலகம் நம்ம பக்கம் உள்ளது இதை சரியாக பயன் படுத்தி கொள்ள வேண்டும்,அப்படியானால் என்ன பன்னலா.இந்த பேச்சு வார்த்தையில் இருந்தது தமிழர் தரப்பு விலக வேண்ண்டும். இதுதான் இந்த விடுதலை போராட்டத்துக்காக இன்னுயிரை கொடுத்த மாவீரர்களுக்கும், மக்களுக்கும் கூட்டமைப்பு செய்யும் முதல் கடமையாக இருக்கும்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;சில கோரிக்கைகளை  முன்னுறுத்தி &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அப்படி விலகாமல் பேசுவதானால் சில கோரிக்கைகளை  முன்னுறுத்தி  புத்தனுடன் பேசலாம் அதாவதுய் இன்று உலகம் நமது பக்கம் இருப்பதை பயன் படுத்தி &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;நாம் 50 /50  ஐபதுக்கு ஐம்பது என்ற கோரிக்கையை முன் வைத்து பேச வேண்டும்  அதற்க்கு சிங்களம் ஒத்து  வராத விடத்து  &lt;/div&gt;&lt;div&gt; ஒன்று  பட்ட சிறி லங்காவிற்க்குள் குப்பை கொட்டுவதா இல்ல தனித்து பிரிந்து செல்வதா  என்பதனை, எமது தலைவிதியை தீர்மானிக்க தமிழ் மக்களிடம் அதாவது வடக்கு கிழக்கு , புலம் பெயர்  தமிழரிடம்   உலக பார்வையுடன் தென் &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;சூடானில் நடந்ததை போன்ற................&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;வாக்கெடுப்பை நடத்த உலக நாடுகளிடம் , ஐ நா சபையிடம், ( பாண் கீ மூன் இருக்கும்வர அது முடியாது , ஏன்னா   அவரு சோனியா யி சம்பந்தி அல்ல வா!?), கோரலாம். &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;அதுக்கும் முடியாவிடத்து  நம்மை நாமே தனி நாடாக பிரகடன படித்தி கொள்ள வேண்டியதுதான். &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;நமக்கு நீண்ட நாளா ஒரு கேள்வி மனச குடையிறது, அது என்ன சிறி லங்காவின் அனைத்து மக்களும் ஏற்று கொள்ள கூடிய தீர்வை சிறி லங்கா அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று , இந்த காந்திய பயங்கரவாதிகளும் சில சிறி லங்கா நடப்பு நாடுகளும் ஊளை இடுகின்றன,   வீனா போன பய புள்ளகளா , தமிழ் மக்களுக்கு தான்  பிரச்சன   , அப்புறம் ஏன்  அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள   கூடிய தீர்வை எட்ட வேண்டும்?    , அவர்கள் விரும்பிற தீர்வைதானே  அவர்களுக்கு வழங்க வேண்டும் , அனைத்து மக்களும் விருப்பபடுற தீர்வென்றால் சிங்கள பயங்கர வாதிகள் விரும்ப மாட்டார்கள் தமிழர்களுக்கு   நியாயமான தீர்வு கிடைக்க, அப்புறம்  எப்படி  தீர்வை வைக்குறது? இந்த காந்திய பயங்கர வாதிகளின் சூழ்ச்சி  பட்டு கேவலமானதும் கொடுமையானதும் அப்பா. &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; மீண்டும் ஒரு வரலாற்று தவறை.................... !&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;மீண்டும் ஒரு வரலாற்று தவறை தமிழன்  செய்வானே  அனால் அது இன்னும்   பல நூறு  ஆண்டுக்ளளுக்கு மேலாக தமிழ் இனத்தை அழிவு பாதிக்கும் , அடிமை நிலைக்கும் இட்டு செல்லும். அதாவது&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அன்று &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;சுந்தரலிங்கம்  ஒரு  கையெழுத்தினை    இட்டதினால் நாம் இன்று 1000   ஆண்டு அடிமை தனத்தில் இருந்து மீளவில்லை, யி.யி பொன்னம்பலம் ஒரே ஒரு  வாக்கை  இட்டு நமது 500000    மக்களை எதிலிகலாக்கிய ,  நிலை மீண்டும் நமை வந்தடைய கூடாது&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;இன்று &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; மீண்டும்  சம்பந்தன்( சுந்தரலிங் )களும்  , டக்லச் (பொன்னம்பலங்)களும்   செய்யம் தவறினால் 100  ஆண்டுகள் சென்றபின் எனது அடுத்த தலைமுறை ............&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;"நாடுகள் தோறும் நாம் அகதியாய் அலைந்தோம், கேட்ப்பார் இல்லாமல் நாம் ஊர்  ஊராய்  திரிந்தோம்  "&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;என்ற நிலை  தடற கூடாது  என்பதே தமிழ் இனத்தின் அவா , அதனால் அவசர படாமல் சரியான சந்தர்ப்பங்களை பயன் படுத்து, தனிச்சைக்கான முடிபுகளை எடுக்காது,  உலக தமிழருடனும் , புலம் பெயர் தமிழருடனும் ,தமிழ்  ஈழ தமிழருடனும்  மற்றும் நமக்கு ஆதரவான அமைப்புகளுடனும், நாடுகளுடனும் அகல்ந்தலோசித்து    தமிழ்   கூட்டமைப்போ, வேறு எந்த தரப்பாக இருந்தாலும் சரி , மிக சரியான  அவதானமான  முடிபை எடுப்பது சாலச் சிறந்த்துது.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;இல்லை!?&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;காந்தியம் என்னதும் பயங்கரவாதிகளும், இந்திய என்னும் உலக பயங்கர வாத  நாடும் அழிய இன்னும்  500   ஆண்டுகள் ஆகலாம்,  அதுவரை  தமிழ் இனம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு   தள்ளப்படலாம் .  இல்லை தமிழ்  இனமே  அழிவை நோக்கி  முழுமையாக நகர்ந்திருக்கும்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இன்று நாம் நினைத்தால் ஏன் &lt;/div&gt;&lt;div&gt;துனுசியாவாகவும்&lt;/div&gt;&lt;div&gt;எகிப்த்தாகவும் &lt;/div&gt;&lt;div&gt;லிபியாவாகவும் மாற முடியாது ?&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;தவற விடுவோமானால் தமிழன் வாழ்வு "கந்தல் கோவணம்" தான் மீண்டும் ஒரு பிரபாகரன் தோன்ற நூறு ஆண்டுகள் ஆகலாம்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; வணக்கம் &lt;/div&gt;&lt;div&gt; நன்றி &lt;/div&gt;&lt;div&gt; ராவணன்&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4778918875738452370-8086630189242545066?l=raavanaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/8086630189242545066'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/8086630189242545066'/><link rel='alternate' type='text/html' href='http://raavanaa.blogspot.com/2011/07/blog-post_7488.html' title=''/><author><name>ராவணா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-OB6wwMgyRNw/TiuuY3MGhSI/AAAAAAAAAD4/pZWgn2QQ8kM/s72-c/buddha_big.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4778918875738452370.post-645683032453430010</id><published>2011-07-19T21:21:00.000-07:00</published><updated>2011-07-19T21:21:42.343-07:00</updated><title type='text'>வெளியே இருக்கறவங்க எல்லாம் அன்னா ஹசாரே(காந்தி)யும் இல்ல, உள்ள இருக்கறவங்க எல்லாம் ராசா (கோட்ஸே)வும் இல்ல.மாற்றான்  தோட்டத்து மலர் ......திண்ணை .</title><content type='html'>&lt;h2&gt;வெளியே இருக்கறவங்க எல்லாம் அன்னா ஹசாரே(காந்தி)யும்  இல்ல, உள்ள இருக்கறவங்க எல்லாம் ராசா (கோட்ஸே)வும் இல்ல.&lt;br /&gt;&lt;script src="http://cdn.printfriendly.com/printfriendly.js" type="text/javascript"&gt;&lt;/script&gt; &lt;div class="printfriendly" style="color: #55750c; cursor: pointer; margin: 0px; text-align: left; text-decoration: none;"&gt; &lt;/div&gt;&lt;/h2&gt;&lt;h2&gt;&amp;nbsp;&lt;/h2&gt;&lt;h2&gt;&amp;nbsp;&lt;/h2&gt;&lt;h2&gt;&lt;a href="http://puthu.thinnai.com/?p=2520" rel="bookmark" title="Permanent link to ஆள் பாதி ஆடை பாதி"&gt;ஆள் பாதி ஆடை பாதி&lt;/a&gt;&lt;/h2&gt;&lt;h3&gt;&lt;a href="http://puthu.thinnai.com/?author=39"&gt; அ.லெட்சுமணன்&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;div class="entry"&gt;&lt;div class="addtoany_share_save_container"&gt;&lt;div class="a2a_kit a2a_target addtoany_list" id="wpa2a_1"&gt;&lt;a class="a2a_dd addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fputhu.thinnai.com%2F%3Fp%3D2520&amp;amp;title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF&amp;amp;description="&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;script type="text/javascript"&gt;&lt;!--wpa2a.script_load();//--&gt;&lt;/script&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு பொருள் வாங்க செல்ல வேண்டியிருந்தது. வாங்கிய உணவு பொருளை வீட்டுக்கு சென்று பிரித்து பார்த்தபோது தரமில்லாமல் இருப்பது தெரிந்தது. சரி, சிரமத்தைப் பார்க்காமல் திருப்பி கொடுத்து விட்டு, தரமான பொருளை விற்க வலியுறுத்தலாம் என்று தோன்றியது. மறு நாள் கடையின் மேலாளரை சந்தித்து பொருளின் தரக்குறைவை தெரிவித்தேன். புளுவை பார்ப்பது போல் பார்த்தார். எங்கே பொருள் என்று கோபமாக கேட்டார்? பொறுமையாக பொருளை எடுத்துக்கொடுத்தேன். இப்படி அப்படி பார்த்தார். நான் பொய் சொல்கிறென் என்று நினைத்த மாதிரி தான் இருந்தது. சரி. ஒரு பேப்பர் தருகிறேன் உங்கள் குறைபாட்டை எழுதிக்கொடுத்து விட்டு வேறு பொருள் வாங்கி செல்லுங்கள் என்றார். பொறுமையாக கடிதம் எழுதிக்கொடுத்தேன். தரமற்ற பொருளை விற்றுவிட்டோமே என்று வருத்தப்படுவராக இல்லை. இதற்கிடையே ஏரியா மானேஜருக்கு தொலைபேசியில் அழைத்து விபரம் தெரிவித்தார். தொலைபேசியை என்னிடம் கொடுத்தார். ஏரியா மானேஜர் கொஞ்சம் பொறுமையாக விசாரித்தார். அவரிடம் என்னுடைய நோக்கம் புதியதாக பொருள் வாங்கி செல்வதல்ல, தரமற்ற பொருளை 1905-லிருந்து இருப்பதாக சொல்லிக்கொள்ளும் உங்கள் நிறுவனம் விற்பதை சுட்டிக்காட்டுவது தான் என்றேன். புரிந்துகொண்டதாக தான் சொன்னார். மறு நாளே மாதிரியை பெற்று சோதிப்பதாக சொன்னார். நான் வேறு பொருளை வாங்கிகொண்டு வெளியே வந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் விற்ற பொருளில் குறையா என்று இருமாப்புடன் இருந்த ஸ்டோர்ஸ் மானேஜர் நான் ஏரியா மானேஜருடன் பேசிக்கொண்டிருந்த போது கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த எனது அலுவலக முகவரியை படித்திருக்கிறார். ஒரு அலுவலகத்தில் வேலை செய்பவர் என்று தெரிந்த பிறகு என்னை “உட்காருங்க சார்” என்று பலமுறை “சார்” போட்டு பொறுமையாக பேச ஆரம்பித்தார். சரி, ஏன் முதலில் சரியாக பதில் அளிக்கவில்லை என்று யோசித்தேன்?&lt;br /&gt;எல்லாம் இந்த உடை அணியும் விசயத்தில் தான் இருக்கிறது என்று புரிந்தது. பொதுவாக விலை உயர்ந்த ஆடை அணிபவர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள் என்று பார்த்தவுடன் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள். எளிமையாக இருப்பவர்களை எல்லாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவுகட்டி விடுகிறார்கள். ஆனால், உயர்ந்த இடத்தில் இருந்த போதே டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்திருந்ததை பல நிகழ்ச்சிகளில் காண முடிந்தது. அவர் எளிமை புரிந்துக்கொள்ள கூடியதாக தான் இருக்கிறது. ஆனால், உயர்ந்த இடத்துக்கு போய்தான் எளிமையாக இருக்க வேண்டும் போல இருக்கிறது. அப்போதுதான் அது விமர்சிக்கவும் போற்றவும் படும். (தற்போதைய தமிழக முதல்வர் காதணி அணிவது பத்திரிக்கைகாரர்களால் கேள்வி எழுப்பப்பட்டு அவரால் அதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே).&lt;br /&gt;சாதரணர்கள் எளிமையாக இருந்தால் இங்கே உரிய மரியாதையும் கிடைக்காது, அவர்களின் உணர்வுகள் புறக்கணிக்கவும் படும். ஒருவருடைய விருப்பம் சார்ந்த விசயங்கள் எல்லாம் இங்கே ஒருவருடைய அந்தஸ்தோடு தொடர்பு படுத்தப்பட்டுவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு பேர் கூடி ஆங்கிலத்தில் உரையாடும் போது நாம் தமிழில் பேசினால், நாம் தமிழ் பற்றினால் பேசுகிறோம் என்றில்லாமல் நமக்கு ஆங்கிலத்தில் பேச தெரியாது என்று முடிவு செய்துவிடுகிறார்கள்.&lt;br /&gt;மும்பை குண்டு வெடிப்பு முடிந்து சில நாட்கள் கழித்து ஒரு பெரிய ஸாப்பிங் மாலுக்கு செல்ல நேர்ந்தது. கெடுபிடிகள் அதிகமாக இருந்தது. சில நாட்கள் சோதனை இருப்பதும் பின்பு காணாமல் போவதும் திருப்பி குண்டு வெடிப்பு நடந்தவுடன் கண்காணிப்பு அதிகப்படுத்தப்படுவதும் நமக்கு ஒன்றும் புதிதல்லவே?!. நான் வழக்கம் போல என் வசதிக்கு(Convenient)  ஏற்ப எனக்கு வசதியான(Convenient) சாதரண உடையில் சென்றிருந்தேன். கையில் ஒரு பை வைத்திருந்தேன். எனக்கு முன்னாள் சென்றவரும் கையில் ஒரு பை வைத்திருந்தார். மிக நேர்த்தியான உடை அணிந்திருந்தார். அவர் ஒரு சோதனையும் இன்றி உள்ளே அனுப்பபட்டார். என் முறை வந்தது. முழு சோதனைக்குப்பின் அனுமதிக்கப்பட்டேன். சிறிது நாள் கழித்து மும்பை வெடிகுண்டு வழக்கில் கைதான அப்துல் கசாப்பின் புகைப்படத்தை பார்க்க நேர்ந்தது. ஒரு நிறுவனத்தின் மேலதிகாரி போன்ற தோற்றத்துடன் இருந்தான். தீவிரவாதி எல்லாம் எங்களை மாதிரி இருக்க மாட்டான், எனக்கு முன்னாள் போனார் பாரு அவரு மாதிரி தான் இருப்பான்னு யாரு இவங்களுக்கெல்லாம் புரிய வைக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடை என்பது அவரவர் வசதிக்கு(convenient) ஏற்ற படி அணிந்து வருகிறார்கள் என்பதை உணராமல் அவருடைய நேர்மை, நாணயம், வருமானம் இவற்றோடு தொடர்புபடுத்திக்கொண்டு விடுகிறார்கள். இன்றும் கூட கிராமங்களில்(நகரங்களிலும்) மிக எளிமையான உடை உடுத்தி மிகவும் நேர்மையாக வாழும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், தீவிரவாதிகள் எல்லாம் மெத்தப்படித்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசத்தெரிந்து நேர்த்தியான உடை அணியும் கொலைகாரர்களாக இருக்கிறார்கள்.&lt;br /&gt;இதனுடைய மறு பக்கத்தை இயக்குனர் மகேந்திரன் அவர்கள்(ஆமா, இவர் தமிழ் சினிமாவில் நிறைய புரட்சி செய்திருக்கிறாரே, இவருக்கு ஒரு புரட்சி பட்டம் கூட தரலியே?!!!) பதிவு செய்திருக்கிறார்.&lt;br /&gt;இவருக்கு முன்புவரை ஒரு கொடுமைக்காரன் என்பவன்(தமிழ் சினிமா வில்லன்) கடா மீசையுடன், தொப்பி வைத்து முடிந்தவரை அலங்கோலமாக சட்டை, பாண்ட் அணிந்து அனைவரையும் மிரட்டிக் கொண்டிருப்பான். ஒரு கொடுமைக்காரன் ஒரு குடும்பத்தின் தலைவனாகவும் இருக்க முடியும் என்பதை “உதிரிப்பூக்கள்” சொல்கிறது. உதிரிப்பூக்கள் நாயகன் விஜயனின் நடை, உடை, பாவனை எல்லாம் வெகு இயல்பாகவும் சாதாரணமாகவும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி. இது ஒருபுறம் இருக்கட்டும். இப்பொழுதெல்லாம் கணினி நிறுவனங்களையும் சேர்த்து தானே எல்லாவற்றையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. அங்கே என்ன நிலைமை என்று விசாரித்தேன். அங்கே “Dress Code” என்று ஒன்று இருக்கிறது என்றார்கள். அப்பாடா! இங்கே நிலைமை கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கே என்று தோன்றியது. அது என்ன “Dress Code”, கோடு போட்ட ட்ரெஸ் போட்டு வரவேண்டுமா என்று என் அறியாமையை வெளிப்படுத்தினேன். அப்படி இல்லை திங்கள் முதல் வியாழன் வரை மிக நேர்த்தியான உடை அணிந்து ஷூ எல்லாம் போட்டு வரவேண்டும் என்றார்கள். சரி அப்ப வெள்ளிகிழமை என்றேன். அன்றைக்கு எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்றார்கள். நானும் விடாமல் எப்படி வேண்டுமானாலும் என்றால் எப்படிதான் வருவார்கள் என்றேன். ஆண்கள் அரைக்கால் டிரவுசருடன் கூட (பெர்முடாஸ்ன்னு சொல்லாட்டி கோவிச்சுக்க போறாங்க) வரலாம் என்றார்கள். சரி, பெண்கள் என்றேன். அவர்களும்தான் என்றார்கள். இந்த புது வகையான  “Dress Code” விளக்கத்தை கேட்டவுடன் தலை சுற்றியதுடா சாமி!.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரிந்த பெண் ஒருவர் பெரிய கணினி நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். ஒரு வெள்ளிக்கிழமை அலுவலகம் சென்ற அவர் மதியமே திரும்பி வந்து மிகுந்த வருத்தத்துடன் இருந்தார். என்ன விசயம் என்றேன்? அவர் வெள்ளிக்கிழமை “Dress Code” – ல் சென்றிருக்கிறார். என்றைக்கும் இல்லாத திருநாளாக புராஜெக்ட் மானேஜர் பக்கத்தில் உட்கார சொல்லி, மேலே இருக்கும் அந்த file-ஐ எடு, இந்த சிடி-யை எடு என்று தொல்லை கொடுத்திருக்கிறார். மிகவும் நொந்து போய் வீட்டுக்கு வந்து வருந்திக்கொண்டிருந்தார். அந்த மனிதர் மிக உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு மிக நேர்த்தியான ஆடைகளை அணிந்து அலுவலகத்திற்கு காரில் வந்து செல்வாராம்.&lt;br /&gt;இதுபோன்ற பாலியல் வன்முறைகள் சக மனிதர்கள் மீது எல்லா தளங்களிலும் எல்லா காலங்களிலும் நடந்தப்பட்ட வண்ணமே இருக்கின்றது. ஆசிரியர் – மாணவி, மானேஜர் – காரியதரிசி, கொத்தனார் – சித்தாள், டாக்டர்-நர்ஸ், புராஜெக்ட் மானேஜர் – டெவலப்பர், வீட்டு முதலாளி – வேலைக்காரி என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.&lt;br /&gt;ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னார்  ”உலகத்திலேயே மிகப்பெரிய வன்முறை நம்மை திருப்பி அடிக்க முடியாதவரை போட்டு அடிப்பதுதான்” என்று. அந்த வன்முறை தான் இங்கே நடக்கிறது.&lt;br /&gt;முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் அரசு அலுவலத்தில் அரைக்கால் டிரவுசருடன் வந்ததை பார்க்க நேர்ந்தது. இதைப்பார்த்து ஊழியர்கள் ஒரு அலுவலகத்திற்கு எப்படி உடை அணிந்து வரவேண்டும் என்று கூடவா தெரியாது என்று முகம் சுழித்ததை அவர் எங்கே கவனித்தார்?&lt;br /&gt;ஒரு எழுத்தாளர் முழு நீள லுங்கியுடன் பிரவுசிங் சென்டருக்கு சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டதையும், அரைக்கால் டிரவுசருடன் சென்றவர்கள் எல்லாம் அனுமதிக்கப்பட்தையும் குறித்து வார இதழ் ஒன்றில் வருந்தி இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் ஒருவரின் புதிய அலுவலத் திறப்பு விழாவிற்கு பெண் ஊழியர்கள் அனைவரும் சேலையில் வந்திருந்ததை பார்த்த அவர்களின் வெளிநாட்டு முதலாளி ஆண்களை பார்த்து நீங்கள் எல்லாம் ஏன் உங்கள் பாரம்பரிய உடையில் வரவில்லை என்று வியந்திருக்கிறார். எல்லாரும் நெளிந்துவிட்டு பிறிதொரு சமயம் வேட்டி, சட்டையில் சென்றதாக தெரிவித்தார். அதுவும் ஒரு கணினி நிறுவனம் தான்.&lt;br /&gt;சரி. இருக்கட்டும். இதனால் சகலாமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,&lt;br /&gt;”தொழுதகை யுள்ளும் படை யொடுங்கும் ஒன்னார்&lt;br /&gt;அழுதகண் ணீரும் அனைத்து”.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே இருக்கறவங்க எல்லாம் அன்னா ஹசாரே(காந்தி)யும்  இல்ல, உள்ள இருக்கறவங்க எல்லாம் ராசா (கோட்ஸே)வும் இல்ல.&lt;br /&gt;&lt;script src="http://cdn.printfriendly.com/printfriendly.js" type="text/javascript"&gt;&lt;/script&gt; &lt;div class="printfriendly" style="color: #55750c; cursor: pointer; margin: 0px; text-align: left; text-decoration: none;"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4778918875738452370-645683032453430010?l=raavanaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/645683032453430010'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/645683032453430010'/><link rel='alternate' type='text/html' href='http://raavanaa.blogspot.com/2011/07/blog-post_19.html' title='வெளியே இருக்கறவங்க எல்லாம் அன்னா ஹசாரே(காந்தி)யும் இல்ல, உள்ள இருக்கறவங்க எல்லாம் ராசா (கோட்ஸே)வும் இல்ல.மாற்றான்  தோட்டத்து மலர் ......திண்ணை .'/><author><name>ராவணா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4778918875738452370.post-8544078106406066523</id><published>2011-07-15T21:10:00.000-07:00</published><updated>2011-07-15T21:10:18.600-07:00</updated><title type='text'>மாற்றான் தோட்டத்து மலர்..சண்டே இந்தியன் இதழ்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-S5jtQ1YMJ3Y/TiEO6azfOaI/AAAAAAAAADo/_PwPItuTNBQ/s1600/dmk_meet_mk.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="290" src="http://1.bp.blogspot.com/-S5jtQ1YMJ3Y/TiEO6azfOaI/AAAAAAAAADo/_PwPItuTNBQ/s320/dmk_meet_mk.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="text-decoration: underline;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;பொதுக்குழு பரபரப்பு&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;தி….&lt;/strong&gt;க்கு            &lt;strong&gt;மு…..&lt;/strong&gt;க்காடும்           &lt;strong&gt;க…..&lt;/strong&gt;ட்சி?&lt;/div&gt;திமுக இப்போது  செய்யவேண்டிய முக்கிய ஐந்து சீர்திருத்தங்கள் என்ன? என்று அரசியல் சமூக விமர்சகர்கள், எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டோம். சில தீவிரமான, உபயோகமான, கிண்டலான யோசனைகள் கிடைத்தன.&lt;br /&gt;&lt;strong&gt;ஞாநி,  விமர்சகர்&lt;a href="http://pamaran.files.wordpress.com/2011/07/gnani01.jpg"&gt;&lt;img alt="" class="alignright size-full wp-image-629" height="362" src="http://pamaran.files.wordpress.com/2011/07/gnani01.jpg?w=300&amp;amp;h=362" title="gnani01" width="300" /&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;  &lt;br /&gt;1  திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்குவது. அதாவது மு.க.ஸ்டாலின் நீங்கலாக மற்றவர்களை கட்சியிலிருந்து நீக்கவேண்டும்.&lt;br /&gt;2  ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியில் குடும்ப ஆதிக்கத்தைத் தடுப்பது. தந்தை மாவட்டச் செயலாளர் என்றால் மகனும் பொறுப்பில் இருப்பதை தடை செய்ய வேண்டும். அவர்களை கட்சியிலிருந்து நீக்கவேண்டும்.&lt;br /&gt;3 ஒரு முறையான உட்கட்சித் தேர்தலை நடத்தவேண்டும். அந்தத் தேர்தலை தேர்தல் ஆணைய அதிகாரிகளின் முன்னிலையில் நடத்தலாம்.&lt;br /&gt;4  கட்சித் தொண்டர்களுக்கு ஐம்பதுகளில் நடத்தியதுபோல வாசக சாலைகள் ஏற்படுத்தவேண்டும். திராவிட இயக்கம் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களின் வரலாறு பற்றிய வகுப்புகளை நடத்தவேண்டும்.&lt;br /&gt;5  கட்சியில் யார் எந்தப் பொறுப்புக்கு வந்தாலும், அவர்கள் ஓர் ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் சொத்துக்கணக்கைக் காட்டவேண்டும்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;பாமரன்,  விமர்சகர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://pamaran.files.wordpress.com/2011/07/dsc_0027.jpg"&gt;&lt;img alt="" class="alignleft size-full wp-image-630" height="308" src="http://pamaran.files.wordpress.com/2011/07/dsc_0027.jpg?w=460&amp;amp;h=308" title="DSC_0027" width="460" /&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;1   திராவிடர்களுக்கான சகல தேவைகளையும் கழகம் பூர்த்தி செய்துவிட்டபடியால் திமுக என்கிற அதன் பெயரை சோமுக என்று மாற்றம் செய்யவேண்டும். (அதாகப்பட்டது சோனியா முன்னேற்றக் கழகம்)&lt;br /&gt;2   பேரன் பேத்தி, மாமன் மச்சான், கொழுந்தனார் நாத்தனார் தவிர வேறுயாரும் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிக்குப் போட்டியிடக்கூடாது.&lt;br /&gt;3 சினிமா எடுப்பது, பத்திரிகை நடத்துவது, டிவி காட்டுவது தொடங்கி, ஆணுறைக்கான கம்பெனி வரைக்கும் குடும்ப உறுப்பினர்களே நிர்வாக இயக்குனர்களாக இருந்து தமிழ்ப்பண்பாட்டை  மானாட மயிலாட பாணியில் காப்பாற்ற வேண்டும்.&lt;br /&gt;4  உண்மை அறியும் சோதனைக் கருவியை பொதுக்குழு வாசலில் பொருத்தி மாநில சுயாட்சி, ஈழ விடுதலை, மீனவர் பிரச்னை, மொழிப் பிரச்னை, இடஒதுக்கீடு பிரச்னை என ‘கண்றாவி’ பிரச்னைகள் குறித்தெல்லாம் இன்னமும் யாரேனும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிந்து அவர்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவேண்டும்.&lt;br /&gt;5  மேற்கண்ட நான்கு தீர்மானத்தையும் எதிர்ப்பவர் எவராக  இருந்தாலும் அவர்கள் இனத்துரோகிகள், குடிகெடுக்க வந்த கோடாரிக்காம்புகள் எனத் தீர்மானம் நிறைவேற்றி தமிழகத்தை விட்டு பார்வதியம்மாள் பாணியில் நாடுகடத்தப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;நாஞ்சில் நாடன், எழுத்தாளர்&lt;a href="http://pamaran.files.wordpress.com/2011/07/nanjil-nadan-portrait.jpg"&gt;&lt;img alt="" class="alignright size-full wp-image-631" height="500" src="http://pamaran.files.wordpress.com/2011/07/nanjil-nadan-portrait.jpg?w=416&amp;amp;h=500" title="nanjil-nadan-portrait" width="416" /&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;1  திராவிட இயக்கத்தின் அடிப் படைக் கோட்பாடுகளை மீண்டும் கடைப்பிடிக்க முயலவேண்டும். திமுக என்ற இயக்கத்திற்காக ரத்தமும், வியர்வையும் சிந்தியவர்களின் தியாகத்தை பரிசீலனை செய்யவேண்டும்.&lt;br /&gt;2  ஒரு கார்ப்பரேட் நிறுவனமாகத் தோற்றமளிக்கும் திமுகவை மறுபடியும் மக்கள் நலன் சார்ந்த இயக்கமாக உருவாக்க முயற்சிக்க வேண்டும்.&lt;br /&gt;3  எல்லா அரசியல் தலைவர்&lt;br /&gt;களுக்கும் குடும்பங்கள் உள்ளன. ஆனால் குடும்ப நலன்களை மட்டுமே முன்னிறுத்தாமல் தமிழ்நாடும், தமிழ் மக்களும்தான் தமது குடும்பம் என்பதை திமுகவின் கட்சித்தலைமை உணரவேண்டும்.&lt;br /&gt;4  ஈழம் சார்ந்த திமுகவின் அணுகுமுறையை முற்றிலும் மாற்றிக்கொள்ள வேண்டும்&lt;br /&gt;5 வெறுமனே மேடைப்பேச்சு, கோஷங்கள் ஆகியவற்றைவிட்டு தமிழ் மொழி, பண்பாட்டுத் துறையில் உண்மையான வளர்ச்சிக் கொள்கைகளை மேற்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;இமையம், எழுத்தாளர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;a href="http://pamaran.files.wordpress.com/2011/07/imayam1.jpg"&gt;&lt;img alt="" class="alignleft size-full wp-image-647" height="640" src="http://pamaran.files.wordpress.com/2011/07/imayam1.jpg?w=415&amp;amp;h=640" title="Imayam" width="415" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1  திமுக படிப்படியாக தன்னுடைய அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிவந்திருக்கிறது. அக்கட்சி மீண்டும் தன்னுடைய வேர்களை மீட்டெடுக்க வேண்டும்.&lt;br /&gt;2 மாவட்டச் செயலாளர்கள் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயமாக மாற்றப்பட வேண்டும்.&lt;br /&gt;3  அமைச்சர்களாக இருப்பவர்கள் கட்சியில் முக்கிய பதவியோ, மாவட்டச் செயலாளர் பதவியோ வகிக்கக்கூடாது.&lt;br /&gt;4  மாவட்டச் செயலாளர்களின் மகன்கள், மனைவிகளின் புகைப்படம் போட்டு சுவரொட்டிகள் ஒட்டுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.&lt;br /&gt;5  யார் வேண்டுமானாலும் எந்தப் பதவிக்கு வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழ்நிலை திமுகவில் உருவாகவேண்டும்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;கலாப்ரியா, கவிஞர்&lt;/strong&gt;&lt;a href="http://pamaran.files.wordpress.com/2011/07/kalapriya.jpg"&gt;&lt;img alt="" class="alignright size-full wp-image-632" height="583" src="http://pamaran.files.wordpress.com/2011/07/kalapriya.jpg?w=460&amp;amp;h=583" title="Kalapriya" width="460" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1  எங்கள் பதின் பருவத்தில், எங்களைப் போன்றவர்களை, திராவிட இயக்கம் ஈர்த்தது போன்ற சூழலை, இன்றைய இளைஞர்கள் மத்தியில் உருவாக்க வேண்டும்.அவர்கள் இன்று அடைந்துள்ள பல சமூக நீதிகளுக்கு தி.மு.க முக்கிய காரணம் என்று அவர்கள் உணராதிருக்கிறார்கள். அதற்கு தொண்டனை வைத்துதான் கட்சி என்ற ஆதி மனோபாவம் பலப்பட வேண்டும்.&lt;br /&gt;2  மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கோஷம் ஒரு நிகழ்வாய் உருப்பெறத் தொடங்கி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகப்போகிறது.  உண்மையான ஒரு ஃபெடரல் அமைப்பை உருவாக்கத் தவறியதாகவே உணர்கிறேன். அதற்கு இப்போதும் வாய்ப்பு உள்ளது .&lt;br /&gt;3  ஊடகங்கள் சித்தரிக்கிற, பொதுப்புத்தி சார்ந்த ‘குடும்ப அரசியல்’ குறித்த எதிர்மறைக் கருத்துகள் பற்றி உள்ளபடியே ஆராயவேண்டும்&lt;br /&gt;4   ஈழப்பிரச்சினையில் மத்திய அரசின் (அது காங்கிரஸ் ஆனாலும் சரி வேறு எந்த ‘தேசியக் கட்சி ஆனாலும் சரி) அணுகுமுறைகள் முற்றிலும் தவறானது என்று  மத்திய அரசுடன் எந்த சமரசமும் இன்றி உணர்த்தவேண்டும்.&lt;br /&gt;5  ‘வீழ்வது நாமாக இருந்தாலும்.வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற கோஷத்தை அதே அக்கறையுடன் இனி யார் காப்பாற்றப்போகிறார்கள், என்ற கவலை பரவலாக உள்ளது. இதற்காக அறிவார்ந்த தளத்தில் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளத் தயாராக வேண்டும்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : சண்டே இந்தியன் இதழ் (ஜூலை 12, 2011)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4778918875738452370-8544078106406066523?l=raavanaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/8544078106406066523'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/8544078106406066523'/><link rel='alternate' type='text/html' href='http://raavanaa.blogspot.com/2011/07/blog-post_15.html' title='மாற்றான் தோட்டத்து மலர்..சண்டே இந்தியன் இதழ்'/><author><name>ராவணா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-S5jtQ1YMJ3Y/TiEO6azfOaI/AAAAAAAAADo/_PwPItuTNBQ/s72-c/dmk_meet_mk.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4778918875738452370.post-3481378660803242242</id><published>2011-07-06T22:20:00.000-07:00</published><updated>2011-07-06T22:20:51.086-07:00</updated><title type='text'>மானங்கெட்ட சிவத்தம்பி மரணமாம்!!! கலைஞர் கூப்பிட்டதினால்சிவத்தம்பி போகலாம். நான் போக மாட்டேன்.”</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-snqDqw6qXP4/ThVB9OKkcjI/AAAAAAAAADU/VBE6N_6g2II/s1600/Classical_Tamil_conf_89043_200.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-snqDqw6qXP4/ThVB9OKkcjI/AAAAAAAAADU/VBE6N_6g2II/s1600/Classical_Tamil_conf_89043_200.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மானங்கெட்ட சிவத்தம்பி மரணமாம்!!!  &lt;strong&gt;&lt;em&gt;கலைஞர்கூப்பிட்டதினால்சிவத்தம்பி போகலாம். நான் போக மாட்டேன்.”&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;em&gt;”ஈழத்தில் இனப்படுகொலை தீவிரமாக நடைபெற்ற வேளையில் என்னைப் போன்றவர்கள் தூக்க மாத்திரை போட்டுக்கொண்டுதான் தூங்கினோம். எத்தனை நாளைக்குத்தான் சாவை கேட்டுக் கொண்டே இருப்பது. நாளைக்கு சாகப் போகிறார்கள் மனிதர்கள் என்று தெரிந்தால் எப்படித் தூக்கம் வரும்?&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;இந்தப் படுகொலையை நேரடியாக ஆதரித்தவர்கள், மறைமுகமாக ஆதரித்தவர்கள் மீதான ஆத்திரம் எனது உயிர் மூச்சு உள்ளவரை நீடித்திருக்கும்.&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;தூக்கமில்லாமல் கழிந்த இரவுகள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகின்றன. அதனாலே செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை. கலைஞர் கூப்பிட்டதினால் சிவத்தம்பி போகலாம். நான் போக மாட்டேன்.”&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-pHCLTwGYpfE/ThVCJX0zCnI/AAAAAAAAADY/LN9TP9L-KUE/s1600/vlcsnap-120473.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="179" src="http://1.bp.blogspot.com/-pHCLTwGYpfE/ThVCJX0zCnI/AAAAAAAAADY/LN9TP9L-KUE/s320/vlcsnap-120473.png" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;(&lt;/em&gt;&lt;/strong&gt;    பேராசிரியர் ”தொ.ப” என்றழைக்கப்படும் தொ.பரமசிவன் “சண்டே இந்தியன்” இதழுக்கு அளித்த பேட்டி.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;என்றான்  தந்தையர் நாடுடை தமிழன் , ஆனால் நீயோ, உலக தமிழ் இன  துரோகி  கருணாநிதியின் செம் (மறி)மொழி   மாநாட்டு மேடை ஏறி தமிழ் இன படுகொலையை   சரிதான்   என்று  ஏற்றுக்கொண்ட கூறுகெட்ட தமிழா  உன் பிணத்தோடு நீ   கொடுத்த     நூல்களும் மற்றும் அத்தனையும் சாம்பலாகட்டும்.   &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;ராவணன் &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4778918875738452370-3481378660803242242?l=raavanaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/3481378660803242242'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/3481378660803242242'/><link rel='alternate' type='text/html' href='http://raavanaa.blogspot.com/2011/07/blog-post_06.html' title='மானங்கெட்ட சிவத்தம்பி மரணமாம்!!! கலைஞர் கூப்பிட்டதினால்சிவத்தம்பி போகலாம். நான் போக மாட்டேன்.”'/><author><name>ராவணா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-snqDqw6qXP4/ThVB9OKkcjI/AAAAAAAAADU/VBE6N_6g2II/s72-c/Classical_Tamil_conf_89043_200.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4778918875738452370.post-3135123213298518730</id><published>2011-07-05T22:54:00.000-07:00</published><updated>2011-07-05T22:55:47.848-07:00</updated><title type='text'>தாயகத்தின் தாய் – ச.பொட்டு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-iQUPKsx7uyA/ThP421ZAFUI/AAAAAAAAADQ/s59bVEgbOrY/s1600/ltte_22_08_07_01a_64527_435.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="174" src="http://1.bp.blogspot.com/-iQUPKsx7uyA/ThP421ZAFUI/AAAAAAAAADQ/s59bVEgbOrY/s320/ltte_22_08_07_01a_64527_435.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா எமக்கு அறிமுகமான அந்தநாள் இப்போது நினைவில் இல்லை. அது மணிமனைக் கோவைகளை பரிசீலித்தே அறிய வேண்டியதான ஒன்றாக எம் நினைவுப்பதிவுகளில் இருந்து மறந்து போய்விட்டது.&lt;span id="more-21036"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எதொவொரு இலக்கத்தாலும் நினைவில் வைத்திருக்க வாகாகத்தெரிவு செய்யப்பட்ட வழமையல்லாத ஏதோவொருயெராலும், கறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய அம்மாவின் கோவையும்பொல் ஒன்றாகத்தான் தூங்கும். ஆனால் அம்மா எல்லோரையும் போன்ரவரல்ல.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்றென்றும் மறக்கப்பட முடியாதவராக அந்த அம்மா எம் நிணைவுப்பதிவுகளில்…. கரீர் என்ற கறுப்பு நிறமும், மெலிவான மலர்ந்த முகமும் சளசள வென்ற ஒயாத கதையுமாய்… நகைச்சவை உணர்வுமிக்க ஒரு புலனாய்வாளனால் தமிழகத்து சிரிப்பு நடிகைகளது பெயரில் ஒன்றை புனைபெயராக அம்மாவில் வெளிப் பார்வைக்குத் தெரியும்.சில பெண்பிள்ளைகளுடன்இளையவனாய் ஒரேயொரு மகன் மீது கொள்ளைப் பாசம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காலத்தின் தேவையாக அந்த ஒரேயொரு மகன் போராளியாக ஆனபோது, அம்மாவின் அந்த அதீத பாசத்திற்க்கு சோதனை வந்தது. அந்தச் சோதனை எல்லா அம்மாமாருக்கும் வருவது போன்றபாசத்தின்தளத்தில் எழும்வேதனை மட்டுமல்ல.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அம்மா அந்தக் காலத்து பழசுதான். ஆனால் பழமையில் ஊறிய பிற்போக்கு வாதியல்ல. இளமைக்காலத்தில் இருந்தே சமூகத்தின் மீதான பார்வையை செலுத்தக்கூடியவர். எம்மினத்தின் அரசியல் பயணத்தின் அம்சங்களை காலத்தால் அறிந்தவர். மென்முறையில் எழுந்த அரசியல் கோரிக்கைகள் ஆக்கிரமிப்பு வன்முறைகளால் ஒடுக்கப்பட்டதை கண்ணால் கண்டறிந்து குமறியவர். அரசியல் மென்முறைகள் அக்கிரமிப்பு வன்முறைகளால் ஒடுக்கப்பட்டதன் மறவடிவமாக அரசியல் வன்முறை வடிவம் கொண்டதை ஆரம்ப காலத்தில் இருந்தே வியப்புடன் பார்த்தவர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காலம் தன்பாட்டில் ஓடி, அம்மா குடும்பமாகி, பிள்ளைகள் பெற்று வளர்த்து..ஒருசராசரி பெண்ணாக, தாயாக ஆனார். இது வரை அம்மாவால் அப்படியாக வாழவும் முடிந்தது. ஆனாலும் மனதில் ஆயுதப் போராட்ட நியாயத்தின் கடமைக்காய் தன் கடைசிப்பிள்ளை அம்மாவின் பாசத்தை கொள்ளை கொண்ட செல்லமகன் ஆயுதம் ஏந்தப்புறப்பட்டதை அம்மா எப்படி எதிர்கொள்வது? பெற்ற பாசமா? இனத்தின் சோகமா? என்ற தர்ம சோதனையில் அம்மா குழம்பி மகனது ஆயுதப்போர் வடிவத்தெரிவை மனதால் எற்று சமநிலைக்கு வர காலம் பிடித்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;img alt="" class="size-full wp-image-21037 aligncenter" height="419" src="http://www.tamilthai.com/wp-content/uploads/2011/07/Picture-71.png" title="Picture-71" width="633" /&gt;இப்போது மகன் போராளி. தெருவில் போகவர அம்மாவை எதரிகொள்வான். மகன் இப்போது வளர்ந்து விட்டான். வளர்ந்தவனையே கூட கழந்தையாய் பார்க்கும் அம்மா மனம், இப்போது மகனைக் கண்டு வியந்தது தன்ர சின்னப்பிள்ளை இப்போது எபரிய ஆளாய், ஏதேதோ வேலையாய் அங்கிங்கு ஓடித்திரிவது அம்மாவுக்கு சொல்ல முடியாத பெருமைதான் இயக்கத்தில் இணைந்த காலத்தில் மகன் சின்னப்பெடியன். வயதுக்கே உரிய வேகமான செயற்பாடும் குழப்படியும் கொண்ட இளைய போரளி. அவன் செய்யும் குழப்படிகள், வாங்கும் தண்டனைகள் எதுவும் அம்மாவுக்குத் தெரியய நியாயமில்லைத்தான். அதே போல் வடமராச்சி பொறுப்பாளர் தண்டனை கொடுத்து களைத்துப்போயா அல்லது இவன்தான் தண்டனை செய்து களைத்தப்போயா என்னவோ ஆள் நெல்லியடியில் இருந்து சாவகச்சேரிக்கு நடந்தெ வந்து சேர்ந்தும் அம்மாவுக்கு தெரிய எந்தநியாயமும் இல்லைத்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதற்கிடையில் மகன் சண்டைக்களத்தில்  என்ற செய்தியை மட்டுமே கேள்விப்பட்டு கவலைப்பட்ட அம்மா. கடும் சண்டை என்ற செய்தியால் எல்லா அம்மாக்களையும் போல அம்மாவும் பதறிக் கொண்டிருந்த ஒரு பொழுதில் மகன் காயமடைந்த செய்தி, பதறிய மனதுடன் அம்மா ஓடித்திரிந்தும், மகனின் நண்பர்கள் மூலம் அவன் நிலையறிந்து துடித்ததுமாக கழிந்தது நாட்கள். அம்மாவுக்கு மகனின் சுகநலன் அறியும் தொடர்புகளும் ஏற்பட்டுவிட்டன. ‘இதுவொரு சின்னக்காயம் இன்னும் கொஞ்ச நாள்ள காம்புக்கு வந்திடுவான்” என்று பொறுப்பாளர் சொல்லும் பொய்யான கதையை மீறி’ வயிற்றுக்காயம்” பதிணைந்து தையலுக்கு மேல் போட்டிருக்கு” ‘இன்னும் சாப்பிடத் தெடங்கேல்ல” என்று உண்மைகளை அறிந்துவிடும் அளவுக்கு அம்மாவுக்குத் தொடர்புகள் எற்பட்டு அதனை தொடர்ந்து மருத்துவனைக்கு போய்வரவும் தொடங்கிவிட்டா.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மருத்துவமனை’கெதியாக என்னை துண்டு வெட்டி விடுங்கோ உடனே சண்டைக்குப் போகவேணும்” உறுதியின் வெளிப்பாடுகள். என்ர இடத்தில ஆமியின்ர பொடியும் ஆயுதமும் இருக்கு காவு குழு அனுப்புங்கோ” ‘……….” எம்மையா? எதிரியையா? என சிந்திக்க வைக்கும் எழுத்தில் சொல்லமுடியாத வசவுகள். மருந்தின் மயக்கத்தில் தம் நிலை மறந்து உளறல்கள்.’ஜயோ தங்கேலாமல் கிடக்கு பெத்தடினைப் போடுங்கோ…..ஓ…”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வேதனை தாங்கேலாமல் கிடக்கு இந்தக் காலை வெட்டுங்கோ” கேட்போரின் கண்களில் இரத்தம் கசிய வைக்கும் வேதனைக்குரல்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மருந்துக்களின் நெடியை மீறிய புண்களின் மணம். மகனைப் பிரிந்திருந்த அம்மா தனது பாச உணர்வுகளும் அடிமனத்து விடுதலை உணர்வுக்குமாக ஒரு வடிகாலை தேடிக்கொள்ள, காயமடைந்த போராளிகளை பராமரிப்பவர்களில் ஒருவராகிவிட்டார். இந்தக் காலம் அம்மாவுக்கு விடுதலைப் போரை முன்னை விட கூடுதலாகவே அறிமுகம் செய்து வைத்தது. காயமடைந்த போராளிகளுடனான பரிச்சயமும், பழக்கமும் அம்மாவுக்கு போராட்டத்தின் இன்னொரு பக்கத்தை அறிமுகம் செய்து வைக்க அவவுக்கே தெரியாமல் அம்மா கொஞ்சம் கொஞ்சமாய் மாறிப்போனார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வெளியில் இருந்து போராட்டச் செய்திகளை மட்டும் கேட்பதற்கும், வெற்றிகளை கேட்டு மகிழ்சி அடைவதற்கும் அப்பால் அந்தச் செய்திகளின் உருவாக்கத்தின் யதார்த்தம் அம்மாவை அதிகமாக சிந்திக்க வைத்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விட்டுக் கொடுக்கப்பட முடியாததான இவ்விடுதலைப் போராட்டம் இத்தனை கடினமானதா? இவ்வளவு கண்ணீரை வரவழைப்பதா? இழப்புக்களை குறைத்தோ அல்லது குறைக்கவோ ஏதாவது செய்யமுடியாதா? அம்மா அரசியல், இராணுவ வித்தகத்தடன் சிந்தித்தாவோ? இல்லையோ? அம்மாவாகச் சிந்தித்தா. எல்லாப் போராளிகளையும் தன் பிள்ளையாய் பார்த்த அம்மாவாக சிந்தித்தா..&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;img alt="" class="size-full wp-image-21038 aligncenter" height="388" src="http://www.tamilthai.com/wp-content/uploads/2011/07/Picture-62.png" title="Picture-62" width="594" /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எம் தாயகத்தில் விளைவிக்கும் ஆக்கிரமிப்பு கொடுமையின் ஒரு சிறு பங்காவது எதிரியின் கோட்டைக்குள் திருப்பிக் கொடுக்கப்படுவது அம்மா திருப்தியுடன் பார்க்கும் செய்திதான். அதுவுமல்லாது எதிரியின் பெரும் நிலைகள் அவ்வப்போது ஆங்காங்கே அழிக்கப்படுவதும் அது எதிரிக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சியும் அம்மா அறிவார். அதில் எம் போராளிகள் இங்க போல் பெரும் இழப்புக்களை சந்திப்பதில்லை என்பதும் அம்மாவுக்கு தெரியும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஏற்கனவே எரிபற்று நிலையில் இருந்த அம்மாவின் மனம்தான் இந்த வழியை நாடிப்போனதோ அல்லது அம்மாவை அறிந்து சந்தித்த அந்த போராளிகள்ததான் அம்மாவின் மனதில் தீயை மூட்டினரோ? என்னவோ? அம்மா இப்போது புலனாய்வுத்துறையின் ஆள், முகவராம் வெளிவேலைக்கான முகவாரம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அம்மா இப்போது மாறி விட்டா. முன்பு குடும்பம் அயலவர் என்று எல்லா இடமும் செய்தி சொல்லி மருத்துவமனை சென்று வருபவர். இப்போது சுருக்கமாக வேறெங்கோ தனியாகப் போய்வரத்தொடங்கிவிட்டா. மருத்துவமனை போய்வர நேரம் இருக்குதோ இல்லையோ அம்மா இப்ப அங்கை எல்லாம் போய்வரக்கூடாதம். மருத்துவமனை என்றில்லை. இயக்கம் இருக்கிற இடம் ஒன்றுக்கும் போய் வரவும் கூடாதாம்.இயக்கத்திற்கு ஆதரவாக கதைக்கக் கூடாதாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அம்மாவுக்கு தன்னையே நம்ப முடியாதபடி ஆச்சிரியம் கலந்த பெருமை சி.ஜ.ஏ, கே.ஜி.பி மொசாட் என்று புலனாய்வு அமைப்புக்களை பட்டியலிடுவதுடன் எங்கட வேலைத்திட்டம் என்று ஏதோ விளக்கங்கள். அம்மாவுக்கு எதுவெது விளங்குகிறதோ? இல்லையோ? மனதுக்குள் குறுகுறுவென்று ஆர்வ முனைப்பு.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அம்மாவுக்குள் இப்போது வேறொரு உலகம் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அவர் இப்போது இன்னொரு ஆளாகவும் செயற்படக் கூடியவராக ஆகிவிட்டார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தலைநகர் அதிர்ந்தது” தற்கொலையாளி அடையாளம் காணப்பட்டார் ‘புலிகளைத் தேடி வலைவிரிப்பு” சூத்திரதாரி தலைமறைவு” அடையாளம் காணப்பட்டவரின் பெயர் போலியானதென பொலிசார் தெரிவிப்பு” உலகமே செய்திகளை வியப்புடன் நோக்கும். சூழ உள்ள சுற்றத்தினரும் கூட தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல செய்திகளும் கற்பனைகளுமாக கதைகதையாய் பீற்றித்திரிவார். எல்லாவற்றையும் அமைதியாக அமத்தலாக பார்த்தபடி பட்டுக்கொள்ளாமல் இருப்பா அம்மா.&lt;br /&gt;ஆக, அம்மாவுக்குள் இப்போ வேறொரு உலகம் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவ்வப்போது வந்து அன்பு மகனை பார்த்துக்கொள்வது  தவிர மற்றும்படி எவ்வளவோ மாறிப்போனா அம்மா. இதற்கிடையில் அம்மாவுடன் மகனுக்கு சரியான கோபமாம். அம்மாவின் அக்கா பெரியம்மா – மூலமாக செய்தியனுப்பியிருந்தான்.’ இட இவர் பெரிய மனுசானாகி இப்ப இவருக்கு கோபமும் வருமே” என செல்லமாய் சொல்லிவிட்டிருந்தா அம்மா.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இவனது போராளி நண்பனொருவன் ஊர்ப்பக்கமாய் வந்தபோது’ சின்னதாய் ஒரு மூஸ் அடித்து அம்மாவிடம் போய் இவனது சுகநலன் சொல்லியுள்ளான். அவனுக்கு சாப்பாடு கொடுக்காமல் அனுப்பிவிட்டவவாம் அம்மா. போய்வந்தவன் குறையாகபேசவோ&lt;br /&gt;இல்லை பகிடியாகவோ சொன்னானோ அல்லது அவன் சொல்லாமல்விட இவன்தான் கதைவிட்டு அறிந்தானோ என்னவோ? ஆளுக்கு சரியான கோபம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அம்மா வழமையில் அப்படியில்லை. எல்லோரையுயம்’ குறிப்பாக போராளிகளை” உபசரிப்பதில் அதுவும் சக்திக்கு மீறியே உபசரிப்பதில் முன்னிப்பவர்தான். அன்று அந்த ஏழைத்தாய்க்கு என்ன கஸ்ரமோ வசதிக்குறைவோ?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வீம்புக்காக அம்மாவில் கோபம் போட்டாலும் அவ்வப்போது பெரியம்மாவின் வீடு வந்து’ அம்மாவில் இப்போதும் கோபம்தான்” என்று சொல்லிப் போவான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மகன் பெரியம்மா வீடு வந்து. அம்மாவில் கோபம் சொல்லி நிற்பதும். அம்மாவின் சமையல் வேலிக்குள்ளால் பயணித்துபெரியம்மா வீடு வந்து மகனிடம் சேர்வதும் நல்லதொரு நாடகம். அம்மாவின் கை மணம் தெரிந்தும் தெரியாதது போல நல்ல சாப்பாடு என பெரியம்மாவை புகழ்ந்து விட்டு போகும் பிள்ளையை வேலியால் பார்த்திருப்பா அம்மா. தான் பார்ப்பது தெரிந்தால் அவருக்கு இன்னும் எழுப்பமாய்ப் போய்விடும் என அம்மா, மறைவாய் நின்று சிரிப்பது தெரியாமல் அம்மாவை தேடுவான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அன்றைய சுகமும் இன்றைய சோகமுமாய் ஆகிப்போன சின்னச்சின்ன ஞாபகங்கள் இப்படி எத்தனை?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காலம் கொஞ்சம் ஓடிப் போக மகன் இப்போது முதிர்ந்தவனாகி விட்டான். அம்மா எதிர்பார்க்க முடியாதபடி என் அவனே கூட எதிர்பார்க்காமல் பொறுப்புள்ளவனாகிப் போனான். இயக்கத்தின் ஆசிரியர் அணியொன்றின் உதவியாளன் என்பதும், அவ் ஆசிரியர் அணியுடனும் அவர்தம் பணியுடனும் அவனுக்கேற்பட்ட ஈடுபாடுமாக அவனைப் படிப்படியாக முதிர்ந்தவனாக ஆக்கிவிட்டதோ?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சண்டை அணியில் நிற்கும் போது நண்பர்கள் செய்தது போல அவனும் கரும்புலி விண்ணப்பக் கடிதம் எழுதிக் காத்திருந்தது பழையகதை. இப்போது மொழிப்பெயர்ப்புத் திரைப்பட உருவாக்கற்பொறுப்பை கைமாற்றிக் கொடுத்து விட்டு, அவன் கரும்புலிக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதே புதிய நிலை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அணிசேர்ப்பு, தொடர்வகுப்பு,கடும்பயிற்சி,எதிரியின் தலைநகர் அறிமுகமென தயார்படுத்தல்களுடன், தனிமைப்படுத்தப்பட்ட முகாம் வாழ்வுமாக மகனும் இப்போ வேறொரு உலகிற்கு மாறிப்போனான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மகன் வழிதெருவில் எதிர்படாமல் போனதும், வழமைபோல தேடிப்போன இடத்தில் சரியான பதில் இல்லாது போனதும் அம்மாவுக்கு என்னவோ போலானது. காணாத மகனை தெருவில் கண்டபோது அவனது புதிய கூட்டாளிகளும், வழமையல்லாத நடை, உடை,பாவனையும் அம்மாவுக்கு எதையெதையோ எண்ணவும் வைத்தது. அம்மாவும் இப்போதும் பழைய அப்பாவி அம்மா இல்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மகன் இவ்வழியில் கரும்புலியாய் தெரிவு செய்யப்பட்டுவிட அம்மா வெளிவேலைகளில் இருந்து நிறுத்தப்படுவது தவிர்க்க முடியாததாக ஆனது.’ தேவை ஏற்படும் போது அவசரமாக அழைக்கப்படுவீர்கள்” என்ற விளக்கத்தை அம்மாவால் முற்றாக நம்பவோ, புறக்கணிக்கவோ முடியவில்லை. தனக்கு கூறப்படுவது போலிக்காரணம் என்று தெரிந்தாலும் அதற்கு மேல் அம்மாவாலும் ஒன்றும் செய்யமுடியாமல் போக அம்மா, வழமையான அம்மாவாக வாழத்தொடங்கிவிட்டா.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அம்மாவின் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்க அல்லது தீர்த்து வைக்க காரணமாக இன்னொரு செய்தியும் வந்து சேர்ந்தது. அம்மாவின் உறவுக்கார பெண்மணியொருவர் கொழும்பில் இருந்து வந்திருந்தார். மகனை கொழும்பில் கண்டதை அம்மாவுக்குச் சொன்னது மட்டுமின்றி, தன்னைக் கண்டதை அம்மாவுக்குச் சொல்ல வேண்டாமென்று அவன் சொன்னதையும் வலு கவனமாய் மறக்காமல் சொல்லிவிட்டுப் போனார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அம்மாவின் மனப்புதிர் மெல்ல மெல்ல விடுபட்டுப்போகும் காலத்தின் ஒரு நாளில்,’சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று” வீடு வந்தான் மகன். பழைய கோபத்தை நினைவூட்டுவதும் செல்லம் கொஞ்சுவதுமாய், அதே பழைய மகனாய்……..ஒரே கொண்டாட்டம். வீடு நிறைந்து போனது. அப்பாவி அப்பாவுக்கும் அக்காளுக்கும், உறவுகளுக்கும் மகனது வீடு வருகையின் காரணம் தெரியாமல் ஒரே கொண்டாட்டம். அம்மாவுக்கு மட்டும் என்ன தெரியும்? ஒன்றுமே தெரியாதுதானே.’மகனது புதிய நடை, உடை பாவனையில்,வித்தியாசம் விளங்காது”‘அவன் கொழும்புக்கு போனதும் தெரியாது”‘அவனது அன்ரி வந்து ஒன்றுமே சொல்லவும் இல்லை” ஒரே மகிழ்ச்சி வீடு நிறைந்த  மகிழ்ச்சி..&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிள்ளை ‘அம்மாவை தனக்கு சாப்பாடு ஊட்டி விடக்கேட்டது’   அம்மாவுக்கு நான் தான் தீத்துவேன் என்று கூறி உணவூட்டிவிட்டதும் ஏன் என்று வீட்டில் மற்றயோருக்குத் தெரியாது.’தம்பி இப்ப தான் செல்லம் கொஞ்சுது என்று அவர்கள் பரிகசித்து பேசும் போதும் அம்மா கண்ணீர் மறைத்து, முகம் சிரித்து,’உணர்வு மறைத்து உணவூட்டி…. வீட்டில் ஒரே சிரிப்பும் கொண்டாட்டமும் தான். அம்மாவுக்குத்தான் ஒன்றும் தெரியாதே. மகன் முகாம் திரும்ப முன்புபோல் அவசரப்படவும் இல்லை. எல்லோரிடமும் விளையாட்டும் , கதையுமாய் கொண்டாடி, உணவுண்டு, பாய்போட்டு நித்திரை கொண்டு அவன் முகாம் திரும்பும் வேளையில் அன்றைய பொழுது இரவைத் தொட்டுவிட்டிருந்தது. அன்று அவன் சொல்லிவிட்டுப் போனது போல தனயாக வரவில்லை அரை டசினுக்கு அதிகமான அவனது நண்பர்களால் வீடு மீண்டும் களைகட்டியது. அவனது அம்மா,அப்பா, அக்காக்கள், வந்திருந்த அனைவருக்கும் அம்மா, அப்பா,அக்கா ஆயினர். அத்தனை பிள்ளைகளும் மாறி மாறியும் ஒன்றாயும் அம்மா…..என்று உறவு சொல்லி அழைக்க வீடு களைகட்டியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒன்றும் தெரியாத அப்பாவி அப்பாவும் அக்காக்களும் அவனது புதிய நண்பர்களின் உற்சாகத்தில் கரைந்து போயினர் அம்மாவும் தான். அவவுக்கும் தான் ஒன்றுமே தெரியாதே. அவவும் சேர்ந்து அந்த உற்சாகத்தில்…….. வந்திருந்த எல்லோருக்கும் தடல்புடலாய் சமையல், சாப்பாடு என்று வீடு அமர்க்களப்பட்டபோதும், குசினியும் முற்றமுமாய் பம்பரமாய் சுழன்ற போதும் அப்பாவி அப்பாக்கும் அக்காக்களுக்கும் ஒன்றுமே தெரியாதே…. அம்மாவுடன் வீடே வாசல் வரை வழியனுப்ப அவர்கள் புறப்பட்டு போயினர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர்கள் விடைபெற்று போயினர். அந்தத்தாயின் வழியனுப்பலின் பின்னர் அவர்கள் தாயகத்திடமும் விடை பெற்றுப் போய்……போய் விட்டனர். நல்ல சூரியனின் பெயரால் கொடியோரின் ஆக்கிரமிப்புக் கதிர்கள் விலிகாமத்து மண்ணை சுட்டெரித்த காலத்தின் ஒரு பொழுதில் அவர்கள் எதிரியின்  கோட்டைக்குள் புதுவரலாறு படைத்தனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வீரமும் அர்பணிப்பும் மட்டுமன்றி மனிதாபிமான நிதானமும் நிறைந்த அவர்களது வெற்றிச் செய்தியால் உலகமே உறைந்து நின்ற வேளையில், தமிழீழத்து எல்லோரையும் போலவே அவனது குடும்பத்திலும் மகிழ்ச்சி வளிப்பாடுகள். ஆனால் அம்மா மனதில்…  மகனது பொறுப்பாளர்களை அம்மா சந்திக்கும் அந்த நாள் வந்தேவிட்டது. மகன் எங்கே? என்பதற்கான வழமையயான பதில்கள் அம்மாவிடம் எடுபடாமல் போக, சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாததாக ஆகிப்போனது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மனுசியின்ர வாயை முதலே அடைச்சுப்போட வேணும். கதைக்க விட்டால் தப்பேலாது” என்ற சிந்தனையில் மகன் நிற்குமிடம் அவனைச்சந்திப்பதில்  உள்ள வசதிக் குறைவு…என பொருத்தமற்ற பொய்யான பதில்களுடன் பொருப்பாளர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘மகன் தூரத்தில்…., மட்டகளப்பில்…நிற்கிறான்…வர கொஞ்சம் காலம் செல்லும்” அம்மாவின் முன்னால் இரத்தம் நீராகிப்போன பொருபாளரின் வார்த்தைகள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவரது உயிரற்ற வார்த்தைகளை மீறி அம்மாவின் உறுதியான கேள்வி. ‘எப்படி என்ர மகன் கடைசி வரைக்கும் சரியாக செயற்பட்டவனே………?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘எனக்கு எல்லாம் தெரியும். நான் பெத்து வளத்த பெடியன் அவன் சொல்கிறது பொய் எண்டு எனக்குத் தெரியாதே” ‘உப்பிடி எத்தனை பொய்களை எனக்கு நீங்கள் சொல்லித்தந்திருப்பியள்”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘வீட்ட வந்து அவன் நித்திரை கொள்ளேக்க அவன்ர பொக்கற்றுக்குள்ள பார்த்தன் வட்டுக்கோட்டை அடையாள அட்டை வச்சிருந்தவன்” என்ர பிள்ளை அம்மாவுக்கு சொல்லேலாதெண்டு எனக்குத் தெரியும். அதில நான் ஏதும் பிழை விட்டிடக்கூடாது என்று தான் நானும் அவனோடை ஒன்றும்  கதைக்கேல்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘செய்தியை கேட்டுப்போட்டு அக்கா வீட்டை ஒடிப்போய் ரூபவாகினிதான் பார்த்தனான்” முகம் தெரியாததால ஒருதருக்கும் விளங்கேல்லை – பெத்ததாய் எனக்கு தெரியாமல் போகுமே.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘றெயில் தண்டவாளத்துக்குப் பக்கத்துல கிடக்கிறான் என்ரபிள்ளை…”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடக்கி வைத்ததெல்லாம் வெடித்ததால் குமுறி அழும் அம்மாவிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை. உலகத்தில் உள்ள பொய்கள் எல்லாம் எங்கோ ஓடிப்போக விக்கித்து நினறவரிடம் அம்மா அந்த கடிதத்தைக் கொடுத்தா.&lt;br /&gt;தன் வீரச்சாவு வெளிப்படும் வேளையில் அம்மாவுக்கு கொடுக்கவென மகன் எழுதிய கடிதம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எங்கோ பிசகுப்பட்டு முன்கூட்டியே அம்மாவின் கையில். எண்ணற்ற தடவைகள் படிந்துறைந்த போன அந்தக் கடிதத்தில் அவன் எல்லாம் எழுதியிருந்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முத்தாய்ப்பான வரிகள்… உன் கடன் தீர்க்காமல் போகின்றேனம்மா. தமிழீழத்தில்  அடுத்த பிறப்பில் உன் வயிற்றில் பிள்ளையாகவே என்னைப் பெற்றிடு அம்மா இப்பிறப்பில் தீர்க்காத உன் கடன் எல்லாம் அப்பிறப்பில் தீர்த்திடுவேன் அம்மா&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அம்மா தாயே உங்களை எமாற்ற உங்களின் பிள்ளைகள் நாங்கள் எத்தனை திட்டங்கள் போட்டோமம்மா. ஒன்றுமே கூறாது நீ நின்றதும் வென்றதும் எவ்வண்ணம் தாயே.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-oKqyRo07GcM/ThP4iV-kTGI/AAAAAAAAADM/Mmqyj-FQydM/s1600/ltte_22_08_07_01a_64527_435.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="174" src="http://3.bp.blogspot.com/-oKqyRo07GcM/ThP4iV-kTGI/AAAAAAAAADM/Mmqyj-FQydM/s320/ltte_22_08_07_01a_64527_435.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தாயகத்தின் தாயே உங்களிடம் நாங்கள் தோற்றுத்தான் போனோமம்மா…&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4778918875738452370-3135123213298518730?l=raavanaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/3135123213298518730'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/3135123213298518730'/><link rel='alternate' type='text/html' href='http://raavanaa.blogspot.com/2011/07/blog-post.html' title='தாயகத்தின் தாய் – ச.பொட்டு'/><author><name>ராவணா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-iQUPKsx7uyA/ThP421ZAFUI/AAAAAAAAADQ/s59bVEgbOrY/s72-c/ltte_22_08_07_01a_64527_435.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4778918875738452370.post-2763032063805112695</id><published>2011-06-30T23:45:00.000-07:00</published><updated>2011-06-30T23:45:42.374-07:00</updated><title type='text'>மாற்றான் தோட்டத்து மலர்..........................</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-xi3-XiVUm7s/Tg1sp_T8gBI/AAAAAAAAADI/_qDhcZfY0Cg/s1600/Mirage_2000D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="203" src="http://3.bp.blogspot.com/-xi3-XiVUm7s/Tg1sp_T8gBI/AAAAAAAAADI/_qDhcZfY0Cg/s320/Mirage_2000D.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒபரேசன் பூமாலை - அந்த நாள் நினைவுகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;bharat-rakshak என்னும் இந்திய இராணுவத்தின் இணையத்தளம் ஒன்றிலிருந்து  பெறப்பட்ட தகவல்களின் தமிழ் வடிவம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மாதங்களில் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான தனது  இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இது இலங்கையில் வாழும் தமிழ்  சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்த கவலையை இந்தியாவில் ஏற்படுத்தியது. உண்மையில்  அது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும் கூட யாழ்ப்பாணத்தில் நடக்கும்  சம்பவங்கள் இலங்கைத் தமிழரை தமது சகோதரர்களாகக் கருதும் தமிழக மக்களிடையே  கொந்தளிப்பையும் உணர்வுப் பெருக்கையும் அதிகரித்து விட்டிருந்தது. சட்டங்களும்  நீதிகளும் எதுவாக இருப்பினும் அந்த நேரத்தில் வெறுமனமே பார்த்துக்  கொண்டிருப்பதில்லை என்ற முடிவை இந்திய அரசு எடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாள்: யூன் 3 1987&lt;br /&gt;இடம்: இந்திய விமானப் படையின் மிராஜ் ரக விமானங்கள் தரித்து நின்ற, மிக முக்கிய  தளங்களில் ஒன்றான க்வாலியருக்கு (Gwalior) அருகில் மகாராஜ்பூர் விமானப் படை  நிலையம்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரம்: காலை 5.30,&lt;br /&gt;No 7 படைத்தொகுதியின் (The Battle Axes) கட்டளையிடும் அதிகாரி அஜித் பவ்னானி  (Wing Commander Ajit Bhavnani) அந்த மிக முக்கிய செய்தியை பெற்றுக் கொண்ட போது  வெளிச்சம் இன்னும் முற்றாகப் பரவியிருக்கவில்லை. செய்தியில் தேவையான நபர்களுடன் சில  விமானங்களை நாட்டின் தெற்கே, பெங்களூரின் ஹால் (Hal) விமான நிலையத்திற்கு  உடனடியாகக் கொண்டு செல்லும் படி அறிவுறுத்தப் பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மதியத்திற்கு சற்று முன்னர் 11.30க்கு பவ்னானி தன் மிராஜ் 2000 இலும், கூடவே 5  சிறப்பு அனுபவம் பெற்ற விமானிகள் வேறு விமானங்களிலும் பறப்பை ஆரம்பித்து ஒரு மணி  நேரத்தில் பெங்களூர் விமான நிலையத்தை சென்றடைந்தனர். அங்கு அவர்களுக்கு யெலஹங்கா  (Yelahanka) விமானத் தளத்தில் தரையிறங்கும் படி அறிவுறுத்தப் பட்டது.&lt;br /&gt;இரவு 9 மணியளவில் விமானிகள் தமது நடவடிக்கைக்கான அறிவுறுத்லை பெறும் வரையில்  தமக்கான செயற்திட்ட விபரமெதனையும் பெற்றிருக்கவில்லை. இப்போது சொல்லப்பட்ட  அறிவுறுத்தலின் படி அவர்கள் இலங்கையின் வடபகுதி மக்களுக்கான உணவு மற்றும் உதவிப்  பொருட்களை வானிலிருந்து விநியோகிக்க உள்ள An-32 விமானத்திற்கு துணையாக செல்ல  இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் நாட்டின் வடக்கில் ஆக்ராவில் (Agra ) PTS (Paratroopers Training  School) தளத்தில் ஐந்து An - 32 விமானங்களில் உதவிப் பொருட்களை நிரப்பும் பணியில்  பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். பொதுவாக இங்கு பரா றெஜிமென்டில் (Para  regiment) உள்ள இந்திய இராணுவ வீரர்களுக்கு பரசூட் பயிற்சியே வழங்கப் படுகின்ற  போதும், இன்று காலை அஜித் பவ்னானி குழுவினர் பெற்றதைப் போன்ற எதிர்பாரா  அறிவுறுத்தலுக்கமைய, அவர்கள் உதவிப் பொருட்களையும் முடிந்தளவான மரக்கறி வகைகளையும்  அட்டைப்பெட்டிகளிலும் பொலீத்தீன் பைகளிலும் அடைத்து அவற்றை பரசூட்டுகளுடன்  இணைத்துக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;1971 போருக்குப் பின்னர் முதற் தடவையாக இன்னொரு நாட்டின் வான் பரப்பினுள்  நுழைந்து நடாத்த இருந்த இந் நடவடிக்கைக்கு ஓபரேசன் பூமாலை என பெயரிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மாதங்களில் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான தனது  இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இது இலங்கையில் வாழும் தமிழ்  சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்த கவலையை இந்தியாவில் ஏற்படுத்தியது. உண்மையில்  அது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும் கூட யாழ்ப்பாணத்தில் நடக்கும்  சம்பவங்கள் இலங்கைத் தமிழரை தமது சகோதரர்களாகக் கருதும் தமிழக மக்களிடையே  கொந்தளிப்பையும் உணர்வுப் பெருக்கையும் அதிகரித்து விட்டிருந்தது. சட்டங்களும்  நீதிகளும் எதுவாக இருப்பினும் அந்த நேரத்தில் வெறுமனமே பார்த்துக்  கொண்டிருப்பதில்லை என்ற முடிவை இந்திய அரசு எடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மே மாதம் இலங்கை அரசுக்கு அறிவிக்கப் பட்டு கப்பல் மூலமாக மனிதாபிமான  நோக்கில் எடுத்துச் செல்லப்பட்ட 1000 தொன்களுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள்  கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் தடுத்தி நிறுத்தி திருப்பியனுப் பட்டன.  இந்நிகழ்வும், அதனை கொழும்பு அரசு தனக்கான வெற்றியெனக் கொண்டாடிய விதமும், இந்திய  இரசு இந்த விடயத்தை இலகுவில் விட்டுவிடப் போவதில்லையென்பதனைத் தெளிவாக்கின.  தற்போதைய ஆகாய மார்க்கமான உணவு விநியோகத்தின் கால்கோலாகவும் அது அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;யூன் 4&lt;br /&gt;ஆக்ராவில் உதவிப் பொருட்களை விமானத்தில் ஏற்றும் பணியாளர்கள் இராணுவ வீரர்களின்  உதவியுடன் அதனை முடித்தனர். பொருட்களுடன் தயாராய் நின்ற An - 32 விமானம், பகல்  வெளிச்சம் ஏற்பட்ட பின்னர் சுமார் 8 மணியளவில் பெங்களூரை நோக்கிப் பறக்கத்  தொடங்கியது. விமானத் தலைமையகத்திலிருந்து பெங்களூரிற்கு வந்திருந்த எயர் வைஸ்  மார்ஸல் டென்சில் கீலொர் ( Air vice marshal Denzil Keelor) இறுதி நேர  அறிவுறுத்தல்களைப் பகிர்ந்து கொண்டார்.&lt;br /&gt;மதியம் தாண்டிய 3 மணி, புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவர் வெளிவிவகார  அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டார். நான்கு மணியளவில் இந்தியாவின் ஏதோ ஒரு  இடத்திலிருந்து புறப்படும் விமானங்கள் யாழ்ப்பாணப் பகுதிகளில் ஆகாய மார்க்கமான உணவு  விநியோகத்தில் ஈடுபடும் என்ற செய்தி திரு நட்வார் சிங் அவர்களினால் இலங்கைத்  தூதுவருக்கு அங்கு வைத்துச் சொல்லப்பட்டது. கூடவே இந் நடவடிக்கை முழுமையாக செய்து  முடிக்கப் படும் என தாம் எதிர் பார்ப்பதாகவும் ஏதாவது எதிர் நடவடிக்கைகள் இலங்கை  இராணுவ தரப்பில் இருந்து வெளிப்பட்டால், அவை மிராஜ் 2000 விமானங்கள் மூலம் இராணுவ  வழியில் எதிர் கொள்ளப்படுமெனவும் எச்சரிக்கப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் அந்த எச்சரிக்கை தேவையற்றதாக இருந்தது. இலங்கை விமானப் படை வசம்  அப்போதிருந்த சியாமசெட்டி ரக விமானங்களால் இந்திய விமானங்களை வானில் வைத்து எதிர்  கொள்வதென்பது சாத்தியமற்றதாயிருந்தது. அப்படி ஏதாவது எதிர் நடவடிக்கைகள் இலங்கைத்  தரப்பிலிருந்து வருமானால் அது நிலத்திலிருந்து வரும் சூடுகளாகவே இருக்க  முடியும்.&lt;br /&gt;அதே நேரத்தில் பெங்களுரில் இறுதிக் கட்ட சோதனைகள் முடிந்திருந்தன.  உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் விமான  நிலையத்தில் குவிந்திருந்தனர். அவர்களையும் An-32 விமானத்தில் அனுமதிப்பதென முடிவு  செய்யப்பட்டு 35 ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஒவ்வொரு குழுவில் 7  நபர்களாக ஐந்து விமானங்களிலும் அவர்கள் ஏற்றப் பட்டனர்.&lt;br /&gt;மாலை 3.55&lt;br /&gt;முதலாவது An-32 விமானம் கப்டன் சுந்தர் மற்றும் ஸ்வாரப் ( Flt Lt SR Swarup )  ஆகியோரின் வழி நடத்தலில் மேலெழுந்தது.யாழ்ப்பாணம் சென்று மீளும் 900 Km தூரத்தைக்  கொண்ட ஒரு சுற்றுப் பறப்பாக இது அமையும். இதற்கிடையில் நான்கு மிராஜ் விமானங்கள்  பவ்னானி தலைமையில் பறப்பில் இருந்தன. இலங்கை விமானப் படைகள், வான் எதிர்ப்பில்  ஈடுபட்டால் பயன்படுத்துவதற்காக இரண்டு மத்ரா மஜிக் II(Matra Magic) வானிலிருந்து  வானுக்கான ஏவுகணைகள் அவற்றில் பொருத்தப் பட்டிருந்தன. ஆயினும் அவை தேவைப்  படவில்லை.&lt;br /&gt;பாக்கு நீரிணையை கடந்து முடித்த An-32 விமானங்களிலிருந்து 1000 அடி மேலே மிராஜ்  விமானங்கள் பறப்பில் ஈடுபட்டன. ஐந்தாவது மிராஜ் இந்தியக் கரையோரமாக வான் அலைத்  தொடர்புக்கான இணைப்புக்காக பறந்து கொண்டிருந்தது. தவிர இரண்டு An - 32  விமானங்களும் பெங்களூருக்கான றேடியோத் தொடர்பின் இடை இணைப்பிற்காக பறந்தன.&lt;br /&gt;இந் நடவடிக்கையின் வழி நடத்தல் அதிகாரி கப்டன் சுந்தர் 4.47 அளவில்  கொழும்பிற்கான றேடியோத் தொடர்பினை ஏற்படுத்த முயற்சித்தார். அது கை  கூடவில்லையாயினும் ஒன்றினைத் தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.  அதாவது கொழும்பு ATC (Air-traffic control) றேடியோத் தொடர்புகளைக் கேட்டுக்  கொண்டிருந்தது. ஆயினும் பதிலெதனையும் தரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் மாலை 4.50&lt;br /&gt;விமானங்கள் யாழ் குடாநாட்டின் வான் பரப்பைத் தொட்டன. An-32 தனது பறப்பின்  உயரத்தை 1500 அடி வரை குறைத்தது. கட்டளைக்கு ஏற்ப கதவுகள் திறக்கப் பட்டு உதவிப்  பொருட்கள் கீழே போடப்பட்டன. வெள்ளை நிற பரசூட்கள் உடனுக்குடன் விரிந்து  தீர்மானிக்கப்பட்ட பகுதிகளில் சென்று இறங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;நடவடிக்கை பூரணப்படுத்தப்பட்டது. விமானங்கள் வடபகுதியில் அமைந்த இலங்கை விமானப்  படைத் தளமான பலாலிக்குச் சமீபமாக பறப்பில் ஈடுபட நேர்ந்தாலும் இலங்கை இராணுவப்  படைகளிடமிருந்து நிலத்திலிருந்தோ வானிலிருந்தோ எதிர்ப்பெதுவும் வரவில்லை.&lt;br /&gt;மாலை 6.13 அளவில் விமானங்கள் பெங்களூரில் சென்று தரையிறங்கின. விமான தளத்தில்  விமானிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.பிரதமர் அலுவலகத்திலிருந்து  வாழ்த்து செய்திகள் அனுப்பப் பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இந்நடவடிக்கையை அரச மற்றும் இராணுவ வன்முறைச் செயல் என கண்டித்தது.  அமெரிக்கா கவலை மட்டும் தெரிவித்தது. மேலதிக கருத்துக்களைச் சொல்ல மறுத்தது.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-xi3-XiVUm7s/Tg1sp_T8gBI/AAAAAAAAADI/_qDhcZfY0Cg/s1600/Mirage_2000D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="203" src="http://3.bp.blogspot.com/-xi3-XiVUm7s/Tg1sp_T8gBI/AAAAAAAAADI/_qDhcZfY0Cg/s320/Mirage_2000D.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;விநியோகிக்கப் பட்ட உதவிப் பொருட்டகள் 23 தொன்களை விட அதிகமில்லையென்பதோடு  முழுமையானவையுமல்ல. ஆனால் வலுப்பெறும் சிவில் யுத்தத்தினை இந்தியா ஒரு போதும் ஒரு  பார்வையாளராக இருந்து பார்க்காது என்ற செய்தியினை இலங்கை அரசுக்கு இந்த நடவடிக்கை  சொன்னது.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4778918875738452370-2763032063805112695?l=raavanaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/2763032063805112695'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/2763032063805112695'/><link rel='alternate' type='text/html' href='http://raavanaa.blogspot.com/2011/06/blog-post_30.html' title='மாற்றான் தோட்டத்து மலர்..........................'/><author><name>ராவணா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-xi3-XiVUm7s/Tg1sp_T8gBI/AAAAAAAAADI/_qDhcZfY0Cg/s72-c/Mirage_2000D.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4778918875738452370.post-8183091324826501546</id><published>2011-06-22T22:10:00.000-07:00</published><updated>2011-06-22T22:11:34.564-07:00</updated><title type='text'>மாற்றான் தோட்டத்து மலர்- விகடன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="heading"&gt;இனவெறியைச் சுமக்கும் தழும்புகள்! உயிர் சாட்சியங்கள் வாய் திறந்தால் இந்த உலகத்தால் தாங்க முடியுமா?&lt;/div&gt;&lt;div class="date"&gt;&lt;/div&gt;&lt;div class="date"&gt;&lt;/div&gt;&lt;div class="date"&gt;&lt;/div&gt;&lt;div class="thumb"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-3sutrzxsGKE/TgLK_KQKHyI/AAAAAAAAADE/ug3i8XWMh2M/s1600/mulli_03.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="160" src="http://4.bp.blogspot.com/-3sutrzxsGKE/TgLK_KQKHyI/AAAAAAAAADE/ug3i8XWMh2M/s320/mulli_03.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="brief"&gt;18 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்க்காதீர்கள்!  இந்த எச்சரிக்கையுடன்தான் அந்தக் காட்சி ஓடியது. ஆனால், 18 வயதைக் கடந்தவர்கள் கூட அந்தக் காட்சியைப் பார்க்கும் தைரியமற்றுக் கடந்துபோனார்கள். 'இலங்கையில் நடந்தது இனப் படுகொலைதான்!’ என்பதை, 49 நிமிடம் 4 நொடிகள் ஓடிய அந்தக் காட்சியின் மூலமாக உலகத்தின் மடியில் போட்டு உடைத்தது 'சனல் 4’ தொலைக்காட்சி. &lt;/div&gt;&lt;div class="remainder"&gt;போர் ஆரம்பித்தது தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நீண்டு, இறுதிக் களத்தில் இரத்தமும் சதையுமாக முடிந்தது வரையிலான இன அழிப்புக்கு அதி முக்கிய சாட்சி... அந்த ஒளிபரப்பு.&lt;br /&gt;புலிகளின் கைகளைக் கட்டி குப்புறத் தள்ளி பின்னந் தலையில் சுடுவதும், அலறக்கூட அவகாசம் இல்லாமல் பொத்தெனச் சரியும் உடல்களைக் கண்டு கை கொட்டிச் சிரிப்பதும் சிங்களர்களின் சீரிய குணமாக உலக அரங்கில் ஒளிபரப்பாகியது. &lt;br /&gt;செத்துக்கிடக்கும் பெண் போராளிகளின் உறுப்புகளைக் காட்டி கொக்கரித்துச் சிரிக்கிற சிங்களக் கொடூரம் உலகத்தின் மனசாட்சியையே ஒரு கணம் தலை குனியவைத்தது. &lt;br /&gt;முழுக்கப் பார்க்கிற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை. இலங்கையில் நடந்தது அப்பட்டமான இனப் படுகொலை என்பதற்கு இதைவிட சாட்சி தேவை இல்லை!'' என அலறுகிறார் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன். &lt;br /&gt;எங்களின் அதிர்ச்சியை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள்போல் தெரிகிறது.&lt;br /&gt;இவற்றை நிகழ்த்திய இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய இங்கிலாந்து அரசு தயாராக இருக்கிறது! எனப் பதற்றத்தோடு சொல்கிறார் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலிஸ்ட்டர் பர்ட். &lt;br /&gt;இன அழிப்பு, போர் மரபு மீறல், பெண்கள் மீதான சித்ரவதை என அத்தனை விதமான அட்டூழியங்களையும் சிங்கள இராணுவத்தினர் அரங்கேற்றி இருக்கிறார்கள். மனிதப் பட்டியலில் சிங்களர்கள் இனியும் நீடிக்க வேண்டுமா என்பதை உலகம் யோசிக்க வேண்டும் என மனித உலக உரிமை அமைப்புகள் கொந்தளிக்கின்றன. &lt;br /&gt;ஆனால், எதற்கும் சலனமே காட்டாத சிங்கள அரசு, சனல் 4 ஒளிபரப்பிய காட்சிகள் நம்பும்படியாக இல்லை. புலிகளின் வழக்கமான சித்திரிப்பு வேலைதான் இது எனப் பாதுகாப்பு அமைச்சகம் மூலமாக அறிவித்தது. &lt;br /&gt;கூடவே, அதி முக்கிய விளக்கமாக, சனல் 4  இசைப்பிரியா என்பவரை ஊடகவியலாளர் என்று மட்டுமே சொல்கிறது. ஆனால், இசைப்பிரியா புலிகள் அமைப்பில் லெப்டினன்ட் கேர்ணலாக இருந்தவர் என்கிறது இலங்கை அரசு. &lt;br /&gt;இசைப்பிரியாவுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளைப் பற்றி வாய் திறக்கும் வல்லமை இலங்கைக்கு இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இனப் படுகொலையின் ஆவணப்படத்தைத் தயாரித்தவரான இயக்குநர் கெலம் மெக்ரே, &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போர் நடந்தபோது தமிழர்கள் வாழும் பகுதியில் எடுக்கப்பட்டவை தனியாகவும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் தனியாகவும், எங்களுக்குக் கிடைத்தன. &lt;br /&gt;நிராயுத பாணியாக இருப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளும், சித்திரவதை செய்யப்பட்ட நிர்வாணக் காட்சிகளும் சிங்கள இராணுவத்தினராலேயே எடுக்கப்பட்டவை. அந்தக் காட்சிகள் எந்த வகையான செல்போனில் எடுக்கப்பட்டவை, என்ன தேதியில் எடுக்கப்பட்டவை என்பதைக்கூட எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும். &lt;br /&gt;காயங்களின் தன்மை, துப்பாக்கிச் சூட்டின் தாக்கம் ஆகியவற்றை வல்லுநர்கள் மூலமாக ஆராய்ந்து உண்மை என உறுதிப்படுத்திய பிறகுதான் வெளியிட்டோம். நாங்கள் ஒளிபரப்பிய காட்சிகளை எங்களாலேயே கண்கொண்டு பார்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை என்கிறார் வருத்தமாக. &lt;br /&gt;கொக்கரித்துச் சிரிப்பதற்கும் கூடிப் பேசி ரசிப்பதற்கும், போர்க்களத்தில் சிங்கள வீரர்களால் செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளே, இனப் படுகொலையின் சாட்சியாக உலகை வலம் வருவதுதான் வேதனையான வேடிக்கை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வலியுறுத்தி உலகத் தமிழர் பேரவையின் செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரகுமார், &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகள் உலகத்தின் கவனத்தை இரக்கத்தோடு திருப்பி இருக்கின்றன. &lt;br /&gt;தமிழக முதல்வராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் ஜெயலலிதா, இலங்கை அரசின் போர்க் குற்றங்களைக் கண்டித்தும் பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி இருப்பது உலகளாவிய தமிழர்களுக்கு நம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது. &lt;br /&gt;சனல் 4’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கொடூரங்கள் குறித்தும் தமிழக முதல்வர் உலக அரங்கில் கேள்வி எழுப்ப வேண்டும். 'சனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகளைக் காட்டிலும், இதயம் கனக்கச் செய்யக்கூடிய போர்க்குற்ற ஆதாரங்கள் எங்களிடம் நிறைய இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உடல் முழுக்க சிங்கள அரசின் கொடூரங்களைத் தாங்கியபடி தப்பித்து வந்த உயிர் சாட்சியங்கள் பலர் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இனச் சித்திரவதைக்கு ஆதாரமாகக் காயங்களைச் சுமந்திருக்கும் அந்த உயிர் சாட்சிகளை உலக அரங்கில் நிறுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதுகைப் பிளந்தது, ஆணியால் எழுதியது, ஸ்ரீ என்கிற சிங்கள எழுத்துகளை சிகரெட் நெருப்பால் எழுதியது எனத் தழும்புகளையே சிங்கள வெறியின் சாட்சியங்களாகச் சுமந்து திரிபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவெறிக் கொடூரங்கள் குறித்து அவர்கள் வாய் திறந்தால், இந்த உலகத்தால் தாங்க முடியுமா எனத் தெரியாது. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டனில் உள்ள அனைத்துக் கட்சியினரும் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை ஒப்புக்கொள்கிறார்கள். 13 நாடுகளில் விரவி இருக்கும் எங்கள் அமைப்பு, அனைத்துக் கட்சிகளையும் ஒருசேர எங்களுக்கான தீர்வுக்காக வலியுறுத்தி வருகிறது. &lt;br /&gt;'சுவாமி ரவிசங்கர்ஜி காட்டிய காணொளிகளைப் பார்த்த பிறகுதான், ஈழத்தில் நடக்கும் கொடூரங்கள் எனக்குத் தெரிந்தன’ என முன்பே சொன்னார் ஜெயலலிதா. உயிர் சாட்சியங்களின் குரல்களைப் பதிவு செய்து அவருக்குக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். &lt;br /&gt;தமிழர்களுக்கு என்று இருக்கும் ஓர் அரசு இலங்கை மீதான நடவடிக்கையை வலியுறுத்தினால், அந்த வார்த்தைகளுக்கான வல்லமை வலுவாக இருக்கும் என்கிறார் எதிர்பார்ப்புடன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார், &lt;/strong&gt;&lt;br /&gt;ஹிட்லர் காலத்தில் இன அழிப்பு நடந்தபோது, அதனை உரக்கச் சொல்ல ஊடக வசதி இல்லை. ஆனால், இன்றைக்கும் ஜெர்மனியில் இன அழிப்பு சம்பந்தமான புகைப்படங்களை ஆராய்ச்சி செய்து ஆவணமாக்கி வருகிறார்கள். இன வெறிக் கொடூரங்கள் உலக அரங்கில் ஒருபோதும் ஊக்குவிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தவே அத்தகைய ஆவணங்கள் தேடப்படுகின்றன.&lt;br /&gt;ஆனால், இன்றைக்கு கண் முன்னரே நடந்திருக்கும் இனவெறிக் கொடூரத்தை உலகம் மிகுந்த தயக்கத்தோடு ஒப்புக்கொள்ளும் சூழல் உருவாகி இருக்கிறது. காரணம், இலங்கை அரசுக்கு 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுத மற்றும் பண உதவிகளைச் செய்தன. ஆனால், இலங்கை அரசின் இன வெறிப் போக்கை, உதவிசெய்த அந்த நாடுகளால்கூட நியாயப்படுத்த முடியாது. &lt;br /&gt;சனல் 4’ ஒளிபரப்பிய காட்சி களைக் கண்டு சர்வதேசமும் பொங்கி வெடிக்கிறது. சிங்கள அரசின் இன வெறிக் கொடூரங்கள் அம்பலமாக்கப்படும் இன்றைய சூழலிலும், அங்கே வதை முகாம்களில், பசி, பட்டினிக்கு தமிழர்கள் ஆளாக்கப்படுவதுதான் பெரும் துயரம். &lt;br /&gt;இலங்கையின் இன வெறிப் போக்கை மறுக்க முடியாத உலக நாடுகள், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தி னால் மட்டுமே, அங்கே நடந்த - இன்றைக்கும் நடக்கும் கொடூரங்களுக்குத் தீர்வாக இருக்கும்!'' என்கிறார் ஆதங்கமாக. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;லண்டனில் வாழும் சுதா என்கிற நிர்வாகி, &lt;/strong&gt;&lt;br /&gt;இன வெறிக் கொடூரங்களாக 'சனல் 4’ காட்டிய காட்சிகளை மனசாட்சிகொண்ட யாராலும் மறுக்க முடியாது. மனித உரிமை அமைப்புகளுடன் பெண் சித்ரவதைகளுக்கு எதிரான அமைப்புகளும் இந்த விவகாரத்தில் கைகோக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாய்த் தமிழீழ உறவுகள் கைகொடுத்திருக்கும் இந்தச் சூழலில் உலகளாவிய மீடியாக்களும் உரக்கக் குரல் எழுப்பி, உலகின் மனசாட்சியை உலுக்க வேண்டும் என்கிறார் ஏக்கத்துடன். &lt;br /&gt;எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் நிகழும் புரட்சி, போர் ஆகியவற்றை அதிமுக்கியத்துடன் காட்டிய ஊடகங்கள், சனல் 4 காட்டிய காட்சிகளை மறந்தும் காண்பிக்கவில்லை. &lt;br /&gt;தொப்புள் கொடி உறவாகத் துடித்திருக்க வேண்டிய தமிழக சனல்களும் மருந்துக்குக்கூட அந்தத் துயரங்களைக் காட்டவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி - ஆனந்தவிகடன்&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2011/06/mulli_01.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2011/06/mulli_02.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2011/06/mulli_03.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2011/06/mulli_04.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2011/06/mulli_05.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2011/06/mulli_06.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;img alt="" border="0" src="http://www.tamilwin.com/photos/full/2011/06/mulli_07.jpg" /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4778918875738452370-8183091324826501546?l=raavanaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/8183091324826501546'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/8183091324826501546'/><link rel='alternate' type='text/html' href='http://raavanaa.blogspot.com/2011/06/blog-post_22.html' title='மாற்றான் தோட்டத்து மலர்- விகடன்'/><author><name>ராவணா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-3sutrzxsGKE/TgLK_KQKHyI/AAAAAAAAADE/ug3i8XWMh2M/s72-c/mulli_03.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4778918875738452370.post-5798530357854911498</id><published>2011-06-19T21:42:00.000-07:00</published><updated>2011-06-19T21:45:42.288-07:00</updated><title type='text'>மாற்றான் தோட்டத்து மலர்.....    :  காலச்சுவடு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;அற்ற குளத்து அற்புத மீன்கள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-CRtovGthap8/Tf7Pncd6TdI/AAAAAAAAADA/LNZmycnNHVU/s1600/feng-shui-painting.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-CRtovGthap8/Tf7Pncd6TdI/AAAAAAAAADA/LNZmycnNHVU/s320/feng-shui-painting.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மே 16 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் &lt;br /&gt;ஜெயலலிதா தலைமையிலான  அதிமுக அரசு பதவியேற்றுக் கொண்ட ஓரிரு மணிநேரத்துக்குப் பின்னர் என் இலக்கிய  நண்பரொருவருடன் புதிதாகக் கட்டப்பட்ட பழைய தலைமைச் செயலகக் கட்டடத்துக்குச்  சென்றேன். கடந்த ஒரு வருடத்திய எனது பயணங்களில் கால்நடையாகவும் இருசக்கர  வாகனங்களிலும் ஆட்டோ, பேருந்துகளிலும் அந்தக் கட்டடத்தைப் பலமுறை கடந்து  சென்றிருக்கிறேன். கருணாநிதியின் கனவு மாளிகையாக வர்ணிக்கப்படும் மிகப்  பிரும்மாண்டமான அக்கட்டடத்தைக் கடந்து செல்வது என்பது எப்போதுமே ஒரு அசௌகரியமான  அனுபவமாகவே இருந்து வந்திருந்தது எனக்கு. அரசு உயர் அதிகாரிகள் கொலுகொண்டிருக்கும்  பகட்டான அலுவலகங்கள் ஏற்படுத்தும் பதற்றம் தவிர தற்போது பழைய என்னும் அடைமொழியைப்  பெற்றுவிட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடம் குறித்துப் பரப்பப்பட்டு வந்திருக்கும்  எண்ணற்ற கதைகள்தாம் அதற்குக் காரணம் என நினைக்கிறேன். கட்டடத்தின் நுழைவாயில்களில்  விறைப்பாக நின்றுகொண்டிருக்கும் காவலர்களின் இமைக்காத விழிகள் அதைக்  கடந்துசெல்வோரைச் சந்தேகத்துடன் கண்காணிப்பதாகக் கற்பனை செய்து கொள்வதை என்னால்  ஒருபோதும் தவிர்க்க முடிந்ததில்லை. வெளியாள்களின் பார்வை ஊடுருவ முடியாத வகையில்  வடிவமைக்கப்பட்டிருக்கும் அதன் கனத்த சுவர்களுக்குப் பின்னால் நடமாடிக்கொண்டிருந்த  தமிழகத்தின் சக்தி மிகுந்த மனிதர்களின் காலடிச் சத்தங்கள் என்னைப் பீதியுறச்  செய்யும்.  &lt;br /&gt;அந்தக் கட்டடத்திற்குள் ஒரு மீன்தொட்டி இருப்பதாகவும் நாள்தோறும் அங்கு வருகை  புரியும் முதல்வர் கருணாநிதி அதில் விடப்பட்டுள்ள மிக அபூர்வமான மீன்களுக்கு  உணவளிப்பதைத் தன் தலையாயக் கடமைகளில் ஒன்றாகக் கொண்டிருந்ததாகவும் ஊடகங்களில்  இடம்பெற்ற சில செய்தித் துணுக்குகளைப் படித்திருந்த எனக்கு அந்த மீன்தொட்டி  பற்றியும் அதிலுள்ள மீன்கள் பற்றியும் மிகப் பரிவோடு அவற்றுக்கு உணவளிக்கும்  முதல்வரைக் குறித்தும் உருவாகியிருந்த சித்திரங்கள் கவித்துவமானவை. அந்த மீன்களின்  மீது கருணாநிதி அளவற்ற அன்பு கொண்டவர் எனவும் அவற்றை அவர் தன் சொந்தக் குழந்தைகளைப்  போல் பராமரித்து வருகிறார் எனவும் கேள்விப்பட்டிருந்தேன். நாள் தவறாமல் அங்கு வரும்  கருணாநிதி அவற்றுக்குத் தன் கையாலேயே உணவளிப்பாராம். மீன்களுக்கும் அவர்மீது அளவற்ற  பிரியமாம். தொட்டியினருகே அவரது நிழல் தென்பட்டதும் அவை துள்ளிக் குதிக்குமாம்.  மீன்களுக்கு ஒழுங்காக உணவளிக்கப்பட வேண்டுமென்பதிலும் தொட்டியில்  நிரப்பப்பட்டிருக்கும் தண்ணீர் தூய்மை கெடாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதிலும்  அவர் அவ்வளவு கறாராக இருப்பாராம். அந்த மீன்கள் முதல்வரின் பிரியத்துக்குரியவை  என்பதால் அமைச்சர் பெருமக்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தலைமைச் செயலக  அதிகாரிகளும் காவல் துறை உயரதிகாரிகளும் அவற்றின்மீது பேரன்பு கொண்டவர்களாகவே  இருந்திருப்பார்கள் அல்லவா? என்றாவது ஒரு நாள் இவ்வளவு முக்கியஸ்தர்களின் பேரன்பைப்  பெற்ற அதிமுக்கியமான அந்த மீன்களையும் மீன் தொட்டியையும் மீன்தொட்டி உள்ள தலைமைச்  செயலகக் கட்டடத்தையும் எனக்குத் தெரிந்த அரசியல்வாதி அல்லது அரசு உயரதிகாரியின்  உதவியுடன் நேரடியாகப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆசையுமிருந்தது. குறிப்பாக முதல்வர்  அவற்றுக்கு உணவளித்துக்கொண்டிருக்கும் அந்தக் காட்சியைப் பார்த்துவிட வேண்டுமென்பது  ஒரு ஏக்கமாக வளர்ந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img align="right" border="0" height="228" hspace="5" src="http://www.kalachuvadu.com/issue-138/pics/fishy.jpg" vspace="5" width="397" /&gt;ஆனால் கடந்த மே 13ஆம் தேதி தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்  வெளிவருவதற்கு முன்புவரை புதிதாகக் கட்டப்பட்ட தற்போதைய தலைமைச் செயலகக் கட்டட  வளாகத்துக்குள் நுழைவது என்பது ஒரு சாதாரண மனிதனுக்கு அவ்வளவு கவித்துவமான அனுபவமாக  இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதால் நான் அதற்கு முயலவே இல்லை. என் ஆசை  நிராசையாகிவிடக் கூடுமோ எனக் கலங்கிக்கொண்டிருந்த தருணத்தில் நம்பவே முடியாத  வகையில் கடந்த மே 16ஆம் தேதி அதற்கான வாய்ப்புக் கிடைத்தது. தான் வெற்றிபெற்றால்  பழைய தலைமைச் செயலகக் கட்டடமான புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்தே ராஜ்ய பரிபாலனம்  செய்யப் போவதாக அறிவித்திருந்த ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி முன்னணி  பெற்றுவருவதாகச் செய்திகள் வரத் தொடங்கிய அன்றே தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ்  கோட்டைக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும் இப்போது யார் வேண்டுமானாலும் புதிய தலைமைச்  செயலகக் கட்டட வளாகத்தைப் பார்வையிடலாம் எனவும் வெளிவந்த தகவல்களையடுத்து 16ஆம்  தேதி பிற்பகல் 3:00 மணிக்கு நண்பருடன் புறப்பட்டுச் சென்றேன். கிடைத்த தகவல் நம்ப  முடியாததாகவும் இருந்தது. அப்போதுதான் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையின்  பதவியேற்பு விழா முடிந்திருந்தது. முதல்வரும் அமைச்சர் பெரு மக்களும் கோட்டைக்குப்  புறப்பட்டுப் போயிருந்தார்கள். வாலாஜா சாலையில் இருக்கும் இன்னும்கூடக் கட்டி  முடிக்கப்படாத அந்தக் கட்டடத்தின் பொதுமக்கள் நுழைவாயிலை அடைந்தபோது அங்குள்ள காவல்  கூண்டில் காவலர்கள் ஓரிருவர் நின்றுகொண்டிருந்தனர். அநேகமாக இருவருமே பெண்  காவலர்களாக இருக்க வேண்டும். கெடுபிடிகளுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.  ஆள்கள் மிகச் சுதந்திரமாக உள்ளே நுழைந்துகொண்டிருந்தனர். வளாகத்தினுள் இருபது  முப்பது பேர் நடமாடிக்கொண்டிருப்பது தென்பட்டது. கரை வேட்டி, சட்டை உடுத்திய  கிராமத்து மனிதர்கள். தம் தலைவியின் பதவி யேற்பு விழாவைக் காண்பதற்காகத் தொலைதூரக்  கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் வந்தவர்களாயிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களைப் பார்த்ததும் நாங்கள் கேள்விப்பட்ட தகவல் உண்மையானதுதான் என்னும்  நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் கட்சிக்காரர்களைத் தவிர மற்றவர்களால் சுதந்திரமாக உள்ளே  நுழைய முடியுமா என்னும் சந்தேகமும் எழத்தான் செய்தது. அவர்கள் யாரிடமிருந்தாவது  சிறப்பு அனுமதி பெற்றுக்கொண்டு உள்ளே நுழைந்திருக்கலாம். வாலாஜா சாலையிலுள்ள பொது  மக்கள் நுழைவாயிலைவிட அண்ணா சாலையில் இருக்கும் பிரதான நுழைவாயில் வழியாகப் போவது  எளிதாக இருக்கும் எனக் கற்பனை செய்து கொண்டு அங்கு சென்றோம். அந்த நுழைவாயிலின்  முன்பகுதியில் இருந்த காவல் கூண்டிலுங்கூடக் காவலர்கள் சிலர் தென்பட்டனர்.  அவர்களைப் பார்த்ததும் கொஞ்சம் தயங்கினோம். எங்களிடமிருந்த பத்திரிகையாளர் அடையாள  அட்டையைக் காட்டி உள்ளே நுழைய அனுமதி கேட்கலாமா என யோசித்தவாறே நுழைவாயில் முகப்பை  நெருங்கினோம். கூண்டிலிருந்த காவலர்கள் ஏனோ முகத்தைத் திருப்பிக்கொண்டனர். அவற்றில்  தென்பட்டது கூச்சமா வெறுப்பா என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை. அதற்குள் நண்பர்  பெரிய இரும்புக் கேட்டைக் கடந்து வளாகத்துக்குள் நாங்கள் வந்த இரு சக்கர வாகனத்தைச்  செலுத்தியிருந்தார். மரத்தடியில் வண்டியை நிறுத்தியபோது எதிரில் காவல்துறை அதிகாரி  ஒருவர் தென்பட்டார். அநேகமாக அவர் சப்-இன்ஸ்பெக்டராக இருக்க வேண்டும். அவர் ஏதாவது  கேட்பார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவருங்கூட வெடுக்கென முகத்தைத்  திருப்பிக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு ஓரளவுக்குத் துணிச்சல் வந்தது. மிக மெதுவாக சட்டமன்றக் கட்டடத்தின்  வாயிலை அடைந்து உள்ளே எட்டிப்பார்த்தோம். உள்ளே தென்பட்ட ஆள்களின் நடமாட்டத்தைப்  பார்த்தபோது எங்களுக்கு அது அண்ணா சமாதிபோல, எம். ஜி. ஆர். சமாதி போல ஒரு  சுற்றுலாத் தளமாகவே தென்பட்டது. ஓரளவு பதற்றம் நீங்கிய மனங்களுடன் உள்ளே  நுழைந்தோம். கட்டடம் உண்மையிலேயே பிரும்மாண்டமாக இருந்தது. சட்டமன்றக் கூடத்தையும்  அதையடுத்து இருந்த மேலவைக் கூடத்தையும் சுற்றிக்கொண்டு செல்லும் வட்டப்பாதை  நுழைவாயிலிருந்து இருகூறுகளாகப் பிரிந்து சென்றது. கட்டடத்தின் ஆகிருதியோடு  ஒப்பிட்டால் அது மிகக் குறுகலான பாதை. வழியெங்கும் அலுவலக அறைகள், காத்திருப்போர்  கூடங்கள். சுவர்களில் நேர்த்தியான பெயர்ப்பலகைகள் பதிக்கப்பட்டிருந்தன. தீராத  ஆச்சரியத்துடன் அவற்றின் வழியே நடந்துகொண்டிருந்த மனிதர்களின் முகங்களில் ரகசியமான  பயம் தென்பட்டது. சட்டமன்றக் கூடம் பூட்டப்பட்டிருந்ததை யூகிக்க முடிந்தது.  பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்ட தரையில் ஆங்காங்கே குப்பைகள் தென்பட்டன. எதிரிலும்  பக்கவாட்டிலும் எங்களைக் கடந்துசென்றவர்கள் யாராக இருக்கக்கூடும் என யோசித்தவாறே  எண்ணற்ற அறைகளையும் கூடங்களையும் கொண்ட அப்பாதையின் வழியே நடந்து முதல் தளத்தை  அடைந்தோம். யாருமே வழி நடத்தாதபோதும் அவை எங்களைத் திட்டவட்டமான ஒரு இடத்தை  நோக்கித் தள்ளிச்செல்வது போல் பட்டது. தடுத்துநின்ற கண்ணாடிக் கதவுகளை ஒன்றன் பின்  ஒன்றாகத் தள்ளிக்கொண்டு நுழைந்தபோது வட்டவடிவிலான, மிகப் பிரும்மாண்டமான கான்கிரீட்  கூரையும் அதன் மையப் பகுதியில் வட்டவடிவிலான மீன்தொட்டியும் தென்பட்டது. மீன்தொட்டி  என்பது நெருங்கிச் சென்று பார்த்தபோது தான் தெரிந்தது. மீன்தொட்டியைப் பற்றி நான்  உருவாக்கிக்கொண்டிருந்த கற்பனைக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் கற்பனை  ஒரு பெரிய கண்ணாடித் தொட்டியாயிருந்தது. நான் பார்க்க வாய்த்திருந்தவற்றை விட  நான்கைந்து மடங்கு பெரியது. தொட்டியில் மீன்கள் இருக்க வாய்ப்பில்லை என்றார்  நண்பர். அவருக்கு ஏன் அப்படித் தோன்றியது என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை.  ஆனால் சற்று நெருங்கியதும் கலங்கலான நீர்ப்பரப்பில் மீன்களின் அலையடிப்புத் தென்  பட்டது. ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, வெள்ளை, கருநீல நிறங்களில் தம் மெல்லிய துடுப்புகளை  அசைத்து மிக அற்புதமாக நீந்திக்கொண்டிருந்தன அவை. பல சிறியவை. மீன்களின் எடை  பற்றியும் விலை குறித்தும் தன் அனுமானங்களை மற்றவர் களுக்குச் சொல்லிக்கொண்டி  ருந்தார் எங்களுக்குப் பக்கத்தில் நின்ற ஒரு கட்சிக்காரர். சில மீன்கள் ஒரு  கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டவை யாயிருக்க வேண்டுமெனவும் ஒவ்வொரு மீனும்  லட்சக்கணக் கான ரூபாய் பெறும் எனவும் அவர் சொன்ன தகவல்கள் புதி யவை போல்தான்  தோன்றின.&lt;br /&gt;&lt;br /&gt;அவை அவருக்கு ஒரு ஆச்சரியமான அனுபவமாக இருந்திருக்க வேண்டும். தன் தலைவி  முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொள்வதைப் பார்ப்பதற்காகவே அவர் சென்னைக்கு  வந்திருக்க வேண்டும். பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு  விழாவின் நேரடி ஒளிபரப்பை மெரினாவில் நிறுவப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளின்  பிரும்மாண்டமான எலக்ட்ரானிக் திரைகளில் பார்த்து ரசித்துவிட்டு அப்படியே அண்ணா,  எம்.ஜி.ஆர். சமாதிகள், உழைப்பாளர் சிலை ஆகியவற்றைப் பார்த்த களைப்புடன் நேராக இங்கே  வந்திருப்பார். இதற்குப் பிறகு சாயந்திரம் கடற்கரைக்குச் செல்லும் திட்டம்கூட  இருந்திருக்க வேண்டும். அவருக்கு இந்தக் கட்டடத்தின் பிரும்மாண்டமும் அழகிய வண்ண  மீன்களும் பேரதிசயமாகவே தென்பட்டிருக்க வேண்டும். தொண்டர்கள் சிலர் களைப்பு  மேலிட்டோராய் இன்னும் பூர்த்திசெய்யப்பட்டிருக்காத சலவைக்கல் படிக்கட்டுகளில்  சரிந்து உட்கார்ந்திருந்தனர். கரிந்த தீக்குச்சிகளும் சில சிகரெட் துண்டுகளும்  அங்கே இறைந்து கிடந்ததைப் பார்த்த எனக்கும் புகைபிடிக்கும் விருப்பம் உண்டாயிற்று.  பத்திருபதடி தூரத்தில் பெண் காவலர்கள் இருவர் பிளாஸ்டிக் நாற்காலிகளில் எதிரெதிராக  உட்கார்ந்து சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும்  தயங்கினேன். “ஒரு பிரச்சினையுமில்ல, நம்ம ஆட்சி தானே?” என ஒரு கரைவேட்டிக்காரர்  யாருக்காகவோ சொன்னதை எனக்காகச் சொன்னதாக எடுத்துக்கொண்டு படிக்கட்டில் உட்கார்ந்து  புகை பிடிக்கத் தொடங்கினேன். பிளாஸ்டிக் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த பெண்  காவலர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டு பேச்சையும் சிரிப்பையும் தொடர்ந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;நான் இயல்பாக இருக்க முயன்றேன். கட்டுமானப் பணியாளர்கள் சிலர் சோம்பல் தீராத  முகங்களுடன் குனிந்திருந்தனர். பாவப்பட்டிருந்த பளிங்குக் கற்கள் இன்னும்  மெருகேற்றப்படாததால் சொரசொரப்பாக இருந்தது தரை. நுழைவாயில் சுவரில்  பதிக்கப்பட்டிருந்த பளிங்குக் கல்வெட்டில் தென்பட்ட கருணாநிதி, மன்மோகன் சிங்,  சோனியா காந்தியின் பெயர்களைப் பார்த்தபோது இனி அவை ஒருபோதும் மெருகேற்றப்பட  வாய்ப்பில்லை எனத் தோன்றியது. தோல்வி அல்லது வெற்றியின் குறியீடாக இந்தக் கட்டடம்  உருக்குலைந்து போகும்படி விடப்படலாம். தமிழகத்தின் சுமார் நாற்பதாண்டுக் கால  வரலாற்றைக் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இப்படித்தான் தோன்றும். &lt;br /&gt;&lt;br /&gt;தீராப்பகை கொண்ட இரு கட்சிகள் தாம் ஆட்சியைப் பிடிக்கும் ஒவ்வொரு தருணத்திலும்  தோற்கடிக்கப்பட்டவர்களின் ஞாபகங்களை அழிக்க முயல்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல்  அறம். ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியான அந்தக் கணத்தில் அதற்கான பணிகள்  தொடங்கப்பட்டுவிடுகின்றன. அரசு அலுவலகங்களிலும் பொது இடங்களிலும்  வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களின் புகைப்படங்கள் மின்னல் வேகத்தில்  மாற்றப்படுகின்றன. பேருந்துகளிலும் பாலங்களிலும் கழிப்பிடச் சுவர்களிலும்  செதுக்கப்பட்டிருக்கும் பொன்மொழிகள் சுவடின்றி அழிக்கப்படுகின்றன. ஒருவர் முதல்வராக  இருக்கும்போது மற்றவர் சட்டமன்றத்தைப் புறக்கணிக்கிறார். சட்டமன்றம் யாராவது ஒரு  தரப்பினருக்குப் பாதுகாப்பற்றதாக மாறுகிறது. வரலாற்றுக் காலம் தொட்டு இதுதான்  நடந்து வந்திருக்கிறது. பகை முடிக்கும் மன்னன் தோற்கடிக்கப்பட்டவனின் அடையாளங்களை  அழிப்பதற்கு முயல்கிறான். கொடிய ஆயுதங்களுடன் திமுதிமுவென நுழைந்து சூறையாடும்  காலங்கள் முடிந்துவிட்டன. ஜனநாயகச் சமூகத்தில் பழி தீர்க்கும் முறைகள் அரசியல்  சாசனத்துக்குட்பட்டவையாக இருக்க வேண்டுமென்பது விதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;img border="0" height="484" src="http://www.kalachuvadu.com/issue-138/pics/Environment.jpg" width="600" /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;“என்ன செய்யப் போறாங்கன்னு தெரியல” என்றார் களைத்துப்போய்ப் படிக்கட்டில்  உட்கார்ந்திருந்த பார்வையாளர் ஒருவர். &lt;br /&gt;&lt;br /&gt;“ஏதாவது கவர்மெண்ட் ஆபீஸ் வரும்” &lt;br /&gt;&lt;br /&gt;“சில மாற்றங்கள் பண்ணி ஆஸ்பத்திரியா மாத்தலாம்”&lt;br /&gt;&lt;br /&gt;“அம்மா அத விரும்பமாட்டாங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“வள்ளுவர் கோட்டத்தப் போட்டு வெச்ச மாதிரி இதயும் போட்டு வெச்சுருவாங்க”&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் பெருமூச்செறிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆயிரத்து இரநூறு கோடி செலவுன்னு சொல்றாங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன பண்ண?”&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்து மறுபடியும் மீன்தொட்டிக்கு வந்தோம். நல்ல வெயில். கடல் காற்றின் குளுமை  ஓரளவுக்கு இதந்தந்தது. மீன்கள் பிளந்த வாயுடன் பார்வையாளர்களை நோக்கித் தாவின.  கண்களில் பசி தெரிந்தது. வெள்ளைச் சட்டையுடன் வந்து நின்ற மனிதரைக் கருணாநிதி என  நினைத்திருக்குமோ? தினமும் அந்த மீன்களுக்குக் கருணாநிதி உணவு கொடுத்து வந்ததாகச்  சொல்லப்பட்டது. ஆனால் எல்லா நாள்களிலும் எல்லா வேளைகளிலும் அத்தனை மீன்களுக்கும்  அவர் ஒருவராலேயே உணவு கொடுத்து வந்திருக்க முடியுமா என்ன? அதற்குப் பொறுப்பாக  யாராவது சிலர் இருந்திருக்கக்கூடுமல்லவா? அவர்கள் எங்கே போனார்கள்? அந்த மீன்களின்  மீது அவர்களுக்கும் பரிவு இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;“பாவம், பசி போல இருக்கு”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா, பதிமூணாம் தேதி காலைல பத்து மணிக்கப்புறம் இதுகளுக்கு யாரும் இரை  கொடுத்திருக்க மாட்டாங்க”&lt;br /&gt;&lt;br /&gt;அது உண்மையென்றுதான் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;“நாலஞ்சு நாள்ள செத்துரும்”&lt;br /&gt;&lt;br /&gt;“யாராவது பிடிச்சுக்கிட்டுப் போயிருவாங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“இதெல்லாம் காஸ்ட்லியான மீனுக. லட்சக் கணக்குல இருக்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;“வாஸ்து மீன்களா இருக்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆனா இந்த வாஸ்து மீன்களால கூடக் கலைஞரக் காப்பாத்த முடியாமப் போச்சு  பாருங்க”&lt;br /&gt;&lt;br /&gt;அருகிலிருந்தவர் உள்ளடங்கிய தொனியில் சிரித்தார். மீன்கள் தண்ணீரில் விழுந்த  ஒவ்வொரு நிழலையும் இரைக்காகக் கெஞ்சிக்கொண்டிருந்தன. நாங்கள் அங்கிருந்து  நகர்ந்தோம். மாடிப்படிகள் விசாலமாக இருந்தன. ஒவ்வொரு தளத்திலும் எண்ணற்ற அலுவலக  அறைகள், கூடங்கள். எல்லாத் தளங்களும் ஒரே தோற்றம் கொண்டவையாகவே இருந்தன. ஒவ்வொரு  சதுர அடியும் செல்வத்தால் இழைக்கப்பட்டிருந்தன. காத்திருப்போருக்கான அறைகளில்  யாருமே இல்லாதபோதும் குளிர் சாதனக் கருவிகள் இயங்கிக்கொண்டிருந்தன. கீழ்நிலைப்  பணியாளர்களைப் போல் தென்பட்ட சிலர் மாடிப் படிகளில் இளைப்பாறும் தோரணையில்  உட்கார்ந்திருந்தனர். ஒருவர் வெறுந்தரையில் குப்புறப் படுத்துக்கிடந்தார். எங்களைப்  பார்த்து தணிந்த குரலில் ஏதோ சொன்னதாகக் கற்பனை செய்துகொண்டோம். பிறகு ஒவ்வொரு  தளமாகப் பார்த்துக்கொண்டே நடந்தோம். ஐந்தாவது தளத்தில் முதலமைச்சரின் செயலகம்.  சிலர் அதை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தனர். பக்கத்தில் ‘தொங்கும் தோட்டம்’.  பச்சைப் பசேலெனத் தோற்றமளித்த குரோட்டன்களும் புற்களும் பிளாஸ்டிக் காலானவையோ எனச்  சந்தேகிக்கத் தோன்றியது. அங்கிருந்து அண்ணா சாலையில் வாகனங்கள் அசுர வேகத்தில்  விரைந்துகொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. பேருந்துகளில் தாள முடியாத நெரிசல்.  ஏனோ அங்கிருக்கப் பிடிக்கவில்லை. நண்பரும் புறப்படத் தயாராக இருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இயங்கும் நிலையிலிருந்த லிப்ட்களைப் பயன்படுத்தப் பார்வையாளர்கள்  தயங்கிக்கொண்டிருந்தனர். ஒன்றின் முன் அதிகாரிகள் காத்திருந்தனர். நாங்கள் இருவரும்  காலியாக இருந்த மற்றொன்றைத் தேர்வுசெய்தோம். உள்ளே நுழைந்து கதவை மூடிக்கொண்ட பின்  எங்கே மின் தடை காரணமாக அந்த லிப்ட் பாதியில் நின்றுவிடுமோ எனப் பயமாக இருந்தது.  அந்தக் கட்டடத்துக்கான மின் இணைப்பு எந்த நேரத்திலும் துண்டிக்கப்பட்டுவிடலாம் என  நினைப்பது நிச்சயம் கற்பனையானதாக இருந்துவிட முடியாது அல்லவா? திடீரென அதன்  வாயில்கள்கூட இழுத்து மூடப்பட்டுவிடலாம். உள்ளிருக்கும் பார்வையாளர்களை  வெளியேறும்படி எச்சரிக்கக்கூட அதிகாரிகளுக்கு அவகாசமில்லாமல் போகலாம். இக்கற்பனை  தந்த பதற்றத்தால் அவசர அவசரமாக வெளியே வந்தோம். வாசலில் கட்டுக்கட்டாகப்  புத்தகங்கள். புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கிவந்த செம்மொழி நூலகத்திலிருந்து  கொண்டுவரப்பட்டவையாயிருக்கும். பணியாளர்கள் ‘பொறுப்பில்லாமல்’ அவற்றை அங்கே  போட்டுவிட்டுப் போயிருப்பார்கள். முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு இந்த விஷயத்தை  யாராவது கொண்டுசென்றால் ‘பரிகாரம்’ கிடைப்பது நிச்சயம் எனத் தோன்றியது.  ஜெயலலிதாவுக்குப் புத்தகங்களின் மீது ஏதாவது கோபமிருக்குமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே இன்னும் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. பறக்கும் ரயிலொன்று  பெருஞ்சத்தமெழுப்பியபடி கடந்து சென்றது. கூவத்திலிருந்து வந்த காற்றில் குடலைப்  பிடுங்கும் துர்நாற்றம். அதன் கரையோரமிருந்தவர்கள்தாம்  வெளியேற்றப்பட்டுவிட்டார்களே! துர்நாற்றத்தைக் கண்ணகி நகருக்கும் கன்னடப்  பாளையத்துக்கும் செம்மஞ்சேரிக்கும் கொண்டு சென்றுவிட்டார்களே! இன்னும் ஏன்  துர்நாற்றம்? கூவத்தைத் தூய்மைப்படுத்துவதற்கும் சிங்காரச் சென்னையைக்  கட்டியெழுப்புவதற்கும் தலா 1200 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டிருப்பதாகத் தகவல்கள்  வந்தனவே! பாழாய்ப்போன இந்தச் சென்னையைச் சிங்காரிக்க இன்னும் எத்தனை ஆயிரம்  கோடிகளைச் செலவிட வேண்டுமோ தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியின் அடையாளங்களை முற்றாக அழிக்கும்வரை இந்தக் கட்டடம் கைவிடப்படலாம்.  ஒரு சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கான குறியீடாகப் பாழடைந்து நிற்கலாம். பிழைப்புத்  தேடி அலைந்து திரிபவர்களுக்குச் சற்று இளைப்பாற இதன் பூர்த்தி செய்யப்படாத  பளிங்குத் தரைகள் உதவலாம். வீடற்ற சென்னை நகரின் சாலையோரவாசிகள் இரவுகளில் இங்கே  வந்து படுத்துக்கொள்ளலாம். காதலர்களுக்கும் கள்ளக் காதலர்களுக்கும் இக்கட்டடத்தின்  உள்ளே செல்லும் குறுகலான பாதைகளில் படர்ந்திருக்கும் இருள் உதவலாம்.  கூவக்கரைகளிலிருந்து புறநகர்களுக்கு விரட்டப்பட்ட சென்னையின் விளிம்புநிலை  மக்கள்கூட இங்கே வந்து குடியேறலாம். அப்படி நடந்தால் அது ‘கவித்துவ நீதி’க்கான நம்  காலத்தின் உதாரணமாக வரலாற்றில் இடம்பெறக்கூடும். ஆனால் கட்டடம் சமூக விரோதிகளின்,  பயங்கரவாதிகளின் உறைவிடமாகிவிட்டது என யாராவது விமர்சித்தால் சட்டம் ஒழுங்கைப்  பாதுகாப்பதாக உறுதி பூண்டுள்ள நம் முதல்வர் அதைச் சரிசெய்ய முயலலாம். கட்டடத்தைப்  பூட்டி சீல் வைக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தருணத்தில் வெகு காலத்துக்கு முன்னால் நான் பார்த்த ‘சக்ரா’ என்னும்  இந்தித் திரைப்படம் நினைவுக்கு வருகிறது. நஸ்ருதீன் ஷா, ஸ்மிதாப் பாட்டீல்  நடித்தது. மும்பையின் சேரிப் பகுதி ஒன்றை மையமாகக்கொண்ட கதை. நாயகன், நாயகி  உள்ளிட்ட எல்லோருமே உதிரிகள். பிக்பாக்கெட் அடிப்பவர்கள், திருட்டுகளில்  ஈடுபடுபவர்கள், பாலியல் தொழிலாளர்கள் வாழும் அச்சேரிப் பகுதி குற்றங்களின்  ஊற்றுக்கண்ணாக மாறிவிட்டது என அறிவித்து அதை புல்டோசர்கள் மூலம் இடித்துத்  தள்ளிவிடுவார்கள். ஆனால் புதிதாகக் கட்டப்பட்ட இந்தப் பழைய தலைமைச் செயலகக்  கட்டடத்துக்கு அப்படியொரு நிலை ஏற்பட்டுவிடும் எனக் கற்பனை செய்ய முயல்வது  மனப்பிறழ்வின் அறிகுறியாகவே எடுத்துக்கொள்ளப்படும். எனவே எதிர்மறைக் கற்பனைகளைக்  கைவிட்டுவிட்டு நம்பிக்கையூட்டும் வேறொரு கற்பனையைப் பற்றி யோசிக்கலாம். மனம்  வெதும்பியிருக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் ஆசை ஆசையாய்க் கட்டியெழுப்பிய  கனவு மாளிகையை மீட்கச் சபதமெடுக்கலாம். மீண்டும் தமிழக மக்களின் நம்பிக்கையைப்  பெற்று ஆறாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்கும்போது இந்தக் கட்டடத்தைப்  புதுப்பித்து அதைத் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகமாக அறிவிக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவுதான் சிதைந்து போயிருந்தாலும் ஒரே வாரத்துக்குள் அதன் பழைய பொலிவை  மீட்டெடுப்பதற்குத் தம்மால் முடியும் என்பதை நம் அதிகாரிகள் இப்போது நம் கண்  முன்னால் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்களே! ஆனால் அதுவரை கருணாநிதியால் தமிழக  மக்களை விடவும், அவரை நம்பி வாக்களித்து ஏமாந்த கோடிக்கணக்கான வறியவர்களைவிடவும்  கூடுதலாக நேசிக்கப்பட்ட அந்த மீன்கள் உயிரோடிருக்குமா?&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4778918875738452370-5798530357854911498?l=raavanaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/5798530357854911498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/5798530357854911498'/><link rel='alternate' type='text/html' href='http://raavanaa.blogspot.com/2011/06/blog-post_19.html' title='மாற்றான் தோட்டத்து மலர்.....    :  காலச்சுவடு'/><author><name>ராவணா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-CRtovGthap8/Tf7Pncd6TdI/AAAAAAAAADA/LNZmycnNHVU/s72-c/feng-shui-painting.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4778918875738452370.post-1973764125475414225</id><published>2011-06-16T21:36:00.000-07:00</published><updated>2011-06-16T21:39:08.192-07:00</updated><title type='text'>மாற்றான் தோட்டத்து மலர்- குமுதம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-OPAqFnjbINE/TfraYIoZOoI/AAAAAAAAAC8/Lkq-smvaeCk/s1600/tmk.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-OPAqFnjbINE/TfraYIoZOoI/AAAAAAAAAC8/Lkq-smvaeCk/s320/tmk.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div align="justify" class="blackn"&gt;''அதையேன் கேட்கறே. 'அம்மா' டெல்லிக்கு போனாலும்  போனாங்க 'ஐயா'வுக்கு இங்க ஆட்டம் கண்டிருக்கு. அதிமுக-காங்கிரஸ் உறவு  வந்துடுச்சோன்னு நடுங்குறாரு.பத்திரிகைங்கதான் அப்படி எல்லாம் சொல்லுது.ஆனால் என்ன  நடந்தாலும் சரி.நாங்க காங்கிரஸ் கூட்டணியில இருந்து வெளியேற மாட்டோம்.அதுவே வெளிய  அனுப்பினாலும்கூட எங்களை யாரும் பிரிக்க முடியாதுன்னு'எல்லாம் கடிதம் எழுதி  கலாய்க்கிறாரு.எதிர்கட்சி அந்தஸ்து இல்லாம கூட இந்தளவுக்கு தோற்றுப்போய் இருக்கோம்.  இதுக்க  மேலவும் நாங்க தோற்றுட மாட்டோம்னு சொல்றாரு'' என்று அன்வர்பாய் விளக்கம்  சொன்னார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;'ஒரு வேளை அப்படி ஒரு உறவு மலர்ந்திடுமோ? டெல்லி  போன முதல்வர் நாம் நடந்த காலங்களில் இருந்ததைப் போல இந்த முறை இருக்க  மாட்டோம்.காங்கிரஸ் உடன் சுமூகமாகவே நடந்துகொள்வோம்னு வேற செயல்பட்டிருக்காங்க. அத  வச்சுதான் கலைஞர் பயந்திருப்பாரோ?'- சித்தன் தெரியாமல் கேட்டு வைத்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;"அடப்ப பாவிங்களா. அரசியலே அங்கதான்பா  ஆரம்பமாகிறது. காங்கிரஸ் கூட கூட்டணி வச்சதாலதான் இந்தளவு தோற்றிருக்கோம்.ஈழப்  பிரச்சனையில காங்கிரஸ் தலைமைதான் சிங்களத்துக்கு எல்லாவித உதவியும் செய்ததுங்கிறதை  தமிழக மக்கள் தெரிஞ்சுகிட்டாங்க.அது நமக்கு தெரியாமப் போச்சு.தெரிந்தாலும் இந்த  சனியன் &lt;img align="left" alt="" border="0" height="164" hspace="5" src="http://www.kumudam.com/dotcom/muchandi/imagefolder/kalaingar.jpg" vspace="5" width="139" /&gt;புடிச்ச 2ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேட்டிற்காக பொறுத்து  போகவேண்டியதாயிச்சு. அது வேற இருந்தாலும் தனியே நின்றிருந்தாகூட ஒருவேளை  எதிர்க்ட்சி அந்தஸ்து கிடைச்சிருக்குமோன்னு இப்ப கவலைப்படுறாரு.அடுத்து இப்போ  உள்ளாட்சித் தேர்தல் வரப்போகுது. அதையும் கோட்டை விட்டா திமுக-வுல ஒருத்தன் கூட  இருக்க மாட்டான்.அதனால காங்கிரச விட்டுட்டு அந்த உள்ளாட்சி தேர்தலை சந்திக்கணும்னு  திட்டம் வச்சிருக்காரு தெரியுமா?" என்றார் சுவருமுட்டி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;"அது எப்படிப்பா. காங்கிரஸ் கட்சியை விட்டா இப்போ  அவருக்கு வேற நாதியே இல்லை. 2ஜி ஊழல் வழக்குல அடுத்து என்னென்ன நடக்கும்னு எல்லாம்  தெரியுமே?"- சித்தன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;"நீங்க நினைக்கிறது அப்படி. ஆனால் அரசியல்ல பழம்  தின்னு கொட்டை போட்டவரான கலைஞர் நினைப்பது வேற.எப்படியாவது காங்கரஸ்-அதிமுக கூட்டணி  உறவு வந்துடுச்சுன்னா, பிறகு அந்தக் கூட்டணியில இருக்கிற இடதுசாரி கட்சிகள் வெளிய  வந்துடும்.அப்படியே விஜயகாந்தையும் இழுத்திடலாம்.பொறுப்பான எதிர்கட்சியா  இருந்தால்தான் விஜயகாந்த் அடுத்த தேர்தலுக்குள்ள மக்கள் நம்பிக்கைய பெற முடியும்.  கூட இருந்துகிட்டே அதிமுக-விற்கு ஜால்ரா அடுசிக்கிட்டிருந்தா மக்கள் கழட்டி  விடுவாங்கன்னு சொல்லிப் புரிய வச்சாபோதும். அவர் எதிர்க் கட்சியா மட்டுமில்ல,  அதிமுக-வுக்கு எதிரிக் கட்சியாகவே மாறிடுவாருன்னு கணக்கு வச்சிருக்காரு.அதைப்  பயன்கடுத்த உள்ளாட்சி தேர்தலில் போதிய இடத்தை பிடிச்சிட்டோம்னா திமுக-காரங்க  கட்சியில தங்கியருப்பாங்க இல்லையா....&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;அது மட்டுமல்ல.வரும் காலத்தில எப்படியும் அந்த  1,76,000000000.....ஊழல் வழக்குல திமுக முக்கிய ஆளுங்களை எல்லாம் டெல்லி திகார்  சிறை உள்ள வச்சுக்கப் போகுது. அப்படி நடக்குறப்போ 'எல்லாத்துக்கும் காரணம்  அதிமுகதான். அந்த அம்மா தூண்டிவிட்டுதான் டெல்லி காங்கிரஸ் இப்படி ஒரேடியாய் எங்களை  பாடாய்படுத்துதுன்னு சூப்பர் அரசியல் செய்யலாம் இல்லையா. அப்படி சொல்லிச் சொல்லியே  மக்கள்கிட்ட அனுதாபத்தை தேடிக்கலாம் இல்லையா. அதனால சும்மா 'எங்க கூட்டணிய யாரும்  உடைக்க முடியாது. சதி நடக்குது, பத்திரிகைகாரங்கதான் அந்த சதியில  ஈடுபட்டிருக்காங்கன்னு சும்ம சொல்லிகிட்டே இருக்காரு. அப்படியே இடையில இடையில 'கூடா  நட்பு'...அதுதான் இப்படி ஒரு தோல்வின்னு சொல்லி உசுப்பேத்துறாரு'' என்று  விவரித்தார் சுவருமுட்டி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;"ஏம்பா நீ சொல்றது குழப்பமா இருக்கு. இந்தப்  பக்கம் என்னடான்னா ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ' ஒரு பக்கம் காங்கிரஸ் கூட்டணியாலதான்  இந்தளவு தோல்வி.பேசாம அந்தக் கூட்டணியை விட்டு வெளியில வாங்கன்னு வீரமணி, ராமதாஸ்,  திருமாவளவன் ஆகியோரை வச்சு அறிக்கை விட வைக்கிறாரு கலைஞர். தைரியம் இருந்தா அதை  அவரே நேரடியா சொல்லிட வேண்டியதுதானே.சும்மா எதுக்கு காங்கிரஸை  மிரட்டிப்பார்க்கிறாரு. அந்த மிரட்டல் எல்லாம் இனிமேலும் எடுபடாதுன்னு' போட்டுத்  தாக்கியிருக்காரே. அதை வச்சு பார்க்கிறப்போ திமுக- காங்கிரஸ் கூட்டணி பணால்  ஆயிடும்னு இல்ல தோணுது"- என்ற சந்தேகத்தை எழுப்பினார் கோட்டை கோபாலு.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;''அவர்கள் என்ன வேண்டுமானாலும் 'கணக்கு'  போடட்டும். ஆனால் 'அம்மா' கணக்கு வேற மாதிரி.! மத்திய அரசோடு சுமூக உறவுன்னுதான்  சொல்லியிருக்காங்க. மாநில அரசுக்கு இப்போ திமுக- விளையாடிட்டுப் போனதால ஒரு லட்சம்  கோடிக்கு மேல நெருக்கடி இருக்கு.&lt;img align="right" border="0" hspace="5" src="http://www.kumudam.com/dotcom/muchandi/imagefolder/jjaya.jpg" vspace="5" /&gt; மத்திய  அரசுதான் உதவணும். அதுக்காக அந்தக் கட்சியோட கூட்டணி எல்லாம் சேர முடியாது.  சேர்ந்தால் காங்கிரஸ் தலைமையில நடந்த எல்லாவித ஊழலுக்கு அதிமுக-வும் சேர்ந்து பதில்  சொல்ல வேண்டியிருக்கும். தேவையா அது. குஜராத் மோடிகூட பிரதமர் மன்மோகன் சிங்குடன்  நல்ல நட்புறவைதான் வச்சிருக்கார்.அதுக்காக அவர் என்ன காங்கிரஸ் கட்சியோட கூட்டணியா  வச்சிகிட்டார்.பக்கத்து மாநில முதல்வர் எடியூரப்பா இம்புட்டு இடியையும் தாங்கிட்டு  இருக்காரே. மத்திய அரசு உதவி இல்லாமலா. அந்த மாதிரிதான் அதிமுக-வும் உறவை  வச்சுக்கும். நல்ல நட்புறவு இருக்கும். ஆனால் கூட்டணி எல்லாம் கிடையாதுங்கிறதை  அங்கேயே போட்டுடைச்சு இருக்கார். தில்லுமுல்லு செய்து ஜெயிச்சிட்டுப் போன ப.  சிதம்பரம்ணு போட்டுத் தாக்கியிருக்காங்க. அது மட்டுமல்ல மத்திய அரசு கொண்டுவந்த  தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்தை ரத்து செய்யணும்னு சொன்னதோடு நிக்காம,  அதுக்கான துவக்க விழாவுல தமிழக அரசு சார்பா யாரையும் போகவிடாம புறக்கணிப்பு  செய்திருக்காங்க. அதாவது அரசியல் வேற நட்புறவு வேறங்கிறதுதான் அதிமுக-வோட  போக்குன்னு'' போட்டுடைத்தார் சவருமுட்டி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;"சரிப்பா இந்த மாறன் விவகாரம் என்னதான் ஆகுமாம்.  ஒண்ணுமே தெரியலையே.."- அன்வர்பாய்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;''நான் சொல்றன். இதுக்கு முன்னாடி ஆ.ராசா என்ன  சொன்னார். நான் ஒரு தப்பும் பண்ணலே. மிஸ்டர் கிளீன் அப்படின்னுதானே! அந்தம்மா  கனிமொழி என்ன சொன்னது. எனக்கும் இந்த ஊழலுக்கும் தொடர்பே இல்லை. நான் ரொம்ப ரொம்ப  சுத்தம்னுதானே! இப்போ அவிங்க ரெண்டு பேரும் டெல்லி திகார் சிறையில கம்பி  எண்ணிகிட்டிருக்காங்க.அதே மாதிரிதான் நம்ம தயாநிதி மாறன் விவகாரமும் முடியும்ணு  சொல்றாங்க. அவர் பதவி விலகணும்னு முக்கிய எதிர்கட்சி எல்லாம் சொல்லியாச்சு. இப்போ  டெல்லி போன முதல்வர் ஜெயலலிதாவும் சொல்லிட்டாங்க. பாராளுமன்றக் கூட்டம் வேற கூட  இருக்கு. தயாநிதியை பதவி இறக்காம அந்த கூட்டத்தை நடத்தினா நம்ப பிரதமர் பாடு பெரும்  திண்டாட்டமா போயிடும். அதனால வேற வழியில்ல. எல்லா «வைலயும் முடிஞ்சிருக்கு. கூடிய  சீக்கரம் தயாநிதி பதவி விலகுவாரு. பிறகு அவருக்கும் சம்மன் வரும். டெல்லிக்குப்  போவாரு. அப்படியே திகாருக்கும் போயிடுவாரு. நீ ஒண்ணும் கவலைப்படாதேப்பா'' என்று  நக்கலடித்தார் சித்தன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;"என்னமோ நான்தான் ஊரை அடிச்சு உலையில போட்ட  மாதிரி...நான் எதுக்கு கவலைப்பட போறேன்"- சுவருமுட்டி&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;"சரிப்பா முதல்வர் ஜெயலலிதா ஈழப் பிரச்சனைய  இம்புட்டு சீரியஸா கையில எடுப்பாருன்னு கலைஞர் நினைக்கவே இல்லையாமே. தெரியுமா  சேதி?"- அன்வர்பாய்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;''நம்பளை மாதிரியே அந்த அம்மாவும் 'டீல்'  பண்ணுவாங்கன்னு நினைச்சிருப்பாரு போல. பார்த்தா சட்டமன்றத்துல 'ராஜபக்சே போர்க்  குற்றவாளி.நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடையை  கொண்டுவர இந்தியா அழுத்தம் கொடுக்கணும்னு வேற ஒரே பாய்ச்சலா பாய்ஞ்சுட்டாங்க.  அதுமட்டுமில்ல, டெல்லியில &lt;img align="left" border="0" hspace="5" src="http://www.kumudam.com/dotcom/muchandi/imagefolder/soniag.jpg" vspace="5" /&gt;பிரதமரை  சந்திச்சப்போவும் அந்த விசயத்தையே வலியுறுத்தியிருக்காங்க. ஈரேழு பதினான்கு  லோகத்துக்கும் நான்தான் தமிழின தலைவர்னு சொல்லிகிட்டிருந்த கலைஞர் டோட்டல் டேமேஜ்.  அங்கே போர் முடிந்த இரண்டு வருஷமா அப்படித் தீர்மானம் கொண்டுவரணும்னு எல்லோரும்  கேட்டுக்கிட்டாங்க.கலைஞர் அதை செய்யல. காங்கிரஸ மனசு நோகக்கூடாதுன்னு விளையாட்டு  காட்டினாரு. இப்போ அந்த அம்மா நிஜமாகவே விளையாடிட்டாங்க. பாவம் நான் தமிழன்னு இனிமே  அவரால வெளியில சொல்லிக்கவே முடியாதபடி செய்துட்டாங்க'' என்றவாறு சிரிக்காமல்  அழுதார் கோபாலு.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;"அதுக்கு ஏன்பா அழறே. இப்ப என்ன நடந்துபோச்சு.."-  சித்தன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;''ஒண்ணுமே நடக்கல. அதுதான். திமுக உயர்மட்டக்குழு  கூடியது. அவ்வளவுதான். மகள் கனிமொழி விடுதலைக்கு உதவாத காங்கிரஸ் கூட்டணி தேவைதானா.  பேசாம விலகிடுவாருன்னு நினைச்சேன். அதுவும் நடக்கல. 'அவர் ஆசைப்படி' தயாநிதியும்  உள்ள போயிடுவாருன்னு நினைச்சேன். அதுவும் இப்ப நடக்கல. பிறகு தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி தலைவரை மாத்துவாங்கன்னு நினைச்சேன். அதுவும் நடக்கல. இப்படி என்னோட கவலை  பெரிசா நீண்டுகிட்டே போகுதா...அதுதான் கண்ணீர் விட்டேன்"- கோபால்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;''நீ காங்கிரஸ் கமிட்டி பற்றி பேசினதும்தான்  ஞாபகம் வருது. தமிழ்நாட்டுத் தலைவர் தங்கபாலுவை வர்ற 20-ம் தேதிக்கு பிறகு  மாத்திடுவாங்களாம்.அதுக்கான வேலை எல்லாம் தீவிரமா நடக்குது.தங்கபாலு நொந்தபாலுவாகப்  போகிறார்.மனுசன் கலைஞரு கூட சேர்ந்துகிட்டு என்னமா ஆடினாருன்னு அவிய்ங்க கட்சி  ஆளுங்களே 'அட்ராசக்கை' சொல்றாங்க. புது தலைவர் யாருங்கிறதுதுதான் பேச்சு. அப்படி  வர்ற தலைவர் அதிமுக-வுடன் சுமூக உறவை ஏற்படுத்திக்கிறவரா இருக்கணும்.  ஜெயலலிதாவுக்கும் புடிக்கணும்.அப்படியான ஆளுதான் சரிபடும். சென்ட்ரல்  கவர்மெண்டுக்கு அந்தம்மா ரொம்பவும் குடைச்சல் கொடுக்க கூடாதுன்னு டெல்லி  நினைக்கிறதாம்.அந்த வகையில பார்த்தா ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்குதான்  வாய்ப்புங்கிறாங்க. இல்ல சதர்சனம் நாச்சியப்பனுக்கும் வாய்ப்பு என்கிறாங்க, இல்லே  ப.சிதம்பரம் காட்டும் ஆளுக்குதான்னும் சொல்றாங்க. யார் வந்தா என்ன, வேட்டி சட்டைய  கிழிச்சுக்கறதை தவிற புதுசா ஒரு சாதனையும் செய்யப்போறதில்லங்கிறதுதான் 'தொட்டுத்  தொடரும் பட்டுப் பாரம்பரியம்'''- சொன்னபடியே சிரித்தார் சுவருமுட்டி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;"இந்த செய்தி சிரிக்கக் கூடியதல்ல. நாம எல்லாம்  தலைகுனியக் கூடியது. சேனல்-4 வெளியிட்ட ஈழ மக்களின் படுகொலைக் காட்சிகளை  பார்த்தீர்களா? அது பற்றி ஒன்றையுமே பேசாமல் விட்டால் எப்படி?"- ஆதங்கத்தோடு  கேட்டார் சுவருமுட்டி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;''எவனோ ஒரு மொழி, நம் இனம் சாராத ஒரு அந்நிய  தேசத்துகாரன் முயற்சி எடுத்துக் கொண்டுவந்தது. முதலில் அதற்குத் தலைவணங்கணும். இங்க  நம்ம ஆட்களும் அப்படியானதை எல்லாம் மறைச்சுட்டு மானாட மயிலாடன்னு  ஆடிக்கிட்டிருந்தாங்க. ஆனால் அந்த சேனல் மனிதர்கள் என்ன செய்தார்கள் பார். ஈழ  மக்களின் துயரத்தை அம்பலப்படுத்தி,சிங்கள தேசத்தின் இனவெறியை வெளிச்சம் போட்டு  காட்டியிருக்காங்க.&lt;img align="right" border="0" hspace="5" src="http://www.kumudam.com/dotcom/muchandi/imagefolder/vkanth.jpg" vspace="5" /&gt;இப்போ உலக  மனித இனமே அதைப் பார்த்து குமுறிகிட்டு இருக்கு.இங்க பெரிய அண்ணன் மாதிரி இருக்கும்  இந்தியா மட்டும் கொஞ்சம் ஒதுங்கியிருந்தா போதும். ராஜபக்சேவை அப்படியே பிரிச்ச  மேய்ஞ்சுடுவாங்க. அம்புட்டு கொதிப்புல இருக்காங்க. அதுக்க ஏத்த மாதிரி 'கல் தோன்றி  மண் தோன்றாக் காலத்தே' என்று இங்க தாய்த் தமிழகத்தல் இருந்து பேசிகிட்டு இருக்கிற  நம் தலைவர்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து பெரிய நெருக்கடிய இந்தியாவுக்குக்  கொடுக்கணும். சும்மா ஆளாளுக்கு ஏதாவது பேசிகிட்டு இருக்கிறாங்க. ஒருத்தர் மேல  ஒருத்தர் குறைசொல்லிக்கிட்டு இருக்கிறாங்க. என்னத்தை சொல்றதுன்னு'' வருத்தப்பட்டார்  சித்தன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;''உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். அந்த சேனல்-4  வெளியிட்ட காட்சிகளைப் பார்த்ததில் இருந்தே இங்கே ஒரே காய்ச்சல்தான்.என்ன விதமான  போராட்டத்தை நடத்துறதுன்னு தலைவருங்களுக்குள்ள பேசிக்கிட்டு இருக்காங்க. இந்த  வீடியோக் காட்சிகளை டெல்லிக்கு எடுத்துக் கொண்டுபோய் வடநாட்டு அரசியல் கட்சி  தலைவர்களை எல்லாம் அழைத்து போட்டுக் காட்டி பிரச்சாரப்படுத்துவதோடு, அவர்களின்  ஆதரவையும் திரட்டி பாராளுமன்றத்தில் பிரச்சனைய எழுப்ப வைக்கணும்னு ஒரு முயற்சி  நடந்துகிட்டிருக்கு. அது இல்லாமா எல்லா ஆதரவு அமைப்புகளும் ஒன்றுகூட பெரிய கண்டனக்  கூட்டம் ஒன்றை நடத்தவும் பேசிக்கிட்டு இருக்காங்க. இன்னும் ஒரு தரப்பு இந்த  வீடியோப் பதிவுகளை ஒவ்வொரு கல்லூரிக்கும் நேரில் எடுத்துக் கொண்டு போய்  மாணவர்களிடம் கொடுக்க வேண்டும்.கல்லூரி மாணவர்களின் ஆதரவுதான் பலமானதாக இருக்கும்  என்பதோடு வழக்கறிஞர்கள் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த வருகிறார்கள்.விரைவில் ஒரு  போராட்டம். சிங்கள அரசக்கு எதிராக நடக்கும். அதே போன்று இந்தியா இலங்கைக்கு எந்த  விதத்திலும் உதவக்கூடாது என்பதையும் அந்த போராட்டம் சொல்லுமாம். பார்க்கலாம்''  என்று எழுந்தார் சித்தன். (சபை மீண்டும் கூடும்)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="blackn"&gt;- பா.ஏகலைவன்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4778918875738452370-1973764125475414225?l=raavanaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/1973764125475414225'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/1973764125475414225'/><link rel='alternate' type='text/html' href='http://raavanaa.blogspot.com/2011/06/blog-post.html' title='மாற்றான் தோட்டத்து மலர்- குமுதம்'/><author><name>ராவணா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-OPAqFnjbINE/TfraYIoZOoI/AAAAAAAAAC8/Lkq-smvaeCk/s72-c/tmk.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4778918875738452370.post-6313875266014654063</id><published>2011-06-11T21:20:00.000-07:00</published><updated>2011-06-11T21:27:27.090-07:00</updated><title type='text'>கூண்டுக்குள்ள  என்ன வச்சு கூவி நின்ன ஊரபத்தி ..........மாற்றான் தோட்டத்து</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-guzhk-QqtXk/TfQ-vVx__lI/AAAAAAAAAC0/Q5IxX1jcyuE/s1600/226428_103912599699406_100002419988780_34185_6768665_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-guzhk-QqtXk/TfQ-vVx__lI/AAAAAAAAAC0/Q5IxX1jcyuE/s1600/226428_103912599699406_100002419988780_34185_6768665_n.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #003399; font-size: large;"&gt;&amp;nbsp;&lt;span style="color: black; font-size: small;"&gt;ராசாத்தி மனசில........அந்த ராசாவின் நினப்பு தான்................. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"டெல்லிப் பக்கம் போயிருந்தேன்பா. அதான் கூட்டம் நடத்த  தாமதமாயிடுச்சு" என்று விளக்கம் கொடுத்த &lt;span style="color: #009900;"&gt;சித்தன்&lt;/span&gt;  "கச்சேரியை ஆரம்பிச்சுடலாமா" என்றார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;''என்னத்தை ஆரம்பிக்கறது. சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம்  ஆண்டின்னு சொல்வாங்க. அந்த மாதிரி நம்ப கலைஞர் செய்துட்டதா சி.ஐ.டி காலனி வீட்டம்மா  புலம்புறாய்ங்களாம். இந்த சுப்ரமணியசுவாமி பண்ற அலம்பலை எப்படியாவது  கட்டுப்படுத்தலாம்னு மகள் கனி படாதபாடு பட்டது யாருக்காவது தெரியுமா? அந்த 'சாமிய'  ஸ்பெக்ட்ரம் விஷயத்துல ஓவரா சாமியாடதேன்னு டெல்லியில ஒரு தடவ பார்த்து பேசுச்சு.  பிறவு ஒரு தடவை சென்னை ஏர்போர்ட்டிலேயே வச்சு சந்திச்சு கேட்டுக்கிடுச்சு. அப்பால  ஒரு தடவ சாந்தோம்ல இருக்கிற சுவாமியின் வீட்டுக்கே போய் சமாதானப்படுத்துச்சு.அந்த  ஆளும் பார்க்கலாம்னு சொல்லியனுப்பினாரு.அதுக்குள்ளாகவே யார் ஆலோசனை  சொல்லி-கொடுத்தாங்களோன்னு தெரியல.நீதிமன்றத்துல 'இந்த வழக்குல கருணாநிதியையும்  சேர்த்து விசாரிக்கணும்னு' அந்தாளு சொன்னதுக்கு இவரு வக்கீல் நோட்டீஸ் அனுப்புறதா  பெரீசா செய்திய வெளியிட்டாரு. இப்ப என்னாச்சு பாருங்க.சாமி ரொம்பவே ஆட  ஆரம்பிச்சுடுச்சு. கவர்னரை சந்திச்சு முதல்வர் பேர்ல &lt;img align="left" border="0" hspace="5" src="http://www.kumudam.com/dotcom/muchandi/imagefolder/index1.jpg" vspace="5" /&gt;வழக்கு போட  அனுமதி வேண்டும்னு மனு கொடுத்திருக்காரு.இதெல்லாம் தேவையான்னு ஒரு 'கச்சேரி  வக்கிறாய்ங்களாம்.''என்று பிள்ளையார் சுழி போட்டார் கோட்டை &lt;span style="color: #ff00cc;"&gt;கோபாலு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"ஏம்பா. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துல 'வீட்டு ஒதுக்கீடு  செய்ததில் முறைகேடு நடந்திருக்கு'ன்னா அதுக்கு முதல்வர் என்ன செய்வாரு? அந்த துறை  அமைச்சர்தானே பொறுப்பு"என்று வெள்ளந்தியாக கேட்டார் அன்வர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;''அடக்கடவுளே. வீடு ஒதுக்கீடு பெற்றதுல பலனடைந்தவங்க யாரு?  பட்டியலை எடுத்து பாருங்க. எல்லா ஆளுங்களும் முதல்வருக்கு ரொம்ப நெருக்கமா  இருக்கிறவங்க. நிலைமை என்னாகும் தெரியுமா. முதல்வர் தலையிட்டு அதிகாரத்தை தவறா  பயன்படுத்தி தகுதி இல்லாதவங்களுக்கு கொடுத்திருக்காய்ங்கன்னு வழக்கு போகும்.கவர்னர்  முன்னாடி பதவி ஏத்துக்கறப்போ என்ன சொல்லி பதவியேற்கிறாங்க.!&lt;img align="right" alt="" border="0" height="75" hspace="5" src="http://www.kumudam.com/dotcom/muchandi/imagefolder/subramaniya_samy.jpg" vspace="5" width="100" /&gt; அதிகாரத்தை தவறாக பயன்படுத்த மாட்டேன்னுதானே.அந்த வகையில  சுப்ரமணிய-சுவாமிகிட்ட நம்ப முதல்வரு நல்ல மாட்டிகிட்டாருன்னுதான் சொல்றாங்க.தலைவலி  கூடவே இப்போ திருகுவலியும் சேர்ந்தில்ல குடையப் போகுது. இதோட நிக்கப்போறதில்லையாம்.  இன்னும் இருபது வழக்கு இப்படி போடப்போகிறாராம் சுவாமி.''என்று நிலவரத்தை  கலவரமாக்கினாரு &lt;span style="color: #009900;"&gt;சித்தன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"சரிப்பா... முதல்வர் டெல்லி போனாரே. அங்க என்னதான் நடந்ததாம்.  ஒரு தகவலும் முழுசா தெரியமாட்டேங்கிறதே..." அலுத்துகொண்டார் &lt;span style="color: #cc3333;"&gt;சுவருமுட்டி சுந்தரம்&lt;/span&gt;.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;''அதுக்கு முன்னாடி ஒரு சந்திப்பு நடந்தது. அதை கேட்டா மற்ற  விபரம் எல்லாம் தானாவே புரியும்.அவசரமா வரச்சொல்லி ரெண்டு பேரு டெல்லிக்கு போனாங்க.  தென்தமிழ் நாட்டில் பலமா இருக்கிற மாமனும், ஊடக பலத்தை கையில் வச்சிருக்கிற இளைய  மச்சானும்தானாம் அது. காங்கிரஸ் கட்சியோட மூத்த தலைவரு அகமது பட்டேல்தான் அங்க  சந்திச்சு பேசினாரு. நீதிபதி சிவராஜ் பட்டீல் கமிஷன் ரிப்போர்ட், ராசா நிறைய  முறைகேடு செய்திருக்கிறதா சொல்லுது. ஊழல் நடந்திருக்கிறது உண்மைதான்.நமக்கே தெரியாம  நிறைய விஷயம் நடந்திருக்கு. சோனியா மேடம் ரொம்ப கவலையா இருக்காங்க. 'அப்பா..  அப்பான்னு நம்பியிருந்தேன்.கடைசியில&lt;img align="left" border="0" height="230" hspace="5" src="http://www.kumudam.com/dotcom/muchandi/imagefolder/ahmed%20pstel.jpg" style="height: 198px; width: 174px;" vspace="5" width="200" /&gt; இப்படி செய்துட்டாரு'ன்னு ரொம்பவும் கவலைப்படுறாங்க மேடம்.  வேற வழியே இல்ல. ராசா கைது நடக்கும். தொடர்ந்து 'பலரையும்' வளைச்சு விசாரிக்க  வேண்டியிருக்கும். அப்படி செய்யுறப்போ முதல்வர், ராசாவை விட்டுகொடுக்க மாட்டார்.  மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கிட்டா என்ன செய்யறது? நீங்களே சொல்லுங்கன்னு  கேட்டிருக்காரு.அதுக்கு அந்த ரெண்டு பேரும் 'கவலையே வேண்டாம். இப்போ எங்க பக்கம்  எட்டு எம்பிக்கள் இருக்கிறார்கள். இன்னும் ரெண்டு பேரை இழுக்க முடியும். அதில்  ஒருத்தரு புதுசா மந்திரி பதவி எதிர்பார்க்கிறாரு. அப்படியே தேவகவுடாகிட்ட பேசி அந்த  கட்சி எம்.பி.ங்க ஆதரவையும் வாங்கிடலாம்.காங்கிரஸ் ஆட்சிக்கு ஒரு சிக்கலும்  வராதுன்னு உத்திரவாதம் கொடுத்திட்டு திரும்பியிருக்காங்க. அகமது பட்டேல் அந்த தகவலை  அப்படியே சோனியாகிட்ட சொல்லியிருக்காரு.'' என்று &lt;span style="color: #009900;"&gt;சித்தன்&lt;/span&gt; பேசிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட &lt;span style="color: #cc3333;"&gt;சுவருமுட்டி&lt;/span&gt;..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;''ஏலேய் சித்தா. ஞாபகம் இருக்கா. நம்ப அலப்பரை கூட்டத்திலேயே  திமுக உடையும். அந்த வேலைய காங்கிரஸ் கட்சியே செய்யும். திமுக-விலேயே சிலர் அதுக்கு  தயாரா இருக்காங்கன்னு பலமுறை பேசியிருக்கோம். நிலைமை எப்படி போகுது பார்த்தியா''  என்று கைகொட்டி சிரித்தார்..&lt;img align="right" border="0" hspace="5" src="http://www.kumudam.com/dotcom/muchandi/imagefolder/kalaingar.jpg" vspace="5" /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;''ரொம்பவும் சிரிக்காதேப்பா. 'அந்த சந்திப்பு' பற்றி நம்ப  முதல்வருக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சாம். அதானலதான் அவர் டெல்லிக்கு போனப்போ பொங்கி  எழாம அடக்கி வாசிச்சிருக்காரு. அது மட்டுமல்ல. எற்கனேவே அகமது பட்டேல் சொன்ன மாதிரி  கலைஞர் சோனியாவை சந்திக்க அவ்வளவு லேசில் ஒப்புக்கொள்ளவில்லையாம். விக்கிரமாதித்தன்  மாதிரி கலைஞர் விடாம முயற்சி எடுத்தார். பிறகுதான் ஒரு வழியா சம்மதம்  கிடைச்சிருக்கு.அந்த சந்திப்புக்கு போகும்போதே 'ராசா சி.பி.ஐ. கஸ்டடியில் வைத்து  ஒன்பது மணி நேரம் விசாரிக்கப்பட்டார்ங்கிற' செய்தி மீடியாவுல பரபரப்பானது. காலையில  இருந்து வெளிவராத அந்த செய்தி சோனியாவை சந்திக்க போகும் போது ஏன் மீடியா  வெளிப்படுத்தணும்னு ரொம்பவே அப்செட் ஆயிட்டாராம் முதல்வர். அந்த துயரத்தோடவே  சோனியாவின் பங்களாவுக்குள் நுழைந்தவருக்கு மற்றொரு அதிர்ச்சி. தமிழக அரசின்  செய்தித்துறை மீடியா, கலைஞர் டி.வின்னு எதற்கும் உள்ளே அனுமதி இல்லைன்னு  சொல்லிட்டாய்ங்க. சோனியாவை சந்திச்சு 'எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லேன்னு  படம் போட்டு காட்ட நினைச்சதும் நடக்கல. அப்படி ஒரு படம் வர்றதை சோனியா  விரும்பல.வர்ற பத்தாம் தேதி ஸ்பெக்ட்ரம் விவகாரம் சம்பந்தமா சி.பி.ஐ.நீதிமன்றத்துல  அறிக்கை கொடுக்க இருக்கிற நேரத்தில இப்படி ஒரு படம் தேவையில்லாத சிக்கலை  உருவாக்கும்னு சோனியா நினைச்சாங்களாம்.பிறவு நடந்த சந்திப்பும் சும்மா ஒரு மூன்று  நிமிடம்தானாம்.அந்த நேரத்தில் உடனிருந்த மகள் கனிமொழியையும்,தள்ளுவண்டியை  தள்ளிகிட்டு போன நபரையும் வெளியில போக சொல்லிட்டுதான் பேசியிருக்காங்க.''- &lt;span style="color: #009900;"&gt;சித்தன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"மகள் சோனியா அப்பா கலைஞருக்கு கொடுக்கும் மரியாதை  இவ்வளவுதானா.அடக்கடவுளே"- &lt;span style="color: #cc3333;"&gt;சுவருமுட்டி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;''என்ன செய்யிறது. நிலைமை அப்படியாகியிருக்கு. சோனியாவோட ரெண்டு  சகோதரிங்க இருக்கிறாங்க இல்லையா!&lt;img align="right" alt="" border="0" height="177" hspace="5" src="http://www.kumudam.com/dotcom/muchandi/imagefolder/soniag.jpg" vspace="5" width="132" /&gt; அந்த ரெண்டு பேரு பேர்லயும் தலா பதினெட்டு ஆயிரம் கோடிய  வெளிநாட்டில் உள்ள ஒரு வங்கியில போட்டிருக்காங்க.அந்த ரெண்டு பேரோட பத்து விரல்  ரேகையும் பதிஞ்சுதான் வங்கி கணக்கை தொடங்கியிருக்காங்க. அந்த சகோதரிங்க சோனியாகிட்ட  பேசறதுக்குகூட நேரம் கொடுக்காம அமெரிக்காவுல இருக்கிற ஒரு தீவுக்கு அழைச்சுட்டுப்  போய் வங்கிக் கணக்கை எல்லாம் தொடங்க பணத்தை போட்ட பிறகுதான் அக்கா சோனியாகிட்ட பேச  வாய்ப்பை ஏற்படுத்தியிருக்காங்க. அநத் அளவுக்கு ராசாவோட நெட்ஒர்க் வேலை  செய்திருக்கு. அதுவெல்லாம் கலைஞருக்கு தெரியாம நடந்திருக்காதுன்னு சோனியாவோட வேதனை.  அதனால்தான் சரியா முகம் கொடுத்து பேசலையாம்.அதன் பிறகு முதல்வர் வேற அறையில இருந்த  அகமது பட்டேல்,ராகுல்காந்தி ஆகியோர்கிட்ட கொஞ்ச நேரம் பேசிவிட்டு வெளியே வந்து 'ஏதோ  சோனியா அம்மையார்கிட்ட தான் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினதா' காட்டினாரு.  அப்படியும் எந்த முடிவும் உறுதியா எடுக்கல.பிப்ரவரி பத்தாம் தேதிக்குப் பிறகுதான்னு  சொன்னதோட ரெண்டு தரப்புலேயும் ஒரு கமிட்டி போட்டு பேசுவோம்னு சொல்லிட்டாங்க.  இதுக்கு முந்தின காலகட்டத்தில் இப்படி நடந்ததில்ல.''- &lt;span style="color: #009900;"&gt;சித்தன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"அதற்கு பிறகு ஆ.ராசா கைதானத வச்சு 'கலவரமான நிலவரத்தை' தலைவர்  புரிஞ்சுகிட்டிருப்பாரு.இப்ப ராசாவை எப்படி வெளியில எடுக்கணும்தான் ரொம்ப கவலையா  இருக்காராம் இல்ல" - கோபாலு&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;''பின்ன? ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடின்னா சும்மாவா!. ராசா  விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துகிட்டிருக்காருன்னு சி.பி.ஐ சொல்லுது. அதைவச்சு  பார்த்தா அவருக்கு பெயில் கிடைக்கிறதுல பெரிய சிக்கல் இருக்கலாம். அது மட்டுமல்ல.  ஒரு அறுபதாயிரம் கோடி வெளிநாட்டுல முடங்கியிருக்கு. பணமாகவும், தொழில்  நிறுவனமாகவும் இருக்கு. அதைப்பற்றி ராசா வாய் திறக்க மாட்டேங்கிறார். ஆனால் அவரோட  பினாமி சாதிக் பாட்சா, அண்ணன் கலியபெருமாள் மூலமா வேண்டிய தகவலை சி.பி.ஐ  வாங்கியிருக்கு. அதிகாரிங்களும் போட்டுக் கொடுத்திருக்காங்க. ஆனால் ராசா மட்டும்  பிடிகொடுக்காதது சி.பி.ஐ-க்கு ஒரு கௌரவ பிரச்சனையா இருக்காம்.அதனால தாளிக்காம  விடமாங்கன்னு டெல்லி வட்டாரம் சொல்லுது.'' என்ற &lt;span style="color: #009900;"&gt;சித்தன்&lt;/span&gt;, "சரிப்பா... நம்ப கட்சிங்களோட கூட்டணி நிலவரம்  எப்படியிருக்கு?" என்றார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;''அதையேன் கேட்குறே. குவாட்டர் அடிக்குற எனக்கே தலைசுத்தி  போகுது. என்ன நடக்குதுன்னே தெரியல. நம்ப விஜயகாந்த் அவரோட கேப்டன் டி.வியில போட்டு  தாக்குறத பார்த்தா திமுக கூட்டணிய கனவுல கூட நினைக்க மாட்டாருன்னு  தோணுது.அதுக்கேற்ற மாதிரி அம்மாவோட அதிமுக-வோட பேசி முடிச்சட்டாரு. தொகுதி பங்கீடு  பற்றி பேசுறதுக்காக இதோ இப்போ போறாரு.அப்போ போறாருன்னு நேரம் &lt;img align="left" alt="" border="0" height="159" hspace="5" src="http://www.kumudam.com/dotcom/muchandi/imagefolder/vkanth.jpg" style="height: 127px; width: 109px;" vspace="5" width="132" /&gt;குறிச்சுக்கிட்டேயிருக்காங்க.போயஸ் கார்டன் திறந்தபடியே இருக்கு.  கேப்டன் இன்னும் போன-பாடில்லை.என்ன சேதின்னு விசாரிச்சா டெல்லி காங்கிரஸ் தனியா  கொக்கி போடுதாம்.கொஞ்சம் பொறுங்க கேப்டன். திமுக-காங்கிரஸ் கூட்டணிங்கிறது இன்னும்  உறுதியா முடிவாகல. ஒரு வேளை கூட்டணி புட்டுகிட்டு போகவும் வாய்ப்பிருக்கு.  அப்படியானால் கேப்டனை கூட வச்சுகிட்டு தேர்தலை சந்திக்க வாய்ப்பா இருக்கும்னு  சொல்றாங்க.அது எந்த அளவுக்கு எடுபடும்னு தெரியல.குட்டை குழம்பிதான் இருக்கு.  தெளியறதுக்கு இன்னும் பத்து நாள் ஆகலாம்னு அரசியல் சோதிடம் சொல்லுது'' என்றார்  &lt;span style="color: #ff00cc;"&gt;கோபாலு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color: #cc3333;"&gt;சுவருமுட்டி சுந்தரத்தால்&lt;/span&gt; ரொம்ப  நேரம் அமைதியா இருக்க முடியல. ''ஏலேய் என்னலே சும்மா வழவழன்னு பேசிகிட்டு! ஏதாவது  ஒரு சேதிய பட்டுன்னு போட்டு உடைக்கிறீங்களா.நான் ஒரு தகவலை எப்படி உடைக்கிறேன்  பாரு. உளவுத் துறையில இருக்கிற அந்த முக்கியமான அதிகாரி கூடிய சீக்கிரம் பதவிய  ராஜினாமா செய்ய இருக்காரு. தளபதிக்கு முக்கியத் துணையா, நம்பிக்கையா யாரும்  இல்லையாம். உடன் பிறந்ததுங்களே 'திண்ணை எப்ப காலியாகும்னு' துடிக்குதுங்க. அதனால  பதவிய தூக்கி எறிஞ்சுட்டு தளபதிக்கு பக்கபலமா இருக்கச் சொல்லி 'பெரியவரு'  சொல்லிட்டாரு. பிறகு எப்படியாவது ஒரு ராஜ்யசபா பதவிய கொடுத்துட வேண்டியது.அவரோட  உளவு அனுபவத்தை கட்சிக்கும், தளபதிக்கும் பயன்படுத்துறதுதான் திட்டமாம். டெல்லி  அரசியலையும் தமிழ்நாட்டு அரசியலையும் பார்த்துகிறதுக்காகத்தான் உளவுப் பதவிய  ராஜினாமா செய்ய போகிறாராம். அப்புறம் இன்னொரு மேட்டர்.கைது சம்பவத்தால காலனி வீடு  ரொம்பவும் உடைந்து போயிருக்காம். போலீஸ் நம்ப வீட்டுக்கு எப்போ வரப் போகுதோங்கிற  கவலை ஆட்டிப் படைக்குதாம்.இதுக்கிடையில வெளிநாட்டு முதலீட்டையெல்லாம் ஏதோ ஒரு  குரூப் போய் விலாவாரியா விசாரிச்சுகிட்டு இருக்காம். அது 'சகோதரர்கள்' சம்பந்தமான  குரூப்பா இருக்குமோன்னு கலங்கிப் போய் இருக்காங்களாம்"என பகீர் தகவல்களை போட்டு  உடைத்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;"அது எப்படிப்பா. நோட்டீஸ் கொடுத்து விசாரிக்காம கொள்ளாம எப்படி  திடீர்னு வந்து வீட்டுக்கு முன்னாடி சி.பி.ஐ.நிப்பாங்க.இது என்ன 500 ரூபாய்  பிக்பாக்கெட் அடிச்ச விவகாரமா என்ன?1.76ஆயிரம் கோடியாச்சே" வெள்ளந்தியாக கேட்டார்  &lt;span style="color: #009900;"&gt;சித்தன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;''அந்த சம்பிரதாயம் எல்லாம் ரகசியமாகவே முடிஞ்சுடுச்சுப்பா.  நமக்குதான் தகவல் தெரியல. பத்தாம் தேதி சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு மொத்த விசாரணை  பற்றிய  &lt;img align="right" border="0" hspace="5" src="http://www.kumudam.com/dotcom/muchandi/imagefolder/pg21c.jpg" vspace="5" /&gt;அறிக்கைய  கொடுக்கணும். அந்த ரெண்டு பேர்கிட்ட மட்டும் விசாரிக்காம போனா அதுவே பெரிய  சிக்கலாயிடும். பிரதமரைதான் கேள்வி கேட்பாங்க.நம்ப சிங் என்ன அவ்வளவு  லேசுப்பட்டவரா!நமக்கெதுக்கு வம்புன்னு சி.பி.ஐ.யை பாயச் சொல்லிட்டாரு. அதன் பிறகு  டெல்லி அதிகாரிகிட்டயிருந்து உரியவருக்கு 'இப்படி ஒரு சிக்கல் வந்துடக்கூடாது.  விசாரிச்சே ஆகணும். ஒத்துழைப்பு வேண்டும். தகவல் பெரிய செய்தியாவதை நாங்களும்  விரும்பவில்லை' தான்னு சொல்லியிருக்காங்க.அதன் பிறகு ஒரு நாள் பெரியவர் தன்னோட  இருந்த படைகளை எல்லாம் வேறு வேலைகள் பக்கம் திசை திருப்பிவிட்டு காலனி வீட்டுக்கு  சென்றார்.சொன்னபடியே ஐந்து அதிகாரிகள் ஆடம்பரம் இல்லாமல் வந்திருந்தார்கள்.அனைவரும்  பெங்களூர் அதிகாரிகள். சாட்சி கையெழுத்து போட மட்டும் ஒரே ஒரு தமிழ் அதிகாரி.அவரும்  ரகசியமாகவே வரவழைக்கப்பட்டாராம்.மொத்தம் நூறு கேள்விகள் கேட்கப்பட்டதாம்.  அம்மாவிடம் இருந்து மூன்றுக்குதான் பதில். மகளிடம் இருந்து எழுபது கேள்விகளுக்கு  பதில்.விபரமா எழுதி சீல் போட்டு எடுத்துகிட்டு போய் ரொம்ப நாள் ஆச்சு.அடுத்தக்கட்ட  ஆக்ஷனுக்குதான் காத்துகிட்டு இருக்கு.ஒரு விஷயம் மட்டும் நல்லா கேட்டுக்கோங்க.  &lt;br /&gt;'போகுது... ஈழத் தமிழர்களின் உயிர் போகுது, காப்பாத்துங்கன்னு சனங்க கத்தினது  அப்போ பெரியவரு காதுல விழல.இப்போ அவர் கத்துறது டெல்லி காதுல விழல.டெல்லி அம்மா அழற  சத்தம் பி.ஜே.பி-கம்யூனிட்டுங்க காதுல விழமாட்டேங்கிறது.இதான் வரலாறு  திரும்புதுன்னு சொல்வாங்க போல'' என்று அர்த்த புஷ்டியோடு சிரித்தார் &lt;span style="color: #cc3333;"&gt;சுவருமுட்டி சுந்தரம்&lt;/span&gt;. சபை கலைந்தது.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4778918875738452370-6313875266014654063?l=raavanaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/6313875266014654063'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/6313875266014654063'/><link rel='alternate' type='text/html' href='http://raavanaa.blogspot.com/2011/06/blog-post_11.html' title='கூண்டுக்குள்ள  என்ன வச்சு கூவி நின்ன ஊரபத்தி ..........மாற்றான் தோட்டத்து'/><author><name>ராவணா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-guzhk-QqtXk/TfQ-vVx__lI/AAAAAAAAAC0/Q5IxX1jcyuE/s72-c/226428_103912599699406_100002419988780_34185_6768665_n.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4778918875738452370.post-1479058429893962100</id><published>2011-06-10T22:11:00.000-07:00</published><updated>2011-06-10T22:11:12.238-07:00</updated><title type='text'>மாற்றான் தோட்டத்து மலர்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-kV5U-vXNY-w/TfL44Jyg4TI/AAAAAAAAACw/IbCg3tYesHg/s1600/248316_108532619235947_100002376296324_85989_296823_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="221" src="http://2.bp.blogspot.com/-kV5U-vXNY-w/TfL44Jyg4TI/AAAAAAAAACw/IbCg3tYesHg/s320/248316_108532619235947_100002376296324_85989_296823_n.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: #333333;"&gt;புலிகள் மீது சேறும், இராஜீவ் காந்திக்கு சல்யூட்டும் அடிக்கும் சவுக்கு புத்தகம் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரிசி மூட்டையில் ஓரிரு கற்கள் கலந்திருந்தால் அதைப் பிரித்தெடுக்கலாம். ஆனால், ஒரு மூட்டை மணலில் கைப்பிடி அரிசியைப் பொறுக்குவது? ராஜீவ் சர்மா எழுதிய 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -‍ ராஜீவ் கொலைப் பின்னணி' நூலிலிருந்து நமக்கு சாதகமான செய்திகளைப் பெறுவதும் அப்படி அரிசி பொறுக்குகிற வேலைதான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகள், ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவித் தமிழர்கள் - இவை அனைத்திற்கும் எதிரான ஒரு புத்தகத்தை பொருட்படுத்தி விவாதிக்க வேண்டிய காரணம் அந்தப் புத்தகத்தை பதிப்பித்திருப்பது நமது தோழர் சவுக்கு என்பதால்தான். வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் நமது தோழர்கள் விடுதலை இராசேந்திரன், தியாகு, வழக்கறிஞர் புகழேந்தி, கஜேந்திரன். (புத்தகத்தின் பாதகத்தன்மை குறித்து விழா மேடையிலேயே விடுதலை இராசேந்திரன் பேசினார்.) ஈழப் பிரச்சினையில் ஒத்த உணர்வுள்ள தோழர்கள் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்கள் என்பதும், சவுக்கு வெளியீடு என்பதும், தவறான ஒரு புத்தகத்திற்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமாக ஆகிவிடக் கூடாது என்பதாலேயே இந்தப் புத்தகத்தை மறுக்க வேண்டியிருக்கிறது. 'இத்தனை நாள் நாங்க சொல்லிட்டிருந்தபோது நம்பலை.. இப்ப பாருங்க.. உங்க தோழர் சவுக்கு வெளியிட்ட புத்தகத்தில் இதெல்லாம் இருக்கு..' என்று ஈழத்திற்கு எதிரானவர்கள் பேசுவதற்கான அத்தனை வாய்ப்புகளையும் இந்தப் புத்தகம் தருகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முற்றிலும் நம்புவதற்குத் தகுதியற்ற சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவு, இந்திய உளவுத்துறை ஆகியவற்றின் குறிப்புகளின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நூலினை மறுப்பதாக இருந்தால் அதன் 90% பக்கங்களை நாம் மறுக்க வேண்டியிருக்க வேண்டும். ஆனால் இரண்டு குறிப்பிட்ட செய்திகளுக்காக இந்தப் புத்தகத்தை மறுக்க விரும்புகிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1. புலிகள் பயங்கரவாதிகள்; காசுக்காக கொலை செய்யும் கூலிக்கூட்டம்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2. சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவின் நேர்மையான விசாரணை; இராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சமூக அல்லது அரசியல் விடுதலைக்காக போராடும் குழுக்களை பயங்கரவாதக் குழுக்கள் என்று முதலாளித்துவ ஜனநாயகம் பேணும் நாடுகள் முத்திரை குத்துவதை வரலாற்று நெடுகிலும் காண முடியும். பகத்சிங், சே குவேரா தொடங்கி பாலஸ்தீன விடுதலை இயக்கம், காலிஸ்தான் போராட்ட குழுக்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், காஷ்மீர் விடுதலை போராட்டக் குழுக்கள் எவையும் இந்த முதலாளித்துவ மதிப்பீட்டிலிருந்து தப்பியதில்லை. ஆயுத விற்பனைக்காக மூன்றாம் உலக நாடுகளில் போராட்டங்களைத் தூண்டிவிட்ட ஏகாதிபத்திய நாடுகள், பின்னர் உலகமயச் சூழலில் 'ஒரே சந்தை' எனும் நோக்கில் 'தேச ஒற்றுமை'யை டன்டன்னாக இறக்குமதி செய்தன. ஏகாதிபத்திய நாடுகளின் கைக்கூலிகளாக செயல்படும் ஊடகங்களுக்கும், அதன் செய்தியாளர்களுக்கும் அரச பயங்கரவாதம் தொடர்பான நிறக்குருடு நோய் இருப்பதும், போராளிக்குழுக்களின் மீது தீராத காய்ச்சல் இருப்பதும் உன்னிப்பாக கவனிப்பவர்களுக்குத் தெரியும். மாவோயிஸ்ட்களின் எதிர்த்தாக்குதல் குறித்து மணிக்கணக்கில் விவாதிக்கும் இவர்கள், மத்திய இந்தியாவிலும், வட கிழக்கிலும் இந்திய ராணுவம் நடத்தும் அரச பயங்கரவாதம் குறித்து ஒரு நிமிடம் கூட பேசமாட்டார்கள். காட்சி ஊடகங்களின் 'ஊடகப் பயங்கரவாதம்' குறித்துதான் நம்மில் பலர் அறிந்திருக்கிறோம். அதற்கு சற்றும் குறையாததுதான் எழுத்து ஊடகங்களும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;img alt="rajiv_sharma_300" height="301" src="http://www.keetru.com/images/stories/people/rajiv_sharma_300.jpg" style="float: left;" width="273" /&gt;பெரும்பாலான ஊடகங்கள், காவல்துறை/ராணுவம் தரும் செய்திகளை எந்த விசாரணையுமின்றி ஏற்றுக் கொண்டு வெளியிடுகின்றன. காவல்துறை அல்லது சிபிஐ‍-ஆல் கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் இந்தப் பத்திரிக்கையாளர்களைப் பொருத்தவரை குற்றவாளிகளே! குற்றத்திற்கான நோக்கம், குற்றம் நடந்த சூழல், விசாரணையில் கடைபிடிக்கப்படும் பாரபட்சம் இவை எதுவும் இவர்களுக்கு முக்கியமல்ல. பல பத்திரிக்கையாளர்கள் சம்பவ இடத்திற்கே போகாமல், காவல் நிலையத்தில் போட்டோவும் செய்தியும் வாங்கிக் கொண்டு காவல்துறை சொல்ல விரும்பும் கட்டுக்கதைகளை செய்திகளாக வெளியிடுகிறார்கள். ஊடக தர்மம் குறித்து கவலைப்படாதவர்கள் இந்தியாவின் பெரும்பாலான பத்திரிக்கைகளும், அதில் பணியாற்றுபவர்களும். அத்தகைய 'நேர்மையான' ஒரு பத்திரிக்கையாளர்தான் இந்தப் புத்தகத்தை எழுதிய 'ராஜீவ் சர்மா'. ராஜீவ் கொலை சம்பவம் நடந்த சிறிபெரும்புதூருக்கோ, கொலை விசாரணை நடந்த சென்னைக்கோ வராமலேயே அதுகுறித்து ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் இவரது லட்சணத்தை... பின் எதை ஆராய்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்றால், சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவு, இந்திய உளவுத்துறையின் குறிப்புகளின் பின்னணியில்… இவை இரண்டும் இந்தியப் பத்திரிக்கைகளில் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதைகளை வெட்டி ஒட்டி சுவாரஸ்யமான ஒரு புத்தகத்தை தயாரித்திருக்கிறார். விடுதலைப் புலிகளைப் பற்றி சிபிஐயும், இந்திய உளவுத்துறையும் காலம் காலமாக கூறிவந்த கதைகளுக்கும், இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவற்றிற்கும் மயிரளவு வித்தியாசம் கூட இல்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொய் வழக்குகளில் ஓர் அப்பாவியை குற்றவாளியாக்க காவல்துறை, அவரின் பின்புலத்தைப் பற்றி பல கதைகளை ஜோடிக்கும். 'ஆறாம் வகுப்பில் பென்சில் சீவும் பிளேடால் சக மாணவரைக் கீறி விட்டார்; கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் கலாட்டா செய்திருக்கிறார்; பக்கத்து வீட்டுக்காரருடன் சாக்கடைத் தகராறு செய்திருக்கிறார்' என்று ஏகத்துக்கும் ஜோடிப்பார்கள். ஏனென்றால், 'இப்பேர்ப்பட்ட வன்முறையாளர், இந்தக் கொலையைச் செய்தார் என்பதில் எந்த ஆச்சரியமுமில்லை' என்று நீதிபதி அய்யா ஒரு முடிவுக்கு வருவதற்காக... அப்படிப்பட்ட பல ஜோடிப்புகளை ராஜீவ் சர்மா துளியும் நேர்மையின்றி இந்தப் புத்தகத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புலிகள் பயங்கரவாதிகள், ஈவிரக்கமற்றவர்கள், எப்போதும் கொலைவெறியுடன் இருப்பவர்கள், அப்பாவி மக்களை கொல்லத் தயங்காதவர்கள் என்று சரமாரியான குற்றச்சாட்டுகளோடு போதை மருந்து கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டையும் இந்தப் புத்தகம் வைக்கிறது. புகைபிடித்தல், மது அருந்துதலைத் தடை செய்த - ‘கட்டுக்கோப்பானதோர் இயக்கம்’ என்று புலிகள் இயக்கம் பற்றி நாம் அறிந்திருந்ததுதான் தவறா? அதுமட்டுமா, மதிவதினியை பிரபாகரன் காதலித்து திருமணம் செய்தார் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்க, அவரை பிரபாகரன் கடத்திக் கொண்டுபோய் வலுக்கட்டாயமாக திருமணம் செய்தார் என்றும் கூறுகிறார் ராஜீவ் சர்மா. 'சுயநலவாதி, இரக்கமற்றவர், யார் சொல்வதையும் கேட்காதவர்' என்று பிரபாகரன் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சவுக்கு நூல் வெளியீட்டு விழாவிற்காகத்தான் முதன்முறையாக சென்னைக்கே வருகிறேன் என்று கூறும் ராஜீவ் சர்மா எந்த ஆய்வின் பின்னணியில் இந்தக் குற்றச்சாட்டுக்களைக் கூறுகிறார்? அத்தனையும் சிபிஐயும் உளவுத்துறையும் புனைந்த கதைகளின் அடிப்படையில்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடுபவர்களை ஒடுக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் முதல் நடவடிக்கை, போராளிகளை பயங்கரவாதிகள் என்று அறிவிப்பதுதான். காஷ்மீர் போராளிகள், மாவோயிஸ்ட்கள், விடுதலைப் புலிகள் என அனைவர் மீதும் ஒடுக்குதலை மேற்கொள்ளும் அரசு இதைச் செய்திருக்கின்றது. அரசுகளின் இந்த மோசடித்தனத்தை பத்திரிக்கையாளர்களும், எழுத்தாளர்களும் உணர வேண்டியது மிகமிக அவசியம். அப்படி உணர்ந்ததாலேதான் அருந்ததி ராய் அவர்களால், மாவோயிஸ்ட்களை தோழர்கள் என்று அழைக்க முடிகிறது. ஆனால், தனது புத்தகத்திற்கு சிபிஐயின் முன்னாள் இயக்குனரிடம் சர்டிபிகேட் வாங்கியிருக்கும் ராஜீவ் சர்மாவிடம் அந்த நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;img alt="prabhakaran_407" height="450" src="http://www.keetru.com/images/stories/eelam/prabhakaran_407.jpg" style="float: right;" width="407" /&gt;இன்னொரு எரிச்சலூட்டும் செய்தியும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. உயரம் குறைவானவர் என்பதை மறைப்பதில் பிரபாகரன் எப்போதும் கவனமுடன் இருப்பாராம். அதை மறைக்கும்விதமாகவே புகைப்படம் எடுக்கச் சொல்வாராம். என்ன கொடுமை இது? எத்தனை புகைப்படங்களில் பிரபாகரன் தன்னை விட உயரமான போராளிகளுடன் உற்சாகமாக நிற்கும் காட்சியை நாம் கண்டிருக்கிறோம். அருகிலிருக்கும் ஒரு புகைப்படத்தைப் பாருங்கள்... ஒரு போராளியை இப்படி எல்லாமுமா கொச்சைப்படுத்துவது?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கிட்டு, பொட்டு அம்மான், காசி ஆனந்தன், குமரன் பத்மநாபா (இன்றைய கே.பி. மீது நமக்கு ஆயிரம் விமர்சனம் இருந்தாலும்), கரும்புலிகள் மீது கூறப்பட்டுள்ள அவதூறைகளையும் பட்டியலிட்டால் இந்தக் கட்டுரை மிக நீண்டதாகவிடும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு இடத்தில் கூட சிறப்பு புலனாய்வுப் பிரிவின் திறமையின்மை, விசாரணை என்ற பெயரில் அது நடத்திய மனித உரிமை மீறல்கள் மீது விமர்சனமே இல்லை. ‘அவர்கள் திறமைசாலிகள், அவர்களின் கைகளை மேலிடம் கட்டிவிட்டது’ என்ற தொனியிலான ஜால்ராவைத்தான் ராஜீவ் சர்மா புத்தகம் முழுவதும் இழையோட விட்டிருக்கிறார். காவல்துறைக்கு இப்படி ‘சிங்குச்சான்’ அடிக்கும் பத்திரிக்கையாளர்களை அம்பலப்படுத்தி பல கட்டுரைகள் எழுதிய சவுக்கு, ராஜீவ் சர்மாவுக்கு மட்டும் எப்படி விதிவிலக்கு அளித்தார் எனப் புரியவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புலிகள் மீது இந்தப் புத்தகத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளிலேயே மிக மோசமானது அவர்கள் கூலிக்காக இராஜீவ் காந்தியைக் கொலை செய்தார்கள் என்பது. மனசாட்சியுள்ள ஒரு இந்தியன், இராஜீவ் காந்தி என்ற கொடுங்கோலனைக் கொல்வதற்கு டெல்லி சீக்கியர்கள் படுகொலை, போபர்ஸ் ஊழல், இடஒதுக்கீடு எதிர்ப்பு என்று ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஈழத் தமிழனுக்கு இரண்டாயிரம் காரணங்கள் இருக்கின்றன. அமைதிப் படை என்ற பெயரில் சாத்தானின் படைகளை அனுப்பி இராஜீவ் காந்தி ஈழத்தில் புரிந்த அட்டூழியங்களை எந்த ஈழத் தமிழனும் மன்னிக்க மாட்டான். இராஜீவ் காந்தி ஒரு ஈழத் தமிழனால் கொல்லப்படாமல் போயிருந்தால்தான் அது ஆச்சரியம். தோழர் கொளத்தூர் மணியின் வார்த்தைகளைத்தான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். "ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் நியாயம், விடுதலைப் புலிகள் செய்யாமல் இருந்தால் குற்றம். செய்திருந்தால் பாராட்டுகிறோம், செய்யாமலிருந்திருந்தால் கண்டிக்கிறோம்".&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆறாயிரம் ஈழத் தமிழர்களைக் கொன்றவன் இராஜீவ் காந்தி. அதுகுறித்து இந்தப் புத்தகம் ஏதாவது பேசுகிறதா? இராஜீவ் கொலை தொடர்பான 20,000 செய்திக்குறிப்புகளை படித்ததாக தம்பட்டம் அடிக்கும் ராஜீவ் சர்மா, 'சாத்தானின் படைகள்' என்ற புத்தகத்தையும் படித்திருக்க வேண்டும். படித்திருந்தால் யார் பயங்கரவாதிகள் என்பது புரிந்திருக்கும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இராஜீவ் காந்தி என்ற கொலைகாரன் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதால், ஈழ ஆதரவாளர்களும், தமிழ்த் தேசியவாதிகளும் அனுபவித்த அடக்குமுறைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஈழத்திற்கு ஆதரவாகப் பேசுவதே பயங்கரவாதத்தை ஆதரிக்கும் செயல் என்றளவில் காங்கிரஸ், ஜெயலலிதாவின் அடக்குமுறை இருந்தது. ஈழப் போராளிகள் மீது மாறாத அன்புடைய தமிழக மக்கள் பொதுவெளியில் அவர்கள் குறித்து பேசுவதற்கே அஞ்சினார்கள். புலிகளை ஆதரித்துப் பேசியவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் பாய்ச்சப்பட்டன. பழ.நெடுமாறன், வைகோ, சுப.வீரபாண்டியன் உள்ளிட்டவர்கள் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார்கள். இன்று தமிழ்நாட்டில் புலிக்கொடி ஏந்தியும் ஈழப்போராட்டத்தை ஆதரித்தும் பொதுமக்கள் பேசுகிறார்கள் என்றால் அந்தச் சுதந்திரம் ஈழ ஆதரவாளர்களின் தொடர்ச்சியான போராட்டங்களாலும், பரப்புரைகளாலும், முத்துக்குமாரின் உயிர்க்கொடையாலும் கிடைத்ததாகும். புலிகளை பயங்கரவாதிகள் என்பதன் மூலம் அந்தச் சுதந்திரத்தின் மீது கொஞ்சம் மண்ணள்ளிப் போடும் வேலையை இந்தப் புத்தகம் செய்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு சாதாரண பெட்டி கேஸில் கூட ஒழுங்காக விசாரணை நடத்த துப்பில்லாமல் அப்பாவிகளைப் பிடித்து, அடித்து துன்புறுத்தி குற்றவாளியாக்கும் மாண்பு மிக்கதுதான் இந்தியாவில் இருக்கும் அனைத்து மத்திய, மாநில புலனாய்வுப் பிரிவுகளும். பெட்டி கேசுக்கே அந்த நிலை என்றால், நாட்டின் மிக முக்கியமான அரசக்(அடத் தூ!) குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு என்னென்ன கூத்து நடத்தியிருக்கும்? அத்தனை கூத்துக்களையும் ஒரு கேள்வியுமின்றி ஏற்றுக்கொண்டு, கைது செய்யப்பட்ட அத்தனை பேரையும் அக்மார்க் குற்றவாளிகள் என்கிறார் இந்த ராஜீவ் சர்மா. ராஜீவ் சர்மாவிற்கு வேண்டுமானால், உளவுத்துறை, காவல்துறையினரின் யோக்கியதை தெரியாமலிருந்திருக்கலாம். சவுக்கு சங்கருக்கு…?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 20 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் 7 பேருக்கு எதிராக மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தால் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டவர்களுக்கும் எதிராகத்தான் இந்தப் புத்தகம் பேசுகிறது. 'இராஜீவ் கொலையில் தண்டிக்கப்பட்டு இருக்கும் ஏழு தமிழர்களோடு கடந்த பத்து ஆண்டுகளாக பழகி வருவதாகவும், அவர்களுக்கு இந்தப் படுகொலையைப் பற்றி எந்த விபரமும் தெரியவில்லை என்பதை தன்னால் உணர முடிந்தது' என்றும் வழக்கறிஞர் புகழேந்தி கூறுவதற்கு மாறாக, அனைவரையும் குற்றச்சதியில் பங்கேற்றவர்களாகவும், குற்றம் புரிந்தவர்களாகவும் இந்தப் புத்தகம் கூறுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட விசாரணைகளில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் யாரையெல்லாம் குற்றவாளிகள் என்று அறிவித்தார்களோ, என்னென்ன குற்றச்சாட்டுக்களை கூறினார்களோ அவையெல்லாவற்றையும் எந்தவொரு கேள்வியுமின்றி இந்தப் புத்தகம் ஏற்றுக் கொள்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சாம்பிளுக்கு சில:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;“…சிவராசன் தணுவிற்கு தாராளமாக செலவு செய்ய முடிவு செய்தார். மேலும் நளினி மற்றும் சுபாவிடம், தணுவின் விருப்பத்திற்கு ஏற்ப உணவு, உடை, பொழுதுபோக்கு மற்றும் அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்படியும், பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் செலவு செய்யுமாறும் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார். தணுவின் கடைசி 20 நாட்களில், நளினி மற்றும் சுபா சுமார் ரூ.10,000 அளவிற்கு செலவு செய்து இருந்தனர்..”&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;“..தணு சென்னைக்கு வந்த நாள் முதல் நளினி அவருக்கு மிகவும் நெருங்கிய தோழியாக மாறினார். நளினி கரும்புலிகளை சென்னையிலுள்ள சுற்றுலா தளங்களுக்கும் மார்க்கெட், கடற்கரை மற்றும் ஓட்டல்களுக்கு தினந்தோறும் கூட்டிச் செல்வது வழக்கம்..”&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;“…நளினி மற்றும் பாக்கியநாதனின் தாயான பத்மாவின் இல்லத்தில் இறுதிகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடைபெற்றது. தனு, சிவராசன், சுபா தவிர பாக்கியநாதன், நளினி, ஹரிபாபு, ஸ்ரீகரன் மற்றும் அறிவு ஆகியோர் அக்கூட்டத்தில் பங்கு கொண்டனர். சிவராசன் அடுத்தநாள் ஒவ்வொருவருக்கும் செய்ய வேண்டிய குறிப்பிட்ட வேலையை அவரவர்க்குப் பிரித்துக் கொடுத்தார்..”&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;“…கொலைச்சதியில் ஈடுபட்ட 4 நபர்கள் தணு, சிவராசன், நளினி மற்றும் சுபா ஆகியோர் கோவிலுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்..”&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;“…நளினி தடைகளைத் தாண்டி கொலைக்குழு கூட்டத்தினுள் செல்ல உதவி செய்தார்..”&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;“…ராஜீவ் அரசியல் கொலையிலும், பத்மனாபாவின் கொலையிலும் சிவராசனுக்கு உதவி செய்த சாந்தன் எஸ்.ஐ.டியிடம் 1991 ஏப்ரல் மாதம் தான், சிவராசன், சுபா, தனு ஆகியோருடன் செல்ல வேண்டுமென பொட்டு அம்மானால் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்..”&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;“…எல்டிடிஈ போராளி முத்துராஜாவின் உத்தரவுப்படி, பத்மா, பாக்யநாதன் மற்றும் நளினி ஆகியோர் சிவராசன், சுபா, தாஸ் என்கிற முருகன் ஆகியோரை வில்லிவாக்கத்தில் ஓரிடத்திலும் மற்றும் ராயப்பேட்டையில் உள்ள அவர்கள் இல்லத்திலும் தங்க வைத்துள்ளனர்…”&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;“…முருகன், பின்னாளில், எல்டிடிஈ-ன் உளவு பார்ப்பவராக மாறினார். சிவராசன் உட்பட கொலைக்குழுவின் அனைத்து நபர்களையும் கண்காணிப்பது அவரின் வேலை…”&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;“..தென்சென்னை நந்தனத்தில் மே 7 அன்று நடந்த வி.பி.சிங்-இன் கூட்டத்திலும், ஏப்ரல் 18 அன்று மெரினா கடற்கரையில் ஜெயலலிதா, ராஜீவ் காந்தி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்திலும் எல்டிடிஈ மேற்கொண்ட இரண்டு வெள்ளோட்டத்தில் முருகன் கலந்து கொண்டார்…”&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;“…நளினி மற்றும் முருகன் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மேலும் இரு முக்கியமான எல்டிடிஈ போராளிகள் எஸ்.ஐ.டி.யின் தேடுதல் வலையில் வீழ்ந்தனர். அந்த இருவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 25 வயதுடைய ராபர்ட் பயாஸ் மற்றும் தமிழ்நாட்டில் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த ஜி.பேரறிவாளன் என்ற அறிவு. இலங்கைத் தமிழரான பயாஸ் சிவராசன், தனு மற்றும் சுபாவிற்கு தங்குவதற்கான இருப்பிடத்தை தயார் செய்தார். அறிவு, பாக்கியநாதன் மற்றும் பத்மாவுடன் தங்கியிருந்தார்..”&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;“…அந்தக் கொலைக் குழுவிலிருந்த மற்றொரு நபரான ஜெயக்குமார் ஜூன் 26 அன்று கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணத் தமிழரான ஜெயக்குமார் சென்னையில் சிவராசன் மற்றும் சுபா தங்குவதற்கு வசதி செய்து தந்தார்..”&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;“…கொலை நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு மட்டுமே வாங்கப்பட்ட பாக்கியநாதனின் அச்சகம் இந்தக் கொலைக் குழுவினர் கூடிப் பேசும் மற்றொரு இடமாகும். பாக்கியநாதன் தன்னுடைய போலியான அச்சகத்தைப் பற்றி வெளியே சொல்லிக் கொள்ளாமல் மிக ரகசியமாகவே இருந்தார். அந்த அச்சகத்திற்கு அருகில் அவர் யாரையும் வர அனுமதித்தில்லை..”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படி கைதானவர்களுக்கு எதிரான செய்திகள் இந்தப் புத்தகம் எங்கும் விரவிக் கிடக்கின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சரி, உண்மை என்ன?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறையிடம் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலமே போதுமானது என்று அச்சட்டம் கூறுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், கொலைவழக்கை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு புலனாய்வுப் பிரிவு கீழ்த்தரமான நடவடிக்கைகளால் அப்பாவிகளை சித்திரவதைக்குள்ளாக்கி வாக்குமூலம் பெற்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தான் எப்படி குற்றவாளியாக்கப்பட்டேன், என்னவிதமாக சித்திரவதை செய்யப்பட்டேன் என்பது குறித்து சிறையிலிருக்கும் பேரறிவாளன் ‘தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்’ நூலில் விவரித்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தோழர் பூங்குழலி தனது ‘தொடரும் தவிப்பு’ நூலில் இதுகுறித்து எழுதியிருக்கிறார்:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;"..எத்தனையோ நாட்கள் மதியம் 2 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டுச் சாந்தி மறுநாள் அதிகாலை 3 மணி வரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்பட்டுச் சக்கையாய் வெளிவரும் நிலை. முகாமிற்குள்ளேயே இருந்த ஒரு அறைதான் விசாரணை அறையாய்ப் பயன்படுத்தப்பட்டது. அந்த அறையிலிருந்து சாந்தியின் அலறல் வெளிப்படும் ஒவ்வொரு முறையும் அதன் எதிரொலியாய்ப் பயந்து அலறும் அவரது மகனின் குரல் அறைக்கு வெளியே.."&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;"நாங்கள் கேட்பதை எழுதிக்கொடு உன்னை விட்டுவிடுகிறோம் என ஆசை வார்த்தைகள். செல்வி மிகுந்த தைரியத்துடன் மறுத்துவிட்டார். 'சுபாவும் தணுவும் என் வீட்டில்தான் தங்கியிருந்தனர். தணுவுக்குக் குண்டை நான்தான் கட்டிவிட்டேன். இதை மட்டும் ஒத்துக்கொள் உனக்கு அதிகம் சிக்கல் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்' என்றார் விசாரணை அதிகாரி.&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;'நீங்கள் கூறுபவர்களை எனக்குத் தெரியாது. நடக்காத ஒன்றை என்னால் எழுதித்தரமுடியாது' என செல்விப் பிடிவாதமாக மறுக்க.&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;'சரி! அப்படியானால் உன் கணவரையாவது நாங்கள் சொல்லும்படி நடக்கச்சொல். உன்னை விட்டுவிடுகிறோம். உன் குழந்தைக்கு வசதி வாய்ப்புகள் செய்து தருகிறோம்" – மீண்டும் ஆசைவார்த்தைகள்."&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;"'உன் பிள்ளைகளைக் கொன்றுவிடுவோம்' – என மிரட்டியே பத்மாவிடம் கையெழுத்து வாங்கிவிட்டனர்.&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;பாக்கியநாதனிடம் வாங்கிய முறை மிகக் கேவலமானது. அடிக்கும் உதைக்கும் அஞ்சாது, எந்தவித மிரட்டலுக்கும் மசியாது இருந்த அவரின் மன உறுதியையே பொடிப்பொடியாக்கும் வகையில் ஒரு மிரட்டலை அவர் முன் வைத்தனர். ஆம்! பெற்ற தாயையும் உடன் பிறந்த சகோதரிகளையும் கண் முன் நிர்வாணம் ஆக்குவதாகக் கூறினால் எந்த ஆணுக்குத்தான் மனம் பதைக்காது?"&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;"கைது செய்யப்பட்டபோது நளினி இரண்டு மாத கர்ப்பிணி. கைதான நொடி முதலே கொடுமைகள் துவங்கிவிட்டன. கைதான இடத்திலிருந்து மல்லிகைக்குக் கொண்டுவரும் வழியெங்கும், கணவனின் கண் முன்பே, கூட வந்த அதிகாரி நளினியிடம் தவறாக நடந்துகொள்ள முயல, பெரும் மன அதிர்ச்சிக்கு ஆளானார். மல்லிகையில் நடந்த கொடுமைகள் ஒவ்வொன்றும் வெளியே சொல்வதற்கே நாக் கூசும் அளவில் இருந்தன. கர்ப்பவதி என்றும் பாராமல் அவரை அடித்துத் துன்புறுத்தினர் பாவிகள். கணவன் கண் முன் மனைவியை நிர்வாணமாக்கி அடிப்பதும் மனைவி கண் முன் கணவனை நிர்வாணமாக்கி அடிப்பதும். இது போல எத்தனையோ ... ஒரு பெண்ணாக மற்றொரு பெண்ணிடம், ஏன் பெற்ற தாயிடம், கூட அதைச் சொல்வதற்குக் கூசினார் நளினி. அதையும் மீறிச் சொன்னவை போக, இன்னும் அவர் மனத்திற்குள் புதைந்து கிடப்பது எத்தனையோ?" (&lt;a class="contentpagetitle" href="http://www.keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=5036:2010-03-31-10-42-43&amp;amp;catid=901:2009-08-16-09-44-24&amp;amp;Itemid=139"&gt;&lt;span style="color: blue;"&gt;இராஜீவ் கொலைவழக்கு -‍ சித்திரவதைகளில் புதைந்த நீதி&lt;/span&gt;&lt;/a&gt; - பூங்குழலி)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தக் கொலை வழக்கில் கைதாகி பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ரங்கநாத் சோனியாவுடனான தனது சந்திப்பு குறித்து கூறுகையில்,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;"... இரண்டாவதாக, “உங்கள் வீட்டில் சிவராசன், சுபா உள்ளிட்ட குற்றவாளிகள் தங்கியிருந்தபோது, படுகொலை செய்வதற்கான காரணம் பற்றி ஏதாவது பேசினார்களா?” எனக் கேட்க, நானும், “அவர்கள் என்னிடம் பேசியவரை ஐ.பி.கே.எஃப். (அமைதிப்படை) இலங்கையில் செய்த அட்டூழியங்களைப் பற்றிப் பேசினார்கள். அதன் எதிரொலியாகத்தான் சம்பவம் நடந்திருக்கிறது என்றனர். சந்திராசாமிக்கும் இதில் தொடர்பிருக்கிறது என அவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து தெரிந்து கொண்டேன்' என்றேன்.&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;மூன்றாவதாக, “இதைப் பற்றி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சொன்னீர்களா?” என்றார். “அவர்களிடம் இந்த உண்மைகளை விரிவாக எடுத்துரைத்தேன். அதற்காக அடிதான் விழுந்தது. இயக்குனர் கார்த்திகேயன் எனது பல்லை உடைத்தார். சுட்டுக் கொல்வதாகவும் மிரட்டினார்” என்றேன்..." (&lt;a href="http://www.keetru.com/literature/essays/ranganath.php"&gt;&lt;span style="color: blue;"&gt;http://www.keetru.com/literature/essays/ranganath.php&lt;/span&gt;&lt;/a&gt;)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;img alt="savukku_book_450" height="450" src="http://www.keetru.com/images/stories/books/savukku_book_450.jpg" style="float: left;" width="310" /&gt;இத்தனை அயோக்கியத்தனங்களையும், மனித உரிமை மீறல்களையும் செய்துதான் சிறப்பு புலனாய்வுப் பிரிவு 26 பேரையும் குற்றவாளிகள் என்றது. இவையெதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், கண்ணை மூடிக் கொண்டு சிறப்பு புலனாய்வுப் பிரிவு சொன்னதைக் கொண்டு, 26 பேரையும் குற்றவாளிக் கூண்டுக்குள் ஏற்றுகிறது இந்தப் புத்தகம். ராஜீவ் சர்மாவிற்கு அதிகாரம் இருந்தால் 26 பேரையும் தூக்கிலேற்றியிருப்பார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இவர் அப்படியே நம்பும் 'அம்மாம்பெரிய' சிபிஐயின் யோக்கியதை என்ன என்பதையும் கொஞ்சம் பார்ப்போமா? அண்மையில் தேடப்படும் 50 தீவிரவாதிகள் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுத்த சிபிஐ, அவர்கள் பாகிஸ்தானுக்குள் இருப்பதாகவும் கூறியது. பட்டியல் வெளியிடப்பட்ட இரண்டு, மூன்று தினங்களில் பட்டியலில் இருக்கும் வாஜுல் கமர்கான் என்பவர் மும்பை நகரத்தின் அருகே உள்ள தானேவில் பல ஆண்டுகளாக தங்கி வருவதாக அவருடைய குடும்பத்தினர் ஊடகங்களில் தெரியப்படுத்தியவுடன் சிபிஐ சூடு தாங்காமல் கையை உதறிக் கொண்டது; 'சாரி' சொன்னது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தச் சமாளிப்பு முடிவதற்குள்ளாக பட்டியலில் இருக்கும் பெரோஸ் அப்துல் ரஷீத் கான் என்பவரும் இந்தியாவில் இருக்கும் தகவல் வெளியாகி அனைவரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது. ஏற்கெனவே கைதாகி மும்பை சிறையில் இருக்கும் நபரைத்தான் பாகிஸ்தானில் ஒளிந்து கொண்டிருப்பதாக கூறி பட்டியலை தந்துள்ளது இந்தியா. அது மட்டுமில்லாது ஆட்டுக் குட்டியை தோளில் போட்டுக் கொண்டு ஊரெல்லாம் தேடிய கதையாக சிறையில் இருக்கும் பெரோஸ்கான் மீது சர்வதேச போலீஸ் மூலமாக பிடிவாரண்ட் வாங்கி சிபிஐ உலகம் பூராவும் தேடித் திரிந்த தகவல் வெளியாகி சிரிப்பாய் சிரிக்கிறது. (நன்றி: மக்கள் ரிப்போர்ட்)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1995ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்திலுள்ள ஜோவ்பூர் ஜால்ரா பகுதியில் பறந்த மர்ம விமானம் ஆயுதக் குவியலை வீசியது. அந்த விமானத்தை வழியில் மடக்கிய சிபிஐ அதிகாரிகள் ஆயுத வியாபாரி பீட்டர் பீளீஸையும், நீல்ஸ் கிரிஸ்டியன் நீல்ஸன் என்கிற கிம்டேவியையும் கைது செய்தனர். சிபிஐ விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போதே கிம் டேவி மர்மமான முறையில் தப்பியோடி விட்டான். தங்கள் பிடியிலிருந்து தப்பி தலைமறைவாக இருக்கும் கிம்டேவியை தேடிப் பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக சீன்காட்ட ஆரம்பித்தனர். சிபிஐயின் அறிக்கைகளை கேள்விப்பட்ட கிம்டேவி, தான் மறைந்து வாழவில்லை என்றும், பல ஆண்டுகளாக கோபன் ஹேகனில் வெளிப்படையாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தான். மேலும் தான் தப்பிக்கவில்லை என்றும், தன்னை பாதுகாப்பாக நேபாள எல்லைக்கு அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்ததே சிபிஐதான் என்றும் பேட்டி கொடுத்து சிபிஐ மானத்தை கப்பலேற்றி விட்டான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்னும் ஒருபடி மேலேபோய், தான் கோபன் ஹேகனில் தங்கி இருப்பது சிபிஐக்கு தெரியும் என்றும், சிபிஐ அதிகாரிகள் தன்னைத் தேடுவதாக கூறி இத்தனை ஆண்டுகள் உலகச் சுற்றுலா போய்க் கொண்டிருக்கிறார்கள் என்கிற குண்டைத் தூக்கிப் போட்டு சிபிஐயின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றி விட்டான். (நன்றி: மக்கள் ரிப்போர்ட்)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த சூரப்புலிகள் இராஜீவ் கொலை விசாரணையின்போது பத்திரிக்கைகளில்  வெளியிட்ட புரூடா கதைகளைத் தொகுத்துத்தான், 'அசல் நெய்யில்' செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் ராஜீவ் சர்மா இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதற்கு முன்னுரை முன்னாள் சிபிஐ இயக்குனர். நல்லா இருக்குப்பா உங்க காம்பினேஷனும் கொலாப்ரேஷனும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இத்தனை அனர்த்தங்களுக்கும் மேலாக இந்தப் புத்தகம் என்ன சொல்கிறது? இராஜீவ் கொலையில் புலிகளுக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் தலைவர்கள், ஜெயலலிதா, பிரேமதாசா, இஸ்ரேலின் மொசார்ட், அமெரிக்காவின் சிஐஏ-வுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறது. நன்கு கவனிக்கவும்.. அதற்கான யூகங்களைத் தருகிறது; ஆதாரங்களை அல்ல. அதுமட்டுமல்ல, கொலைச்சதியிலிருந்து புலிகளையோ, கைது செய்யப்பட்ட 26 தமிழர்களையோ அது விடுவிக்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இராஜீவ் கொலைச் சதியில் சர்வதேச நாடுகளின் பங்கு குறித்தும், காங்கிரஸ் தலைவர்களோ, ஜெயலலிதாவோ ராஜீவுடன் இல்லாதது குறித்தும் தமிழகத்தில் நிறைய பேசியும், எழுதியும் ஆகிவிட்டது. தோழர் விடுதலை இராசேந்திரனின் ‘இராஜீவ் கொலை – மறைக்கப்பட்ட உண்மைகள்’ புத்தகம் தொடங்கி தமிழன் எக்ஸ்பிரஸ், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நந்தன், நக்கீரன் – ஏன் காலச்சுவடு உட்பட பல்வேறு பத்திரிக்கைகளில் இச்செய்திகளும் கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. இராஜீவ் கொலை வழக்கு நிதி சேகரிப்பு தொடர்பாக அய்யா பழ.நெடுமாறன் தலைமையில் ஈழ ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தி பேசியிருக்கிறார்கள். என்னுடைய கல்லூரி படிப்பின்போது வள்ளியூரில் அப்படி நடந்த ஒரு கூட்டத்தில் பழ.நெடுமாறன் இந்த செய்திகளை பேசக் கேட்டிருக்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கால்மணி நேரம் இணையத்தில் தேடியதிலேயே இதுதொடர்பான சில தரவுகளைப் பெற முடிந்தது. அவற்றில் சில:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மாவீரன் முத்துக்குமார் தனது மரண சாசனத்தில் (&lt;a href="http://www.keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;act=section&amp;amp;id=4110&amp;amp;Itemid=139"&gt;&lt;span style="color: blue;"&gt;http://www.keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;act=section&amp;amp;id=4110&amp;amp;Itemid=139&lt;/span&gt;&lt;/a&gt;) “ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கப் போகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.” என்றும், “ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.” என்றும் எழுதியுள்ளார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 19, 1997 இதழில் சுதாங்கன் “ராஜீவ் கொலை ஒரு வி.ஐ.பி.யின் மரணம் மட்டும் அல்ல; தேசத்தை சிதறச் செய்யும் மிகப் பெரிய சதி. பல அந்நிய சக்திகள் இந்தப் பரந்த தேசத்தைக் காட்டியாள நினைக்கும் தந்திரம்.” என்றும் “வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?” என்றும் “காமினி திசநாயகா, அதுலத் முதலி, விக்கிரம சிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்டபோது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?” என்றும் எழுதியிருந்தார். (&lt;a href="http://sudhangan.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" rel="bookmark" title="விடை தெரியாத புதிர்கள்"&gt;&lt;span style="color: blue;"&gt;விடை தெரியாத புதிர்கள்&lt;/span&gt;&lt;/a&gt; - சுதாங்கன்)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காலச்சுவடில் புலிகளுக்கு எதிரான கண்ணனின் கட்டுரைக்கு வந்த எதிர்வினையில் (&lt;a href="http://www.kalachuvadu.com/issue-109/page118.asp"&gt;&lt;span style="color: blue;"&gt;http://www.kalachuvadu.com/issue-109/page118.asp&lt;/span&gt;&lt;/a&gt;) மலரவன் என்பவர் ‘ராஜீவ் காந்தி கொலை ஒரு கோணத்தில் மட்டும் விசாரிக்கப்பட்டு, ஒரு தரப்பினர் மட்டும் குற்றவாளிகளாக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டும்விட்டனர். உண்மையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும்தான் இந்த நிகழ்விற்குக் காரணமா? விசாரணையின் எல்லை காங்கிரசுகாரர்கள், அதிகாரவர்க்கம் அமெரிக்க சிஐஏ என்று இன்னும் கொஞ்சம் விரிந்திருந்தால் உண்மை வெளிப்பட்டிருக்கும்.’ என்று எழுதியிருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பலர் பேசியும் எழுதியும் வந்த செய்தியைத்தான் இந்திய உளவுத்துறை குறிப்புகளோடு இந்தப் புத்தகம் சில பக்கங்களில் பேசுகிறது. பெரும்பான்மையான பக்கங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், கொலை வழக்கில் கைதானவர்களுக்கு எதிராகவும் பேசுகிறது. உச்ச நிதிமன்றம் நிரபாரதிகள் என விடுவித்த 19 பேரையும் குற்றவாளிகள் என்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க இந்தப் புத்தகம் எப்படி உதவி செய்யப் போகிறது? அவர்கள் அப்பாவிகள் என்பதையோ, அவர்கள் மீதான வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பதையோ இப்புத்தகம் எங்கேயாவது பேசுகிறதா? அவர்களை வழக்கிலிருந்து விடுவிப்பதற்கான சிறுமுகாந்திரத்தையாவது அளிக்கிறதா? சிஐஏ தொடர்பு குறித்து இந்தப் புத்தகம் பேசுவதால், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு விடுதலை கிடைத்துவிடுமா? அமெரிக்காவின் விசுவாசமான அடிமையாகிவிட்ட இந்தியா, சிஐஏவுக்கு எதிராக சிறுதுரும்பையாவது அசைக்க சம்மதிக்குமா? சிஐஏ மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காங்கிரஸ் அரசோ அல்லது வேறெந்த அரசோ அனுமதி அளிக்குமா? அதற்குப் பதிலாக ஒட்டுமொத்த தமிழர்களையும் கொல்வதற்குக் கூட இந்திய அரசு தயங்காது என்பதேதானே யதார்த்தம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நூல் வெளியீட்டு விழாவில், இராஜீவ் கொலை வழக்கில் தமிழர்கள் மீது வட இந்தியர்கள் குற்றம்சாட்டும்போது பதில் சொல்ல நம்மிடம் தரவுகள் இல்லை என்று மொழிபெயர்ப்பாளர் தோழர் ஆனந்த்ராஜ் பேசினார். அது வாசிப்பின் போதாமையைக் காட்டுகிறதா இல்லை அல்லது தமிழர்கள் நம்மிடையே எப்போதுமிருக்கும் தாழ்வு மனப்பான்மையைக் குறிக்கிறதா எனத் தெரியவில்லை. இந்தப் புத்தகம் தமிழர்களை எங்கேயாவது விடுவித்திருக்கிறதா? முன்னிலும் மோசமாக அல்லவா சித்தரிக்கிறது? எந்த அரசியலும் தெரியாத ஒரு புதிய வாசகர் இந்தப் புத்தகத்தைப் படித்தால், 'இராஜீவ் காந்தி இந்தியாவை வல்லரசாக்க வந்த உத்தமர். அதை விரும்பாத அந்நிய சக்திகளுடன் சேர்ந்து காசுக்கு ஆசைப்பட்டு புலிகள் இந்தக் கொலையை செய்துவிட்டார்கள். புலிகள் மோசமானவர்கள். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லோரும் உண்மைக் குற்றவாளிகள்' என்ற சித்திரம்தானே எழும்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வட இந்தியர்களிடம் இந்தப் புத்தகத்தைக் காட்டி, நம் ஆட்களையே குற்றவாளியாக்குவதை விட, இராஜீவ் காந்தி ஆறாயிரம் தமிழர்களைக் கொன்ற ஒரு அயோக்கியன் என்று சொல்வதும், '&lt;span style="color: blue;"&gt;&lt;a href="http://www.keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=2009:2010-01-17-06-24-53&amp;amp;catid=25:tamilnadu&amp;amp;Itemid=137" target="_blank"&gt;&lt;span style="color: blue;"&gt;இது கொலையல்ல, மரண தண்டணை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;' என்று தோழர் கொளத்தூர் மணி போல் உரக்கச் சொல்வதும், இந்த வழக்கில் எப்படி அப்பாவிகள் சிக்க வைக்கப்பட்டிருப்பார்கள் என்று விளங்கவைப்பதும்தான் சரியானது. அதற்கான தரவுகள் தமிழில் ஏராளமாக இருக்கின்றன. தோழர்கள் விடுதலை இராசேந்திரன், புகழேந்தி, பூங்குழலி உதவியுடன் ஆனந்த்ராஜ் 3 அல்லது 4 மாதங்கள் முயற்சித்தால் ஆங்கிலத்தில் அருமையானதொரு புத்தகத்தைக் கொண்டுவரலாம். அதைவிடுத்து, 26 பேருக்கும் பாதகமான இந்தப் புத்தகத்தை சிங்களத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப் போகிறேன் என்று தோழர் அச்சுறுத்துவது அழகல்ல…&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விடுதலைப் புலிகளை மிகமிக திறமைசாலிகளாக தான் சித்தரித்த‌தாக கூறுவதன் மூலம், அவர்களை பயங்கரவாதிகளாக, கூலியாட்களாக சித்தரித்ததை சமப்ப‌டுத்தப் பார்க்கிறார் ராஜீவ் சர்மா. போராளிகள் மீது சேறடிப்பதன் மூலம் மறைமுகமாக போராட்டத்தின் நியாயத்தை மறுக்கும் கேடுகெட்ட அரசியலைத்தான் அவர் செய்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ராஜீவ் சர்மா எழுதுகிறார்:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="padding-left: 30px; text-align: justify;"&gt;“…எனது இந்தியா உயர்ந்தது (மேரா பாரத் மஹான் – My India is great) என்ற வாசகத்தைக் கொடுத்த முன்னாள் பிரதமர் இறந்துவிட்டார். ஆனால், இந்தியாவின் கௌரவம் நிலைகுலைந்தது. 1992 மே 22 அன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக பிரபாகரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பிரபாகரன் எங்கே? அவர் இப்பொழுதும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட கொரில்லா ராணுவத்திற்குக் கட்டளையிட்டுக் கொண்டு ராஜாவைப் போல இருக்கிறார். ஏன் பிரபாகரனைப் பிடிப்பதற்காகத் தாக்குதல் நடவடிக்கை திட்டமிடப்பட முடியாது? ஈராக்கின் உள்ளே நுழைந்து ஈராக்கின் அணு உலைகளை அழித்து பாதுகாப்பாகத் திரும்பும் போர்விமானங்களை இஸ்ரேல் போன்ற சிறிய நாடுகள் அனுப்பும்பொழுது இந்தியாவின் அருகில் இருந்துகொண்டு இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மிரட்டல் விடுக்கும் தீவிரவாத இயக்கத்தின் தலைவரைப் பிடிக்க ஏன் புதுதில்லி தைரியமான வெளிப்படையான தாக்குதலைத் துவங்கக்கூடாது?..”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மீண்டும் ஒரு இந்தியப் படையை ஈழத்திற்கு அனுப்பி, தமிழர்களைக் கொல்ல இந்திய அரசுக்கு 1998ல் யோசனை தந்திருக்கிறான் இந்த ராஜீவ் சர்மா (இந்த நாய்க்கு இனி என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது?). ஈழ ஆதரவாளர்கள் நிரம்பியிருந்த அவையில் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுவிட்டு, பத்திரமாக திரும்பியுமிருக்கிறான். நமது ஜனநாயகத்தன்மையில் நீடிக்கிறது எதிரிகளின் உயிர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யார் இந்த ராஜீவ் சர்மா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிபிஐ வசம் இருந்த இராஜீவ் கொலை வழக்கு தொடர்பான ரகசிய ஆவணங்கள் இவனுக்கு எப்படி கிடைத்தது?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சித்திரவதைகள் மூலம் அப்பாவிகளை குற்றவாளியாக்கிய சிபிஐ‍-ன் முறைகேடான விசாரணைகள் குறித்து இப்புத்தகம் மௌனம் சாதிப்பதேன்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;திரைப்படங்களில் நேர்மையானவர்களாகவும், திறமைசாலிகளாவும் காட்டப்படுவதுபோல், இந்தப் புத்தகத்தில் சிபிஐ அதிகாரிகளை காட்ட வேண்டிய அவசியம் ராஜீவ் சர்மாவுக்கு ஏன் வந்தது?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கொலை வழக்கு விசாரணையின்போது சிபிஐ இயக்குனராக இருந்த விஜயகரன் இந்தப் புத்தகத்திற்கு எப்படி முன்னுரை எழுதினார்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிபிஐக்கும், ராஜீவ் சர்மாவுக்கும் இடையேயான தொடர்பு என்ன?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழகப் பத்திரிக்கையாளர்களை அம்பலப்படுத்தியதுபோல், இந்த ‘யோக்கிய சிகாமணி’ ராஜீவ் சர்மாவையும் தோலுரித்துக் காட்ட வேண்டிய‌ அவசியம் தோழர் சவுக்குக்கு இருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழினத்திற்கோ, தமிழர்களுக்கோ பயனளிக்கும் வகையில் – ஒரு குண்டுமணி அளவிற்குக்கூட புதிய செய்தியைக் கொண்டுவராத இந்தப் புத்தகம் யாருக்குப் பயன்படப் போகிறது? சோ.ராமசாமி, வாசந்தி, அ.மார்க்ஸ், ஜெயமோகன் கும்பலுக்குத்தான்.. இந்திய வல்லாதிக்கத்தின் குரலை ஊடகங்களில் பரப்பிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு லட்டு மாதிரியான செய்திகள் இதில் இருக்கின்றன. அவர்கள் அடுத்து எழுதும் கட்டுரைகளின் பின்னிணைப்புகளில் 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -‍ ராஜீவ் கொலைப் பின்னணி, சவுக்கு வெளியீடு’ என்பதும் இடம்பெற்றால் அதற்கு யாரும் ஆச்சரியம் கொள்ளத் தேவையில்லை. அதற்கான முழுத்தகுதியும் இப்புத்தகத்திற்கு உள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;- &lt;strong&gt;கீற்று நந்தன்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4778918875738452370-1479058429893962100?l=raavanaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/1479058429893962100'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/1479058429893962100'/><link rel='alternate' type='text/html' href='http://raavanaa.blogspot.com/2011/06/blog-post_10.html' title='மாற்றான் தோட்டத்து மலர்'/><author><name>ராவணா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-kV5U-vXNY-w/TfL44Jyg4TI/AAAAAAAAACw/IbCg3tYesHg/s72-c/248316_108532619235947_100002376296324_85989_296823_n.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4778918875738452370.post-7926820655776923712</id><published>2011-06-09T21:07:00.000-07:00</published><updated>2011-06-09T21:11:13.629-07:00</updated><title type='text'>மாற்றான் தோட்டத்து மலர்........................</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-oYC_hb2U2NA/TfGYbItbAZI/AAAAAAAAACs/PQgiCuTJhHY/s1600/seeman7.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-oYC_hb2U2NA/TfGYbItbAZI/AAAAAAAAACs/PQgiCuTJhHY/s1600/seeman7.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="color: green;"&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;&lt;span style="color: black; font-family: Arial;"&gt;இருப்பாய்  தமிழா நெருப்பாய்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify" style="font-size: 8.5pt;"&gt;&lt;span style="font-family: Arial;"&gt;&lt;strong&gt;(குமுதம்  இதழுக்காக சீமான் எழுதும் விறுவிறுப்பு அதிரடித் தொடர்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="சீமான்" class="alignleft size-full wp-image-19880" height="278" src="http://valampurii.speeditnet.com/online/wp-content/uploads/2011/06/seeman7.jpg" title="சீமான்" width="250" /&gt;சீமான் இப்போது ‘நாம் தமிழர்’ அமைப்பை கட்டமைக்கும் வேலைகளில்  தீவிரமாக இருக்கிறார். நடிகர் விஜயை இயக்கும் ‘பகலவன்’ பட வேலைகளும் அவரை பரபரவென  சுழற்றி வருகிறது. இதற்கிடையில் குமுதம் வாசகர்களுக்காக சீமான் எழுதும் பரபரப்புத்  தொடர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மாதம் 13ஆம் திகதி அதிகாலை இரண்டு மணிவரை உறக்கம் இல்லை.  புரண்டு புரண்டு படுக்கிறேன். இத்தனைக்கும் முதல் நாள் களைப்பில் படுக்கையில்  விழுந்த கணமே நான் உறங்கியிருக்க வேண்டும். அசதியோ, களைப்போ என் கண்களில் தூக்கத்தை  வார்க்கவில்லை. படுக்கையில் இருந்து எழுந்து என் அலுவலக மாடியில் இருக்கும் தனி  அறைக்குப் போகிறேன். ‘யாரு?.’ என அதட்டுகிறது பாதுகாப்பாகப் படுத்திருக்கும்  தம்பியின் குரல். அருகே வந்து முகம் பார்த்து, ‘அண்ணே, தூக்கம் வரலியா?’ என்கிறான்  அந்தத் தம்பி. ‘இந்த அண்ணனுக்கு ஏதும் ஆகிடுமோன்னு நீ எப்படி உறங்காமல்  கிடக்குறியோ... அதே மாதிரி இத்தனை நாள் அடை காத்த கனவுக்கு ஏதும் ஆகிடுமோன்னு  பதற்றமா இருக்குப்பா...’ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கவலை, கண்ணீர், ஏக்கம், எதிர்பார்ப்பு,  வெற்றி, வீம்பு எதுவானாலும் அதனை நான் இறக்கி வைக்கும் இடம் என் அலுவலகத்தின்  மாடியிலுள்ள தனியறைதான். மாவீரனாய் என் அண்ணன் அந்த அறையில் சிரித்துக்  கொண்டிருப்பான். அவன் ஈழத்தில் எப்படி மரங்களாலும் கூரைகளாலும் அறை  அமைத்திருந்தானோ... அதேபோலத்தான் என் தனி அறையையும் அமைத்திருந்தேன். என் ஆழ்மன  ஆங்காரத்தைப் போலவே என் அறையையொட்டிப் படர்ந்திருந்த மாமரம் பெருங்காற்றில்  இரைச்சலோடு அசைந்தது. அண்ணனின் முகத்தில் இருக்கும் சிரிப்பு ஆயிரம் அர்த்தங்களைக்  கொண்டது. வெற்றி என்றால் நெற்றி வியர்வையைப் போல சுண்டி எறியவும், தோல்வி என்றால்  தோளில் சுமக்கவும் கற்றறிந்த சிரிப்பு அது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன் எவ்வளவு பெரிய அசாத்தியன்  என்பது அவன் முன்னால் சிறு உயிரியைப் போல் நான் சில்லிட்டுக் கிடக்கிறேன் என்பது  அப்போதுதான் புரிந்தது. ‘உனக்கான கடமையை நீ செய்து விட்டாய். விளைவு என்னவாக  இருந்தாலும் எதிர்கொள்!’ மனதுக்குள் அண்ணன் தைரியம் வார்ப்பது  போலிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு மரக்கட்டைகளை அடுக்கிச் செய்யப்பட்ட இருக்கையில்  அமர்கிறேன். அதுதான் என் சிம்மாசனம். எனக்கு மிக நெருங்கிய பத்திரிகையாளர் தம்பி  ஒருவரை அலைபேசியில் அழைக்கிறேன். “என்னண்ணே... இந்த  நேரத்தில்?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஒண்ணுமில்லப்பா... இன்னிக்கு தேர்தல் முடிவு. நான் மட்டும்  இல்லை ஆயிரமாயிரம் அண்ணன் தம்பிங்க உக்கிரமும் ஒப்பாரியுமா கதறியிருக்கோம். இதையும்  மீறி காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வென்றாலும் நமக்கு அவமானம்டா தம்பி. அதான்  இருப்புக் கொள்ளலை” பெருவலியோடு பிரசவத்துக்குத் துடிக்கும் ஒரு தாயைப் போல் என்  காத்திருப்பைச் சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்முனையில் சத்தம் போட்டுச் சிரித்த அந்த  தம்பி, “கருணாநிதி, ஜெயலலிதா கூட இந்த நேரத்தில் நிம்மதியா தூங்கிட்டு இருப்பாங்க.  உங்க அளவுக்கு பதற்றமா இருக்க மாட்டாங்க. நிம்மதியா படுங்கண்ணே...” என்கிறான்.  தொடர்பைத் துண்டிக்கும் வரை அவனுடைய சிரிப்புச் சத்தம் கேட்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணனின்  சிரிப்பும் என் அன்பு மாமரத்தின் அசைவும் என்னை மர நாற்காலியிலேயே உறங்க  வைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;“அண்ணே...”&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு மணி வரை விழித்திருந்தவன் எப்படி கண்  அசந்தேன்? மணிகாலை 7.30 குளித்துவிட்டு தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்கிறேன்.  தம்பிகள் புடை சூழ நிற்கிறார்கள். 8, 9, 10 என கடிகார முட்கள் சுழலச் சுழலத்தான்  எனக்கொரு உண்மை புரிந்தது. நான் மட்டும் அல்ல நாடி நரம்புகளில் தமிழன் என்கிற  அடையாளத்தைச் சுமக்கும் அத்தனை பேரும் இன்றைய விடியலுக்காக தவிப்போடுதான்  காத்திருந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதிமதக் கூறுகளைக் கூறுபோட்டு விட்டு தமிழன்  என்கிற சங்கிலிக்குள் ஒன்று திரண்டு காங்கிரஸின் சங்கறுக்க எல்லோரும்  காத்திருந்தார்கள் என்பதுதான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்து முடிந்தது எல்லோருக்கும்  தேர்தல் களம்; ஆனால் நமக்கு அது யுத்தகளம். நாம் வீழ்த்தியது காங்கிரஸ் என்கிற  கட்சியை அல்ல. ஆண்டாண்டு காலமாக தமிழனின் தலையில் மிதித்த கொடூர சக்தியை.  காங்கிரஸின் செவிட்டில் அறைய அப்போதே தடி எடுத்தவர் தந்தை பெரியார். ‘காங்கிரஸ் ஒரு  நாசகார சக்தி’ எனச் சொல்லி வேரறுக்க கங்கணம் கட்டியவர் அண்ணல் அம்பேத்கர்.  தேசத்துக்கு விடியலை வாங்கித் தந்த அண்ணல் காந்தியே ‘காங்கிரஸ் இனியும் தொடர்வது  நாட்டுக்கு நல்லது அல்ல?’ என்றுதான் முழங்கினார். பேரறிஞர் அண்ணா காங்கிரஸை  ஒழிப்பதையே கனவாகக் கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அண்ணாவின் தம்பிகள் அதே காங்கிரஸுடன்  கைகுலுக்கி நின்றார்கள். அண்ணாவின் தம்பிகள் செய்யத் தவறியதை அண்ணாவின்  பேரப்பிள்ளைகள் இந்த அன்னை மண்ணில் நிகழ்த்திக் காட்டி இருக்கிறோம். சின்னத்தைத்  தூக்கி வீசிவிட்டு எண்ணத்தில் ஒருமித்து நின்றதால்தான் இந்த வெற்றி!&lt;br /&gt;&lt;br /&gt;பணத்தை  வீசினால் இனத்தைக் காட்டிக்கொடுக்கவும் தயங்க மாட்டார்கள் என தமிழர்களைத்  தரக்குறைவாக நினைத்தவர்களுக்கான தண்டனை. உறவுகளைக் கருவறுத்தவர்களின் முகத்தில்  நாங்கள் உமிழ்ந்த எச்சில்! கையறு நிலையில் கதறியவர்கள், வெறும் விரல்களாலேயே  வீழ்த்திக் காட்டிய விந்தை! மொத்தத்தில் சாதுவின் மிரட்சி... சாய்க்கப்பட்டவர்களின்  புரட்சி!&lt;br /&gt;&lt;br /&gt;முதல் சுற்றிலேயே எதிரியின் முகத்தைப் பிளந்துவிட்டோம் உறவுகளே.  காயங்களையும் தழும்புகளையும் மட்டுமே தாங்கி வளர்ந்தவர்கள் முதல்முறையாய் திருப்பி  அடித்திருக்கிறோம். தமிழனின் சக்தி உச்சந்தலை ஆணியாய் காங்கிரஸை உலுக்கி இருக்கும்  நிலையில் உங்களோடு நிறையப் பேச நினைக்கிறேன் உறவுகளே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் அண்ணன்  காசி ஆனந்தனின் வரிகள் என் நெஞ்சுக்குள் உருமியாய் முழங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பாய்  தமிழா நெருப்பாய்!&lt;br /&gt;இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!&lt;br /&gt;கைவிலங்கு நீ  சுமந்தாய் இதற்கோடா&lt;br /&gt;கருவில் உன்னைத் தாய் சுமந்தாள்? - இனப்போர்&lt;br /&gt;செய்யக் களம்  வாடா, கொடுமை தூள்படும்&lt;br /&gt;சிறுத்தை உன் கண்கள் சிவந்தால்!&lt;br /&gt;‘இருப்பாய் தமிழா  நெருப்பாய்’&lt;br /&gt;&lt;br /&gt;என்கிற வார்த்தைகளை என் தொடருக்குத் தலைப்பாக வைத்திருப்பது ஏன்  தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்பு ஒன்றுதான் எதனோடு சேர்ந்தாலும் அதன் சுயத்தை இழக்காமல்  இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சுக்கூட்டுக்கு நெருப்பு வைத்து மரித்த தமிழர்களின்  வயிற்றில் தரித்த தமிழர்களாக நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. நெருப்பாய்  தகிக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(பொறி பறக்கும்)&lt;/strong&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: Arial;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4778918875738452370-7926820655776923712?l=raavanaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/7926820655776923712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/7926820655776923712'/><link rel='alternate' type='text/html' href='http://raavanaa.blogspot.com/2011/06/blog-post_09.html' title='மாற்றான் தோட்டத்து மலர்........................'/><author><name>ராவணா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-oYC_hb2U2NA/TfGYbItbAZI/AAAAAAAAACs/PQgiCuTJhHY/s72-c/seeman7.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4778918875738452370.post-3175959938745432224</id><published>2011-06-05T22:15:00.000-07:00</published><updated>2011-06-05T22:22:18.024-07:00</updated><title type='text'>அன்புள்ள ரயினிகாந்த் ...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-VsJphnasSUc/TexjfW-Fb-I/AAAAAAAAACo/Hs45SY9fPQs/s1600/rajinikanth-wallpaper.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-VsJphnasSUc/TexjfW-Fb-I/AAAAAAAAACo/Hs45SY9fPQs/s320/rajinikanth-wallpaper.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அன்புள்ள ரயினிகாந்த் ...&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;நீங்கள் நலமடைய வேண்டும், &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;நீங்கள் ஒரு  சிறந்த  நடிகன் அதுமட்டுமே  மனதில் உண்டு, மக்கள் திலகத்தையோ  ,   நமது நடிகர் திலகத்தையோ  தொட்டுவிட வில்லை என்பது உங்கள் ரசிகர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தெரியும், அந்த   இடங்களை நீங்கள்  இந்த சினிமா முலம் தொட முடியாது என்பதும் உங்களுக்கு தெரியம், அவர்களுக்கு தமிழ் மக்கள் கொடுத்திருக்கும் நிலைவேறு  அது யாராலும்   எட்ட முடியாதவை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதுபோல தமிழன் எவரையம் தூக்கி வைத்து கொண்டாடுவான், அது தமிழனாக இருந்தாலும் சரி , வேறு மொழிக்காரர இருந்தாலும் சரி , ஆனால் தமிழருக்கு  துரோகமோ , இல்ல தமிழர்கள் மீது சவாரி செய்ய நினைத்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்பதை இந்த தேர்தல்  உணர்த்தி இருக்கும்  என நாம் நினைக்குறோம், தன்னைத்தானே உலக தமிழ் இனத்தலைவன் என கூறிக்கொண்ட    கருணாநிதிக்கு நடந்த நிலை இன்று யாவரும் அறிந்ததே.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ரயினிகாந்த  என்ற நடிகனாக பார்க்கும்  போது அந்த "முள்ளும் மலரும் ,  ஆறில் இருந்து அறுபதுவரை", என்பன மட்டுமே  என்னை   கவர்ந்திருந்தன , இயக்கியவரின் திறனும், உங்கள் நடிப்பும் தமிழ் திறப்படதுரையினை மேலும் மெருகூட்டியது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பல தடுமாற்றங்கள் ?&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஈழ பிரச்னைக்கு  காந்திய வளிதான்  சமாதானத்தை கொண்டுவரும் என்று &lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ரந்தம் செறிந்த போராட்டத்தை  கொச்சைப்படுத்தி  புராணக்கதை பேசியது  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சில நூல்களை படித்துவிட்டு  தெளிவில்லாத நிலைப்பாட்டை ஈழ விடுதலைப் போராட்டதின்மேல்   வைத்திருப்பது  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;வீரப்பன் இறந்தபோது நரகாசூரன் அழிந்தான்  என்று அறிக்கை விட்டது,  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;காவிரி   பிரச்சினையில்     வாய் திறக்காதது, &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒகேனக்கலில் தடுமாறியது&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;உங்கள் சினிமா மூலம் அதி மூட நம்பிக்கைகளை பரப்புவது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த கசப்பான உங்கள் நடவடிக்கைகள் உங்களை தலைவன்  என  கூறும் ரசிகர்களுக்கு தெரியாமலோ இல்ல, அவர்கள் அறிவுக்கு எட்டாமலோ  இருந்திருக்கலாம் ,  ஆனால்  நம்மை போன்ற சிலரை  வெகுவாக பதித்தது உண்டு,  நீங்கள்  நடிகனாக மட்டும் இருந்திருந்தால் இந்த கேள்விகள் பிறந்திருக்காது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;வந்தாரை வாழ வைக்கும் தமிழ் இனத்துக்கு மட்டும் என் இந்த நிலை என்பது இன்னும் நமக்கு புரியவில்ல, தமிழர்கள்  அவ்வளவு அகிம்சா வாதிலலோ    என்று நினைக்க தோன்றுகிறது, நீங்கள் தமிழ் நாட்டிருக்கு வராமல் கர்நாடாகவிலேயே இருந்த்திருந்தால் இந்த  இரட்டை நிலைப்பாட்டை எடிதிருக்கவோ, இல்ல இப்படி கன்னடர்களுக்கு எதிராகவோ செயர்ப்பட்டிருக்க முடியுமா? இல்ல இந்தியாவின் வேறு எந்த  மாநிலதிலையாவது  , வேறு மாநில காரர்கள் அந்த மாநிலத்தில பிழைப்பு நடத்திக்கொண்டு  அதேமாநிலத்தவர்களை  எதிரிகளாக பார்ப்பது, அவர்களுக்கு  எதராக   செயற்படுவது இவை   முடியுமா? உலகத்தில் இவை  எங்காவது நடக்குமா? இல்ல உலகத்தில் ஒரே ஒரு இடத்தில் தான்   இப்படி  நடக்கும் , நமது தமிழ் நாட்டில்  மட்டும் தான், என்  எனில்  தமிழர்கள் மட்டும் தான்  இளிச்ச  வாயர்கள் அதனால் தான், ராம் களும் சோ  க்களும்  நமது சோத்தை தின்னுபுட்டு நமக்கே அரிவாள் தீட்டி  கொண்டு இருக்குறதை நினைக்கும் போது? உலகத்திலேயே   தமிழன் தான்    இளிச்சவாயன், தமிழ் நாடில் தான்  யனனாயகம்  வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் இருக்க வேண்டும் என்பதும் நியதி, அப்படி கேள்விகேட்டால் தமிழன் பயங்கரவாதியும், தீவிரவாதியும் ஆக்கப்படுகுறான், &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஈழப் போர் உச்ச கட்டத்தை அடைந்தபோது நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த நீங்கள்  கொதிப்படைந்தபோது  போது , நாமும்   குளிர்ப்படைந்த்தோம்   ஆனால்&lt;strong&gt;  அசித்குமார்&lt;/strong&gt; பேசியதற்கு அதரவு சொன்னதால் நாங்கள் கொதிப்படைந்தோம், தமிழர்கள்   உங்களுக்கு இந்திரன் படம் மூலம் உலக உச்சத்தை தொடும்  வாய்ப்பை  தந்தார்கள் , ஆனால் நீங்கள் தமிழர்களின் உச்ச மனங்களை தொடவில்லை இன்னும் என்பது உங்களுக்கு தெரியம், அதுதான் நீங்கள் இன்றுவரை நான் நன்றி கடனாக  தமிழ் உலகத்திற்கு  ஏதாவது செய்ய வேணும்  என்று  கூறிவருவது  காட்டுகிறது,  &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;தற்போது நீங்கள் மிகவும் உடல் நலக் குறைவால் பதிக்க பட்டு இருப்தாக தினமும் தகவல்கள், உங்களுக்காக் உங்கள் சக நடிகர்கள்,  சினீமா துறை சார்ந்தவர்கள் உங்கள் ரசிகர்கள் , தமிழ் மக்கள் பிரார்த்தனைகள் யாகங்கள் என்று என்ன என்னமோ பண்ணுகிறார்கள் அதைப் பார்த்து நீங்களே  நேகுழ்ந்த்துருகி  விட்டேன்  விரைவில் நலமுடன் திரும்புவேன் என்று கூறி சிங்கபோர்  சென்றுள்ளீர்கள்.   இவ்வரவை  முழு தமிழ் உலகமுமே எதிர்பார்த்து காத்திருக்கும்,&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழர்களுக்காக எதை செய்ய போகுறீர்கள் ? &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஈழப்ப போராட்டத்தில உலகநாடுகள் கூடி, இந்தியா  எல்லா வளங்களையும் அளிக்குடுக்க உங்கள் கண் முன்னாள் பல ஆயிரக்கணக்கான்  மக்கள் கொன்று குவிக்க பட்டார்கள்,  இந்தியாவிற்காக ,  இந்தியா கொலை செய்கிற ஓர் காரனத்துர்காக உலகம் தனது சுய நல நோக்கதிற்காக வாய்பொத்தி , கைகட்டி வேடிக்கை  பார்த்தது ,  உலக  தமிழ் இன தலைவன் என்று தன்னை தானே கூறி  கொண்ட    கருணாநிதி  படுகொலையை கூட்டாக சேர்ந்து தான் இன ம மக்களையே கொன்றுகுவிக்க  உதவினான்.     வல்லமை  பொருந்திய  உங்களைபோல் மக்கள் பலன்கொண்டவர்களும் சுய நலம் காரணமாக கைகட்டி வேடிக்கை தான் பார்த்தீர்கள், என்  இனம்  கதறி கதறி துடி துடிக்க படுகொலை செயப்பட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதே மக்கள் பலம்  கொண்ட உங்களைப்போல் சிலரும் அற்ப சுயநல நோக்கத்திற்காக    இந்த படுகொலைக்கு உதவினீர்கள் , அன்று உங்கள் போல் மகள் பலம் படைத்தவர்கள் எலாம் வீதிக்கு இறங்கி  போராடியிருந்தால்  துரோகி கருணாநிதி இந்த படுகொலைக்கு  அதரவளித்திருப்பான? இல்லை உங்கள் இந்திய தேசம் தான் நம் இனம் கதற கதற படுகொலை செய்திருக்குமா?   இதன் காரணமாகத்தான் இன்று  தமிழ் மாக்களால்   துரோகிகளும், எதிரிகளும் துடைத்தேரியப்ட்டிருக்குரார்கள் தமிழ் நாட்டை விட்டு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;உகளுக்கு இவ்வளவு  உச்சத்தை தந்த  தமிழ்  மக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு தேவை மட்டும் தான்  இருக்குறது, அதுதான் "&lt;strong&gt;தமிழ் ஈழ விடுதலை"&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;தமிழீழ விடுதலைக்கு நீங்கள் உதவலாம்  இதுவே  நீங்கள் தமிழ் உலகத்துக்கு செய்யும்   மிக  சிறந்த நன்றிக்கடனாகும் ,  உன்மையான    தமிழ்   உணர் வாளர்கள் தமிழ்நாடில் இருக்குறார்கள், அவர்களுடன்  சேந்து   உங்கள்  மக்கள் வலுவும்  மிக அதிகமாகி தமிழ் நாடு அரசையும், இந்திய அரசையும் தமிழ் ஈழம் சம்பந்தமாக  தெளிவான முடிவை    மேற்கொள்ள  பண்ணலாம்,முதல் உங்களுக்கு தெளிவான் முடிபு வேணும் ஈழ விடுதலை போராட்டத்தில், அல்லது அதுவும் ஒகேனக்கல்  ஆகிவிடுமோ  என்ற எண்ணம் நமக்கு  வரக்கூடாது . இந்த மகத்தான பணியைவிட தமிழ் உலகத்திரிக்கு உங்களிடம் இருந்து எதுவும் தேவை இல்லை என நாம் நினைக்குறோம் , அதற்காக உங்களை ஆயிதம் ஏந்தி போராடவோ. இல்லை ஈழதுதுக்கு வந்து போராடவோ   நாம் கேக்கவில்லை, உங்களுக்கு விரும்பிய அதே அகிம்சை  பாதையில்    உங்கள் பணியை தொடரலாம், என்று தமிழ்நாடு எழிச்சி  பெறுகிறதோ  அன்று ஈழம் விடுதலை பெறும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழ் ஈழ விடுதலைப் போர் என்றால் அது பயங்கர வாதமாக உலகெங்கும் இந்திய அரசாலும், சிங்கள அரசாலும் சித்தரிக்க படுக்குறது. உலகிலேயே உண்மையான் பயங்கரவாத அரசென்றால் அது இன்றைய சோனியா அரசென்று உலகம் முழுமைக்கும் தெரியும் , இப்படியான மாயையில் இருந்து தெளிவு பெற வேணும் ஒரு விடுதலைப் போர் என்றால் அங்கெ  100 விகிதம்  சரியானவைகளையே  கடைப்பிடிக்க முடியாது , இது உலக வரலாறு சொல்லும் பாடம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழ் ஈழ விடுதலை என்பது  உன்மை , நிச்சயம், அது இயற்கையான முடிபு  அதை யாரும் தடுக்கவோ,  மறுக்கவோ  முடியாது,   ஆனால்  உங்களை போல  மக்கள்  வலுகொண்டவர்களால் விடுதலையை துரிதப்படுத்த முடியும் என்பதே நமது அவா, இதுவே உங்கள் முன் நிக்கும் தமிழருக்கான மகத்தான் தேவையாகும் , இந்த தேவையை விட உங்கள் மூலம  எதுவும்  பெரிதாக படாதென நான் நினைக்குறோம்,  உங்கள்  திரைப்பட வாழ்க்கைக்கு முழுக்கு போட்டு இப்பணியை  கையில்  எடுத்தால் உங்கள் பாதங்களுடன் பதினாறு  கோடி பாதங்கள் உங்கள் பின்னல் பயணிக்க காதிருன்குன்றன .&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்பணியை தவற  விட்டால்   &lt;/div&gt;&lt;div&gt;நீங்களும் பிழைப்பு நடந்திய ஒரு நடிகன் என வரலாறு கூறும் &lt;/div&gt;&lt;div&gt;இப்பணியை தேர்ந்தெடுத்தால் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்றுதான் நீயும்  தலைவன் என்று தமிழ்    உள்ளவரை போற்றும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;நன்றி &lt;/div&gt;&lt;div&gt;வாழ்க தமிழ் &lt;/div&gt;&lt;div&gt;மீண்டும் &lt;/div&gt;&lt;div&gt;ராவணன் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4778918875738452370-3175959938745432224?l=raavanaa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://facebook.com' title='அன்புள்ள ரயினிகாந்த் ...'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/3175959938745432224'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4778918875738452370/posts/default/3175959938745432224'/><link rel='alternate' type='text/html' href='http://raavanaa.blogspot.com/2011/06/blog-post_05.html' title='அன்புள்ள ரயினிகாந்த் ...'/><author><name>ராவணா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-VsJphnasSUc/TexjfW-Fb-I/AAAAAAAAACo/Hs45SY9fPQs/s72-c/rajinikanth-wallpaper.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4778918875738452370.post-1094511822259255703</id><published>2011-05-28T21:52:00.000-07:00</published><updated>2011-05-28T21:52:07.418-07:00</updated><title type='text'>என் குரலைக் கேளுங்கள்  பேரறிவாளன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;em&gt;&lt;strong&gt;நீதியின் கண்களை திறக்க முற்படும் நம் அன்புத் தம்பி பேரறிவாளனின் நியாயக்குரல்……&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;h2&gt;என் குரலைக் கேளுங்கள்&lt;/h2&gt;&lt;strong&gt;பேரறிவாளன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://pamaran.files.wordpress.com/2011/05/perarivalan_350.jpg"&gt;&lt;img alt="" class="aligncenter size-full wp-image-610" height="222" src="http://pamaran.files.wordpress.com/2011/05/perarivalan_350.jpg?w=250&amp;amp;h=222" title="perarivalan_350" width="250" /&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“&lt;/strong&gt;&lt;strong&gt;அனைவருமே &lt;/strong&gt;&lt;strong&gt;எதிர்த்து &lt;/strong&gt;&lt;strong&gt;நின்றாலும்&lt;/strong&gt;&lt;strong&gt;சரியானவை &lt;/strong&gt;&lt;strong&gt;சரியானவையே; &lt;/strong&gt;&lt;strong&gt;அனைவருமே &lt;/strong&gt;&lt;strong&gt;ஆதரித்து &lt;/strong&gt;&lt;strong&gt;நின்றாலும் &lt;/strong&gt;&lt;strong&gt;பிழையானவை &lt;/strong&gt;&lt;strong&gt;பிழையானவையே”&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை வெல்ல வேண்டுமென போராடி நான் தோல்வியுற்று விழும் ஒவ்வொரு முறையும் வில்லியம் பென்னின் இந்தச் சொற்களை நினைத்தே மீண்டு எழுவதுண்டு. அதேநேரம் நான் எப்போதுமே உண்மையின் பக்கம் இருக்கிறேன் என்ற பெருமிதம் உண்டு.&lt;br /&gt;அன்புமிக்க மனிதநேய மாந்தரே! முதலில் உங்களிடம் என்னை நான் அறிமுகம் செய்து கொள்ளவேண்டும். எவ்வாறு அறிமுகம் செய்ய? பலநூறு பண்புமிக்க மாணவர்களை உருவாக்கிய ஓய்வுபெற்ற ஏழை பள்ளி தமிழாசிரியரின் ஒரே புதல்வன் என அறிமுகம் செய்து கொள்வதா அல்லது ஒழுக்கமும் மனிதநேயமும் வாழ்வின் இரு கண்கள் என அறிமுகம் செய்துகொள்வதா எனத் தெரியவில்லை. இவ்வாறெல்லாம் அறிமுகம் செய்துகொள்ள எனக்கு விருப்பம் இருந்தாலும் எனது விருப்பத்திற்கு மாறான அறிமுகம் ஒன்று என்மீது திணிக்கப்பட்டுள்ளது. அதுவே, ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தூக்குத் தண்டனை கைதி அ.ஞா. பேரறிவாளன். ஆம். இதுவே எனது இன்றைய தவிர்க்கமுடியாத அடையாளம்.&lt;br /&gt;20 ஆண்டுகளுக்கு முன்பு வரை உங்களைப்போலவே தெருக்களில் திரிந்த சாதாரண மனிதனை திடீரென பயங்கரவாதியாக, கொடூர கொலைகாரனாக சித்தரித்தது பேரவலமாகும். ஒரு தமிழனாகக் கூட அல்ல; ஒரு மனிதனாக சக மனிதர்கள் துன்பத்தில் உழல்வது கண்டு துடித்தெழுவதும் கொலைக்குற்றமாகிவிடும் என ஒரு நாளும் நான் எண்ணியதில்லை.&lt;br /&gt;உங்களுக்கு ஒன்றை வெளிப்படையாக நான் சொல்ல விரும்புகின்றேன். எனது வாழ்வின் எந்த நிலையிலும் ராஜிவ் காந்தியை மட்டுமல்ல; எந்த மனிதரையுமே கொல்ல கடமையாற்றியதும் இல்லை. அதுகுறித்து மனதளவில் கருதிப் பார்த்ததும் இல்லை. நான் நேசித்து ஏற்றுக்கொண்ட தந்தை பெரியார் தந்த சுயமரியாதை கொள்கையும் பார்ப்பன எதிர்ப்பும் என்னை கொலைகாரனாக சித்தரிக்க ஆதிக்கச் சக்திகளுக்குக் கிடைத்த முதல் ஆயுதம் எனில் தொப்புள் கொடி உறவாம் ஈழத்தமிழினம் மேற்கொண்ட தற்காப்புப் போர்மீது கொண்ட  என் தீராப்பற்று அடுத்த காரணமாயிற்று.&lt;br /&gt;மின்னணுவியல்  மற்றும்  தகவல் தொடர்பியலில் பட்டயக்கல்வி ( Diploma in Electronics and Communication ) முடித்திருந்தேன் என்ற ஒரே காரணத்தால் புலனாய்வுத் துறையினரின் நெருக்கடிக்கு ஆட்பட்டு 19 வயதில் நான் ஒரு வெடிகுண்டு நிபுணராக செய்தி ஊடகங்களால் சித்திரிக்கப்பட்டேன். ஆனால் அந்த வெடிகுண்டு குறித்து இன்றுவரை புலனாய்வு செய்யவே முடியவில்லை என்கிறார் வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்து  ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரி கே. ரகோத்தமன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராஜிவ் கொலையில் கைது செய்யப்பட்ட 26 நபர்களில் 17 பேருக்கு ‘தடா’ சட்டத்தின்கீழ் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அந்த 17 ஒப்புதல் வாக்குமூலங்களையும் பதிவு செய்தவர் அப்போது நடுவண் புலனாய்வுத் துறையின் கொச்சி பிரிவு காவல் கண்காணிப்பாளர் தியாகராஜன். இவரது நம்பகத்தன்மையை விளக்க கேரளாவைச் சேர்ந்த அருட்சகோதரி அபயா கொலையுண்ட வழக்கு போதுமானது. 1993 ஆம் ஆண்டு நடந்த அபயா கொலையினை ‘தற்கொலை’  என முடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதால், அவருக்குக் கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் தாமஸ்வர்கிஸ் தனது பதவியையே துறந்தார். 16 ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு அக்கொலை வழக்கு துப்பறியப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு அருட்சகோதரியின் வழக்கிலேயே சிலரைக் காப்பாற்ற பொய்யான ஆவணங்களை தயார் செய்துள்ளார் எனில், ராஜிவ் கொலை போன்ற பெரிய வழக்கில் எவ்வாறெல்லாம் ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஆவணத்தை இவர் தயார் செய்திருப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;20 ஆண்டுகளுக்கு முன்னர் என்மீது பூசப்பட்ட கொலைகார சாயம் இன்று மெல்ல மெல்ல வெளுத்து வருகிறது. ஜெயின் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக்குழு மேற்கொள்ளும் விசாரணையின் முடிவில் இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரக்கூடும். விடுதலை பெற்ற இந்தியாவிலும் சரி, அதற்கு முன்னர்  அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவிலும் சரி, இதைவிட மனிதநேயத்திற்கு ஒவ்வாத சட்டமே இல்லை எனக் கூறும் அளவிற்கு கொண்டு வரப்பட்ட தடா எனும் கொடூரச் சட்டத்தின் துணைகொண்டு ஒரு
